Wednesday, December 28, 2011

போ நீ போ - தனுஷ்


போ நீ போ
போ நீ போ
தனியாக  தவிக்கின்றேன்
துணை வேண்டாம்  அன்பே  போ
பிணமாக  நடக்கின்றேன்
உயிர்  வேண்டாம்  தூரம்  போ
நீ  தொட்ட  இடமெல்லாம் எரிகிறது அன்பே போ
நான் போகும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ

இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் பெண்ணே போ
உயிரோடு  விளையாட  விதி  செய்தாய் அன்பே போ

உன்னாலே  உயிர் வாழ்கிறேன்
உனக்காக  பெண்ணே
உயிர் காதல் நீ காட்டினால்
வாழ்வேனே  பெண்ணே
இதுவரை  உன்னுடன்  வாழ்ந்த  என்  நாட்கள்
மறுமுறை  வாழ்ந்திட  வழி  இல்லையா
இருள்  உள்ளே  தேடிய  தேடல்கள்  எல்லாம்
விடியலை  காணவும்  விதி இல்லையா

போ நீ போ
போ நீ போ

என் காதல் புரியலையா
உன்  இஷ்டம்  அன்பே போ
என் கனவு  கலைந்தாலும்
நீ இருந்தாய்  அன்பே போ
நீ  தொட்ட  இடமெல்லாம்  எரிகிறது  அன்பே போ
நான்  போகும்  நிமிடங்கள்  உனக்காகும்  அன்பே போ

இது  வேண்டாம் அன்பே போ
நிஜம்  தேடும்  அன்பே போ
உயிரோடு  விளையாட  விதி  செய்தாய் அன்பே போ

தனியாக  தவிக்கின்றேன்
துணை வேண்டாம்  அன்பே  போ
பிணமாக  நடக்கின்றேன்
உயிர்  வேண்டாம்  தூரம்  போ

-- தனுஷ்

Tuesday, December 20, 2011

கன்னுகுட்டி காதல்!

எங்கோ ஆட்டோ சத்தம் கேட்டு கண் விழித்தேன். தலை விண்ணென்று வலித்தது.
இரவு லேட்டாக தூங்கியதின் விளைவு. தலையை லேசாக திருப்பி, நைட் ஸ்டாண்டில்
இருந்த செல்ஃபோனை எடுத்து மணி பார்த்தேன், காலை மணி 5.00.
தலையணையை கட்டிலில் நேராக சாய்த்து அதில் தலை வைத்தபடி எழுந்து
அமர்ந்தேன். அருகில் படுத்திருக்கும் வருண்.....அன்றைய குறும்பு காதலன்
,இன்றைய என் ஆசை கணவன் தூக்கத்தில் புரண்டு படுத்தார்.

தூங்கும் போது கூட, மீசையின் கீழ் அதே குறும்பு புன்னகை......'கனவில்
ஜொள்ளு விட்டுகிட்டு இருப்பாரா இருக்கும், இல்லீனா தூங்கும்போது கூடவா
உதடு சிரிச்சுட்டே இருக்கும்', மனம் பொறுமினாலும்.........என்னை மயக்கி
கட்டி போடும் அந்த வசீகர புன்னகையிலிருந்து என் பார்வையை விளக்க
மனமில்லை.
வைத்தகண் வாங்காமல் அவரையே கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.

நிச்சயம் இவரை பிரியத்தான் வேண்டுமா?? நாளையிலிருந்து காலையில் நான்
எழுகையில் இந்த மந்திரப்புன்னகையை ரசிக்க முடியாதா? இருவரும் பரஸ்பரம்
பேசி, சேர்ந்து எடுத்த முடிவுதானே..........பின் ஏன் பிரிவை நினைத்து
மனம் இரகசியமாய் உள்ளுக்குள் அழுகிறது.

மீண்டும் புரண்டு படுக்கிறார் வருண்........நான் அவரையே
பார்த்துக்கொண்டிருக்கிறதை கவனித்திருப்பாரோ?விழித்திருந்தும் ,
தூங்குவதாய் பாவனை செய்வதில்தான் இவர் கில்லாடி ஆச்சே, நான் யோசனையில்
திரும்பிய போது அரைக்கண் திறந்து பார்த்தாலும் பார்த்திருப்பார்.

சில மாதங்களுக்கு முன்பு வரை.......எங்களது முன் இரவில்,

நான் தூங்கும் அழகை ரசித்து,
எனக்கு முத்தம் கொடுக்கலாம்
என அவர் காத்திருக்க...
அவர் முத்தம் கொடுக்கும்
அழகை ரசித்துவிட்டு
தூங்கலாமென நான் காத்திருக்க.....
எங்கள் இருவருக்காகவும்
காதல் உறங்காமல் காத்திருக்கும்!!!

