Thursday, January 20, 2011

ஞாபகம்

விட்டு விட நினைத்தாலும்
விரல் பிடித்து கூட வருகின்றது
உன் ஞாபகம்!

--எங்கேயோ படித்தது :)

Monday, January 17, 2011

லேடீஸ்.. ஆன்சர் மீ... (Ladies... Answer Me...)

1) வண்டில ஃப்ரண்ட் பிரேக், பேக் பிரேக்ன்னு ரெண்டு இருக்கும் போது (காலால) லெக்  பிரேக் போட்டு தட்டி தட்டி நிறுத்தறீங்களே.. உங்க மனசுல என்ன ஷேன் வார்னேன்னு நினைப்பா?
2) இன்கமிங் காலுக்காகவும், மிஸ்டு காலுக்காகவுமே மொபைல் வாங்குறீங்களே. ஒரு வேளை மிஸ் எல்லாம் விடுற கால் என்பதால் தான் மிஸ்டு கால்ன்னு பேரு வந்ததா?

3) அஃபிஷியல் கால்ன்னா எதிர்ப்பக்கம் பேசுற ஆளு இருக்கிற திசையை நோக்கி நேரா பேசுற மாதிரி காட்டுக் கத்தல் போடுற நீங்க, பெர்சனல் கால்ன்னா மட்டும் உதடே அசையாம பேசுறீங்களே.. இதுக்கெல்லாம் தனியா ஸ்பெஷல் கிளாஸ் எதுனா போனீங்களா?

4) தலைமுடிய தவிர எல்லாத்திலும் பிங்க் கலர் தேடுறீங்க ஓக்கே. அதுக்குன்னு தேசியக்கொடி தந்தா கூட பிங்க கலர் இல்லையான்னு கேட்கிறது டூ மச்ச, இல்லையில்ல, ட்விண்டி மச்சா தெரியல உங்களுக்கு?

5) ஃபோன்ல பேசிட்டே வண்டி ஓட்டின குத்தம் சொல்றாங்க. ஆனா ஃபோன்ல பேசிட்டே குறுக்குல வந்து, கரெக்ட்டா பச்சை சிக்னல் பார்த்து ஓட்டுற எங்கள பார்த்து “humpty dumpty sat on the wall” ன்னு ஏதோ இங்கிலீஷ்ல திட்டுறீங்களே. இப்ப நான் கேட்கிறேன்.  “baba black sheep have u any wool?

6) ஜீன்ஸ், டீஷர்ட், கார்கோன்னு எங்க டிரெஸ் ஒண்ணு விடாம போட்டுட்டு சுத்துறீங்க. நாங்க கிண்டலா செய்றோம்? ஆனா நாங்க டைட்டா டீ ஷர்ட் போட்டா மட்டும் ஜாக்கெட்ன்னு சொல்றீங்க. குர்தா போட்டா துப்பட்டா எங்கப்பான்னு கலாய்க்கறீங்க. உங்களுக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா?

7) 30 வயச தாண்டிய ஷாலினியையோ, மாளவிகாவையோ பிடிக்கும்ன்னு சொன்னா உடனே “ஆண்ட்டி பண்டாரம்ன்னு” பேரு வைக்கறீங்க. ஆனா நீங்க மட்டும் “ஐ லவ் கமல்ப்பா”, சூப்பர்ஸ்டார அடிச்சிக்க முடியுமான்னு ஜொள்ளு விடுறீங்க. உங்கள ”அங்கிள் பைத்தியங்க” சொன்னா சும்மாவா விடுவீங்க?

8) ஒரே பொண்ணுக்கு பல பேரு நூல் விட்டா சூப்பர் ஃபிகர்ன்னு மிதப்புல சுத்தறீங்க. அதே ஒரு பையன் பல பொண்ணுக்கு லெட்டர் தந்தா பொறுக்கின்னு பேரு வைக்கறீங்க. ஐ வாண்ட் டூ நோ த ரீசன் நவ். கமான் டாக் மீ.
-- From my friend's buzz :)

Wednesday, January 12, 2011

பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...?

