Wednesday, March 13, 2013

காதல் பனியகம்

காபி ஷாப்பில்
'மது அருந்தக்கூடாது' வாசகம்.
நான் பருகிக்கொண்டிருந்தேன்
உன்னை!

*
இளநீரை குடித்தது
அவள்தான்
குளிர்ந்துபோனது என்னவோ
நான்.

*
ஹோட்டலில்
சாப்பாடு சொல்லிவிட்டு
ருசித்துக்கொண்டிருந்தோம் நாங்கள்
ஒருவரை ஒருவர்.

*

காபி சொல்லிவிட்டு
உரையாடிக்கொண்டிருந்தோம்
சில்லிட்டிருந்தது மனசும்.

*

ஐம்புலன்களுக்கும்
இன்பம் அளித்தது
அவள் கொடுத்த
ஒரு சின்ன முத்தம்.

*

பேறுகாலத்துக்காக
பிறந்த வீடு சென்றுவிட்டாய்
தாயை அணைத்துக்கொண்டு
தூங்கும் குழந்தையின்
ஏக்கமாய் என் இரவு.

*

உன் முனகல்களையும்
சிணுங்கல்களையும்
ரகசியமாய் சொல்லிச் சிரிக்கின்றன
நம் தலையணைகள்
நீ இல்லத இரவுகளில்.

*

பணியிலும் மனதிலும்
அழுத்தும் இறுக்கத்தை
அப்புறப்படுத்துகிறது
உன் ஆலிங்கனம்.

*

நாம் ஒத்தவர்கள்தானே
பின்பு ஏன்
விலக்குகின்றாய்
விலகி ஓடுகின்றாய்
ஓ... ஒத்த துருவங்கள்
விலக்கிக்கொள்ளும் அல்லவா!

---- சிவராஜ்

You may also like