இப்போது மீண்டும் அவரது தூக்கத்திலும் சிரிக்கும் கள்ள சிரிப்பை ரசிக்க
என் கண்கள் தானாக அவர் பக்கம் சென்றது,
அவர் புரண்டு படுத்ததில், போர்வை சற்று உயர்ந்து, பாதி முகத்தை
மூடியிருக்கிறது.........விலக்கி விடலாமா??
விழித்துக்கொண்டால்??

முன்பாக இருந்தால்........போர்வையை சரி செய்ததோடு என் விரல்களும்
நின்றிருக்காது, விழித்துக்கொண்ட அவரும் சும்மா இருந்திருக்க மாட்டார்,
ஆனால்.......இப்போது இருவருக்கும் நடுவில்தான் வேலி அமைத்து
நாட்களாகிவிட்டதே.
மெதுவாக......போர்வையை சரிசெய்து விட்டேன், விரல் படாமல்...........என்
விரலையே என்னால் கட்டுபடுத்த முடியாமல் போய்விடுமோ என்ற பதட்டம்
இருக்கத்தான் செய்தது.

இப்போ ........இப்போ கூட அதே சிரிப்பு அவர் உதட்டில். தூங்கும் குழந்தையை
இரசிக்க கூடாதுன்னு அம்மா அடிக்கடி சொல்லுவாங்க, இவரும் என்
குழந்தைதானே......என் முதல் குழந்தை.

இந்த குழந்தையை பிரியத்தான் வேணுமா, என்ன இது.......முடிவு பண்ணின பிறகு
இப்படி ஒரு தடுமாற்றம் எனக்குள்.

உன் குறும்பு புன்னகையை
உதிர்க்கும் உதடுகள்
என் கண்களை மட்டுமா
சிறை செய்தது?
என்னையும் சேர்த்தல்லவா
கட்டி போட்டிருக்கிறது...

எத்தனை முறை
இதே உதடுகள்
என் உதடுகளை பிரதி எடுத்திருக்கும்??
எடுத்த பிரதிகளை
எங்கே பத்திரப்படுத்தியிருக்கிறாய்?

அடடே, கவிஞரின் கன்னுகுட்டிக்கும் கவிதை எழுத வருதே!

ஹும்......அவர் என்னை செல்லமா 'கன்னுகுட்டி' னு தான் கூப்பிடுவார்.

இன்று இந்த கன்னுகுட்டி கட்டியணைக்கும் தொலைவில் இருக்கிறார்....நாளை???
மீண்டும் நெஞ்சு வலித்தது பிரிவை நினைத்து, முடிவெடுத்தது
.......முடிவெடுத்ததாகவே இருக்கட்டும். ஆனாலும் மனதில் முள்ளாய்
குத்துகிறது ஒரு கேள்வி......நிச்சயம் இவரை பிரியத்தான் வேண்டுமா??

இன்றாவது அவருக்கு பெட் காஃபி கொடுக்கலாமா?
பெட் காஃபி கொடுத்து எத்தனை மாதமாகிறது........இப்போது என்னால் முடியுமா??

பெட் காஃபி என்றதும்தான் நினைவிற்கு வருகிறது,
எங்களுக்கு திருமணமான புதிதில்.......பெட் காஃபியுடன் நான் அருகில்
வந்திருப்பது தெரிந்தும், அரைக்கண்ணில் என்னை ரசித்தபடி, தூங்குவதுபோல்
பாவனை செய்வார், அது தெரிந்தும்........தெரியாதது போல் நானும் அவர்
முழிப்பதற்காக காத்திருப்பது போல் பாவனை செய்துக்கொண்டு
அமர்ந்திருப்பேன்.

சில தெரிந்த பொய்களிலும், விரும்பி ஏமாறுவதிலும் தானே இருக்கிறது
வாழ்கையின் சுவாரசியமே .

பெட் காஃபியோடு நிறுத்த மாட்டார்......சரியான காஃபி வண்டி அவர்,
குளித்து முடித்து வந்ததும் அடுத்த காஃபி ரெடியா இருக்கனும் அவருக்கு.

அன்றும் அதுபோல் அவர் குளித்து முடித்து, ஷவர் நிறுத்தும் சத்தம்
கேட்டதும், கிட்சனில் காஃபி ரெடி பண்ணிக்கொண்டிருந்தேன். எனக்கு தெரியாது
என நினைத்து.......பூனை மாதிரி நைஸாக சத்தம் வராமல் மெதுவாக அடி வைத்து
கிட்ச்சனுக்குள் நடந்து வந்தார், சன்னமாக எதையோ பாடிய படி அடுப்பில் பால்
வைத்துக் கொண்டிருந்த நான்....

"என்ன வேணும் இப்போ உங்களுக்கு ?" திரும்பாமலேயே கேட்டேன் .

"ச்ச்ச.......எப்படிடி கண்டுபிடிக்கிற ஒவ்வொரு தடவையும்"

"நான் தான் ஹாலுக்கு காஃபி எடுத்துட்டு வரேன்னு
சொல்லியிருந்தேன்ல......இப்போ எதுக்கு கிட்ச்சனுக்குள்ள வந்தீங்க"

"உனக்கு ஹெல்ப பண்ணலாமேன்னு...."