மூன்று மதத் துறவிகளும் கடவுள் மறுப்பாளரும் சந்தித்துக் கொண்ட ஒரு அற்புத நிகழ்வு அது.

அவரவர் மதத்தின் மீது அவரவருக்கு எவ்வளவு பற்று இருக்கிறது என்பதைப் பரிசோதிக்க நினைத்த ஒருவர், அந்தத் துறவிகள் ஒவ்வொருவரிடமும் ஒரு கேள்வி கேட்க விரும்பினார்.

துறவிகளின் அனுமதி கிடைத்ததும் அவர் மூன்று மதத் துறவிகளிடமும் ஒரே கேள்வியைத்தான் கேட்டார்.

"உங்களை யாருமில்லாத தனித்தீவில் விட்டுவிடுவதாக வைத்துக் கொள்வோம். அப்போது உங்க்ளுடன் ஒரே ஒரு புத்தகத்தை எடுத்துச் செல்லலாம் என்று அனுமதித்தால், நீங்கள் எந்தப் புத்தகத்தை உங்களுடன் எடுத்துச் செல்லுவீர்கள்...?".

கேள்வியைக் கேட்டதும் அந்தக் கிறிஸ்துவத் துறவி சொன்னார்.

"நான் என்னுடன் எப்போதும் பைபிள் இருப்பதையே விரும்புவேன். அதனால், நான் பைபிளைத்தான் எடுத்துச் செல்வேன்..!".

முகம்மதியரான அந்தத் துறவி மிகுந்த பெருமையுடன் சொன்னார்.

"என் உயிரினும் மேலான எங்கள் திருமறையான குர்-ஆன் ஒன்றே, நான் என்னுடன் எடுத்துச் செல்லும் புத்தகமாய் இருக்கும்..!".

இந்துத் துறவியோ,"கீதை தவிர உயர்ந்தது எதுவும் உண்டோ. அதுவே நான் எடுத்துச் செல்லும் புத்தகமாய் இருக்கும்..!".

கேள்வியைக் கேட்டுப் பதில் பெற்றுக் கொண்டவருக்கு பரம திருப்தி.

என்றாலும், கடவுள் உணர்வாளர்கள் அவரவர் மதத்தின் மறைகளை எடுத்துச் செல்ல விரும்புகிறார்கள் என்று தெரிந்து விட்டது...

கடவுளை மறுக்கும் அந்த நாத்திகருக்கு மதமோ, மறையோ இல்லையே, அவர் என்ன புத்தகத்தைக் கொண்டு செல்வார் எனத் தெரிந்து கொள்ள விரும்பி.. அவரிடம் திரும்பி அந்தக் கேள்வியைக் கேட்டார் அவர்.

கடவுளை மறுக்கும் அந்தக் கருப்புச் சட்டைக்காரர், சிரித்தபடியே அதற்கு பதில் சொன்னார்.

"அப்படி ஒரு நிலையில், நான் 'சீக்கிரம் கப்பல் கட்டுவது எப்படி?' என்னும் புத்தகம் கிடைத்தால் அதை எடுத்துச் செல்லவே விரும்புவேன்..!" என்றார்.
-- மின்மினிதேசம்

Friday, January 7, 2011

காக்காவும் அதன் கக்காவும்

தில்லுதுர அவரது நண்பர் ராஜாவுடன் பார்க்கில் நடந்து போய்க் கொண்டிருக்கும் போது, ஒரு காக்கா தில்லுதுர மீது பறந்தபடியே கக்கா பண்ணிவிட்டது.

அசிங்கமாகிவிட்ட சட்டையைத் துடைக்க தண்ணீர் எடுத்துவர, ராஜா வேகவேகமாய் பக்கத்திலிருந்த பைப்பை நோக்கி ஓடினார்.

தில்லுதுர நண்பரைப் பார்த்துச் சொன்னார்.

"யூஸ் இல்ல, விட்டுடுங்க...!".

