Wednesday, September 14, 2011

வாழ்க்கை வசப்படும்

சில பொழுதாவது சோகப்படு,

ஆனந்தத்தின் அருமை புரியும்.

யாருக்காவது கண்ணீர் விடு,

புன்னகையின் பெருமை புரியும்.

ஒருநாளாவது பணமில்லாமல் ஊர்சுற்று,

வறுமையின் கொடுமை தெரியும்.

மாளிகைவிட்டு மண் குடிசைக்கு வா,

அன்றாடங்காய்ச்சியின் அழுகுரல் புரியும்.

மொழிபுரியாத தேசத்திற்க்குச் செல்,

கல்வியின் அவசியம் தெரியும்.

அன்பிற்குரியவர்களிடமிருந்து விலகிப்பார்,

மரணத்தின் வேதனை புரியும்.

குற்றவாளிகளின் கதறலைக் கேள்,

முன்கோபத்தின் பின்விளைவு புரியும்.

காலைப்பத்திரிகை விற்பனை பின்தொடர்,

வாழ்க்கையின் வேகம்தெரியும்.

கடற்கரையில் குடிநீர் விற்பனைக் கேள்,

வாழ்க்கையின் தாகம் புரியும்.

உழைக்கும் சிறுவர்களை சற்றுப்பார்,

வாழ்க்கையின் அச்சம் தெரியும்.

உயர்ந்தவர்களின் வரலாறு படி,

 வாழ்க்கையின் வலி புரியும்.


-- வலைபதிவிலிருந்து

No comments:

Post a Comment

You may also like