குழப்பமாய்த் தன்னைப் பார்த்த ராஜாவிடம் தில்லுதுர தொடர்ந்து சொன்னார்.

"எப்புடியும் நீங்க தண்ணியப் புடிச்சுட்டு வர்றதுக்குள்ள, அந்தக் காக்கா இன்னும் அஞ்சாறு கிலோமீட்டர் பறந்து போயிருக்குமே...!" என்றார்.

-- Minmini Desam

Wednesday, January 5, 2011

ஆட்டு நாக்கு

அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால், தில்லுதுர வீட்டில் பிரியாணி செய்யச் சொல்லியிருந்தார்.

டிபார்ட்மென்டல் ஸ்டோரில் முட்டை மற்றும் தேவையான ஐட்டங்களை வாங்கிக் கொண்டு, நேராக மட்டன் கடையில் வந்து பைக்கை நிறுத்தினார் தில்லுதுர.

நல்ல கூட்டம் கடையில்.

காய்கறி இன்னபிற உள்ள பையை பைக்கிலேயே வைத்துவிட்டு, முட்டையை மட்டும் பத்திரமாகக் கையில் எடுத்துக் கொண்டு தன்னுடைய டர்னுக்காக காத்திருக்கும் போதுதான், அவர் கறிக் கடைக்காரர் மட்டன் வெட்டும் அந்த அடிமரக் கட்டையின் மேலிருந்த ஆட்டின் நாக்கைப் பார்த்துவிட்டுக் கேட்டார்.

"இன்னாதுப்பா அது..?".

கறிக் கடைக்காரர் எப்போதும்போல் உற்சாகமாய் பதில் சொன்னார்.

"ஆட்டோட நாக்கு சார்.ஒரு அம்மா எடுத்து வைக்கச் சொல்லிட்டுப் போயிருக்கிது..!".

தில்லுதுர ஆச்சர்யமாய்க் கேட்டார்.

"ஆட்டோட நாக்கை எல்லாமா தின்னுவாங்க..?".

கறிக்கடைக் காரர் சிரித்தார்.

"இன்னா சார் இப்பிடிக் கேட்டுட்ட.? ஷோக்கா இருக்கும். உனக்கு வோணுமா..?".

தில்லிதுர அருவருப்புடன் பதில் சொன்னார்.

"சேச்சே... ஒரு மிருகத்தோட வாயிலருந்து வந்ததை என் வாயில போடறதா..? சான்ஸே இல்லை..! கருமம்..கருமம்..".

கடையில் நின்றிருந்தவர்கள் எல்லோரும் திரும்பிப் பார்க்க, கறிக் கடைக்காரர் தில்லுதுர சொன்ன எதைப் பற்றியும் கவலைப்படாமல் கறியை வெட்டியபடியே கேட்டார்.

"அதென்ன சார் கையில வச்சிருக்கீங்க... முட்டையா..?" என்றார்.


-- மின்மினி தேசம்

Monday, January 3, 2011

கார்த்திக்... அனிதா.... காதல்...

கார்த்திக்..
சிவந்த நிறம், நல்ல உயரம். ஏதோ ஒரு சினிமா ஹீரோவின் சாயலை ஒத்த தோற்றம். தினமும் உடற்பயிற்சி செய்பவன் என்பதை அவனது ஃபிட்டான உடற்கட்டே சொல்லியது. ஏற்றி சீவப்பட்ட கேசம் அவ்வப்போது நெற்றியில் தவழ்ந்து அழகூட்டியது. தனியார் நிறுவனம் ஒன்றில் பொறுப்பான வேலையில் சேர்ந்து கைநிறைய சம்பாதிப்பவன். வீட்டிற்கு ஒரே பிள்ளை.
அன்று ஞாயிற்றுக் கிழமை, எனினும் சீக்கிரமாக வெளியில் கிளம்பிக் கொண்டிருந்தான். கூடுதலான அவனது உற்சாகமே கூறியது, தனது காதலியைப் பார்க்கப் போகிறானென்று. அவர்கள் வழக்கமாக சந்திக்கும் காஃபி ஷாப்புக்கு அவளை 10 மணிக்கு வரச் சொல்லியிருந்தான். சரியாக 9.45க்கு தனது கருப்பு நிற பல்சரைக் கிளப்பிப் பாய்ந்தான்.
காஃபி ஷாப்புக்குள் நுழையும்போது அவனது வாட்ச் மணி 10ஐ காட்டியது. திருப்தி அடைந்தவனாய் உள்ளே நுழைந்து பார்வையை சுழற்றினான். அவள் இன்னும் வரவில்லை. ஏனோ அன்றைக்கு ஆட்கள் அதிகமாக ஷாப்புக்குள் அமர்ந்திருந்தனர். யோசனையாய் ஒரு டேபிளில் அமர்ந்த கார்த்திக், தனக்கு ஒரு காஃபியை ஆர்டர் செய்துவிட்டு தனது காதலியின் வருகைக்கு காத்திருக்க ஆரம்பித்தான்.
.................................
அனிதா..
அழகி என்று சொல்ல முடியாதெனினும் நல்ல லட்சணமானவள். அழகான முகவெட்டு. உடலமைப்பிற்கேற்றபடி அந்தப் பச்சை நிற காட்டன் புடவை கச்சிதமாக அவளுக்குப் பொருந்தியிருந்தது. கார்த்திக்கை விட மூன்று வயது இளையவள். ஒரு அண்ணன் இருக்கிறான்.
கல்லூரி படிப்பு முடிந்தவுடன் ஒரு கணிணி மையத்தில் வேலைக்கு சேர்ந்து விட்டாள். போதுமான சம்பளமும் சுதந்திரமும் கிடைக்கிற திருப்தியில் இருக்கும்போது தான் வீட்டில் திருமணத்திற்கு வரண் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். அனிதாவுக்கோ தனது காதலனை கைப்பிடிக்கும் நோக்கம். அதனால் மேற்கொண்டு வீட்டில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து பேச தனது காதலனை பார்க்கக் கிளம்பிக்கொண்டிருந்தாள்.
அம்மாவிடமும் அண்ணனிடமும் சமாளித்துவிட்டு கிளம்பிவதற்குள் அனிதாவிற்குப் போதும் போதும் என்றாகி விட்டது. ஸ்டாப்பிற்கு வந்து சிறிது நிமிடம் காத்திருப்பிற்குப் பின் பஸ் வந்தது. தனக்காக அவன் வந்து காத்திருப்பானே என்ற கவலையுடனான 20 நிமிடப் பயணத்திற்குப் பின் இறங்கி ஷாப் இருக்கும் வழி நோக்கி நடந்தாள்.
ஒருவழியாக 10.15க்கு காஃபி ஷாப்பின் உள்ளே நுழைந்தாள். வழக்கத்தை விட இன்று கூட்டமாயிருக்கிறதே என்று குழப்பமாய் சுற்றிப் பார்த்தபடி கார்த்திக் இருந்த டேபிளை நோக்கி நகர்ந்தாள் அனிதா.
.................................
கார்த்திக் அவ்வப்போது வாட்சைப் பார்த்துக்கொண்டான். அனிதா அவனெதிரில் சென்று உட்கார்ந்தாள். தனது கைப்பையை மடியில் வைத்து சௌகரியமாய் உட்காரவும் வெய்ட்டர் வந்து ஆர்டர் கேட்கவும் சரியாக இருந்தது. யோசித்தவளாய் தனக்கும் காஃபியே ஆர்டர் செய்தாள். வெய்ட்டர் நகர்ந்தவுடன் இருவருமே மௌனமாய் இருந்தனர்.
இரண்டு நிமிடங்களில் காஃபி வந்தது. எடுத்து மெதுவாய்க் குடிக்க ஆரம்பித்தாள். ஆனாலும் அவர்களுக்குள் மௌனம் மட்டுமே இருந்தது. பில்லுக்கான பணமும் கொடுத்தாயிற்று.
கார்த்திக் அடிக்கடி அனிதாவை ஓரக் கண்ணால் பார்த்துக்கொண்டான். அவளோ எதுவுமே பேசாமல் வேறெங்கோ பார்த்துக்கொண்டிருந்தாள். ஒரு நிமிடம் அல்ல இரண்டு நிமிடம் அல்ல.. முழுதாகப் பதினைந்து நிமிடம் இந்த மௌனப் போராட்டம் நடந்தது. அதற்குப் பின் பொறுமையிழந்தவனாய் அந்தக் காரியத்தை செய்தான் கார்த்திக்..
வேகமாய் வெளியேறி தனது பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பிவிட்டான். ஆனால் அனிதாவிடம் எந்த சலனமுமில்லை. தொடர்ந்து அமர்ந்திருந்தாள்.
.................................
என்ன முழிக்கிறீங்க??? யாரோ ஒருத்தன் வேகமா வெளிய போனா அனிதா எதுக்கு கவலைப்படணும்??
அனிதாவும் கார்த்திக்கும் லவ் பண்றாங்கனு நா சொன்னேனா??? கார்த்திக் தன்னோட காதலி வரலனு கோவமா போயிட்டான். அனிதா தன்னோட காதலனுக்காக வெய்ட் பண்றா. அவ்ளோ தான். அதுக்கெதுக்கு ஒரே டேபிள்ல உட்காரணும்னு கேக்குறீங்களா?? அட என்னங்க சின்னப்புள்ளத் தனமா கேக்குறீங்க?? அன்னைக்கு தான் காஃபி ஷாப் கூட்டமாயிருந்துச்சுல.. இடம் இல்லனு தான் எதிரெதிர்ல உக்காந்தாங்க. இது ஒரு தப்பா??
இப்ப என்ன தான் சொல்ல வரேன்னு கேக்குறீங்க.. அதானே..
ஒண்ணுமில்லங்க.. பதிவெழுதனும்னு முடிவாய்டுச்சு.. எதையாவது எழுதனும்ல.. ஐ மீன் கிறுக்கணும்ல.. (அப்பாடா.. ப்ளாக்கோட தலைப்பு வந்துடுச்சு)
அட என்ன பண்றீங்க..
நோ நோ இங்கல்லாம் துப்பக்கூடாது.
பின்னூட்டத்துல போய் காரிதுப்பிட்டு வேலையப் பாருங்க.
அடுத்த பதிவுல சந்திக்கலாம். வரட்டுமா..

--- இந்திரா 
 
 

Saturday, January 1, 2011

காதலிக்கு ஓர் கடிதம்!

ஒரு கோயம்புத்தூர் குசும்புக்கார அன்பரின் கைவண்ணமே இங்கு நீங்கள் காண்பது.


காதலிக்கு ஓர் கடிதம்!



அன்பே!


நீ சொன்னாய் என்பதற்காகத்தான் உனது அப்பாவிடம் பேசிப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். அலுவலகத்தில் இருக்கிறேன் நீல்கிரிஸில் சாயங்கலாம் சந்திக்கலாம்’ என உன் தகப்பன் தொலைபேசியில் சொன்னபோது கடமை தவறாதவனின் மகளைத்தான் காதலித்திருக்கிறோம் என இறுமாந்திருந்தேன்.

சொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் வந்தமர்ந்த உனது அப்பனைப் பார்த்த போது ‘எருமை மாட்டிற்கு மான் குட்டி எப்படி பிறந்தது?!’ என்ற பழைய கவிதைதான் நினைவிற்கு வந்தது. மான்குட்டி என்ற வர்ணனை உனக்கு அதிக பட்சம்தான் என்றாலும் எருமை மாடு என்பது உனது அப்பனுக்கு மிகக் குறைந்த பட்சம்தான். அந்தக் கடையில் பில் போடுவதற்காக இருந்த கம்ப்யூட்டரைத் தவிர மீதம் இருந்த அனைத்தையும் தீன்று தீர்த்துவிடும் வெறி அவரது கண்களில் மின்னியதை நான் கவனிக்கத் தவறிவிட்டேன். சரி எதையாவது சாப்பிட்டுவிட்டு பேச்சைத் துவங்கலாம் என சர்வரை அழைத்தேன். அதற்குப் பின் உனது அப்பனின் கைங்கர்யத்தால் சமையல் கட்டிற்கும் டேபிளிற்கும் இடையே சுமார் ஐம்பது ஓட்டங்கள் எடுத்தான் சர்வர். ராயப்பாஸிலும், தலப்பாகட்டிலும் நீ புஃல் கட்டு கட்டுவது ஒரு ஜெனடிக் பிரச்சனை என்பதைக் கண்டுகொண்டேன். வேழ முகம்தான் இல்லையே தவிர பேழை வயிறு இருக்கிறது உன் பரம்பரைக்கே…

அவரது வேட்டையை முடிவுக்கு கொண்டு வர இயலாதவனாக கையறு நிலையில் இருந்தபோது ‘ தம்பி இப்பல்லாம் முன்ன மாதிரி சாப்பிட முடியறதில்லபா… வயசாச்சில்ல…’ என தன் திருவாய் மலர்ந்தார். திடப்பொருட்களிலிருந்து ரோஸ்மில்க் போன்ற திரவப் பொருட்களுக்கு மாறினார். அப்பாடா, முடித்து விட்டார் என்ற ஆசுவாசத்தை ‘ ஒரு கஸாடா’ என்ற வார்த்தையில் உடைத்தார். கஸாட்டாவும், ஜர்தா பீடாவும் சாப்பிடுவதில்லை என்பதைத் தவிர
திருச்செந்தூர் கோவிலில் உண்டைக்கட்டிக்கு காத்திருக்கும் கோவில்
யானைக்கும் உனது அப்பனுக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட இல்லை. ‘தம்பி எப்ப சாப்பிட்டாலும் கடைசியா ஒரு ஐஸ் க்ரீம் சாப்பிடுறது நல்லதுப்பா’ என்ற அவரது கூற்றில் இருந்த கடைசியா எனும் வார்த்தைதான் எனக்கு வாழ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது.

‘சார், நான் உங்க பொண்ணை விரும்புறேன். அவளையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். அது விஷயமாப் பேசத்தான் உங்களுக்கு போன் பண்ணினேன்’ என்று மெல்ல பேச்சைத் துவங்கினேன். ‘ அப்ப போனவாரம் இதே விஷயமாப் பேச ‘ஆனந்த பவனுக்கு’ வந்தது நீங்க இல்லையா தம்பி?!’ என ஆச்சர்யமாக அவர் கேட்டபோதுதான், மொத்தக்குடும்பமும் இரை எடுப்பதற்கென்றே எவனையாவது இரையாக்குவதை புரொபஷனல் டச்சோடு செய்கிறீர்கள் என்பதை உணர்ந்தேன். ”

“தம்பி இது பெரிய விஷயம், ஒரு நாளில் பேசித் தீர்த்துவிட முடியாது. நீங்க ஒன்னு பண்ணுங்க… நாளக்கி சாயங்காலம் அன்னபூர்ணா வந்துடுங்க… அப்ப பேசிக்கலாம்” என்ற உனது தகப்பனைக் கொலை செய்ய அந்த நேரம் என்னிடம் துப்பாக்கி இல்லாமல் போனது துர்பாக்கியமே.

இப்படிக்கு,
இரை தேடும் குடும்பத்திற்கு இரையாகி விடாமல் இறையருளால் தப்பித்த உன்னுடைய முன்னாள் காதலன்.

(ஆக்கம் என்னுடையதல்ல! மின்னஞ்சலில் வந்தது.
எழுதிய அன்பர் பெயர் தெரியவில்லை. அவர் எங்கிருந்தாலும் வாழ்க!)
   

You may also like