"நெஜமாவே ஹெல்ப் பண்ண தான் வந்தீங்களா " இரண்டு கைகளையும் இடுப்பில்
வைத்துக் கொண்டு திரும்பினேன்.

உதட்டைச் சுளித்து புன்னகைத்தார் வருண் . கண்களில் அத்துனை குறும்பு
.....நான் ரசிக்கும் குறும்பு:))

" நம்பமாட்டியா ....நம்புடி குட்டிமா........ நேத்து உனக்கு நான் வைச்சு
விட்ட மருதானி மேல சத்தியமா" இன்னும் ஒரு அடி முன்னேறி என் கைகளை
பிடித்து சத்தியம் பண்ணும் சாக்கில் நெருங்கினார்.

"வேணாம்.......... நல்ல பிள்ளையா ஹால்ல போய் உட்காருங்க . நான் காப்பி
எடுத்துட்டு வரேன் " ஒரு அடி பின்னால் சென்றேன் .

சமையல் மேடை இடித்தது .

"ம்ம்.... சத்தியம் பண்ணாம கிட்சனை விட்டு நான் போறதா இல்ல " சமையல்
மேடையில் இரண்டு கைகளையும் ஊன்றி என்னை சிறை பிடித்தார் .

"எங்கே சத்தியம் பண்ணட்டும்........... "

"ஹ்ம்ம்......... " சவுண்ட் ஸ்பீக்கரை முழுங்கின மாதிரி சத்தமாக பேசும்
என் சத்தத்தின் டெசிபல்கள் அநியாயத்திற்குக் குறைந்திருந்தன .

"என்ன ஹும்ம்.........எங்கே சத்தியம் பண்ணட்டும்னு கேட்டேன்"

"காப்பி.........வேணாமா?"

"வேணாம்......"

"டீ...??"

"நீ........"

எனக்கே எனக்கு சொந்தமான வருணின் நறுமணத்துடன் அவர் போட்டு குளித்திருந்த
சோப்பின் மணமும் சேர்ந்து கிளர்ச்சி ஊட்டியது . மூச்சுக் காற்று உதட்டைச்
சுட்டது . கண்களை மூடிக் கொண்டேன்.

இப்பொழுதும் கண்களை அழுந்த மூடிக்கொண்டிருக்கிறேன்......இமைகளின்
இருக்கத்தையும் தாண்டி, வெளிவந்த நீர் துளிகள், என் கண்மையின் துணைகொண்டு
கன்னத்தில்.... வரைபடம் வரைந்து, உதடுகளை தொட்டு உவர்த்தபோது, விழி
திறந்தேன்,

இப்போதும் அதே மெளன புன்னகையுடன் அவர் ஆழ்ந்த உறக்கத்தில், என் அருகில்.......

இப்படி திகட்ட திகட்ட
காதலை அள்ளிதராமல்
தவணை முறையில் தந்திருக்க கூடாதா?
பிரிகையில் இத்துனை பாதிப்பு இருந்திருக்காதே,
மொத்தமாக நீ 'புகட்டிய' காதலே
இன்று நம்மை பிரிக்கிறது பார்:(

கட்டாயம் பிரியத்தான் வேண்டுமா??

இனிமேலும் இப்படியே உட்கார்ந்திருந்தால், நானே என் முடிவை மாற்றினால்
மாற்றி விடுவேன், மேலும்.......அவர் கண்விழித்துவிட்டால், கலங்கின என்
கண்களும்,கண்களை தாண்டி கனனத்தில் இழுகியிருக்கும் கண்மையும், நெற்றி
பொட்டில் பூர்த்திருக்கும் வேர்வையும்...........என் உள்ளுணர்வை அவருக்கு
வெளிச்சம் போட்டு காட்டி கொடுத்துவிடும். தண்ணீரிலேயே தடம் பார்க்கும்
திருடன் இவர்:))

எடுத்த முடிவில் மாற்றம் வேண்டாம் என்ற முடிவுடன், படுக்கையிலிருந்து
எழுந்துக்கொள்ள என் ஒருகையை படுக்கையில் ஊன்றியபடி மெதுவாக நான் கீழ்
இருங்குகையில்.........என் கையை அழுந்த பிடித்தது அவரது வலது கரம்.

மெதுவாக திரும்பினேன்.......

என் கரத்தை விடுவிக்க நான் முயல..........அவரது பிடியின் இறுக்கம் அதிகரித்தது,

அட! இதென்ன வம்பா போச்சு, நான் தான் தடுமாறுறேன்னா....இவருமா??

மேலும் அவர் வலு கரம் அழுத்த......

"அச்சோ......என்னங்க இது.......நேத்து வளைகாப்புல போட்ட கண்ணாடி வளையல்
உடைஞ்சுட போகுது, கையை விடுங்க........."

"........." குறும்பனின் புன்னகை மட்டும் பதிலாக வந்தது.

"அய்யோ........பிரசவம் ஆகுற வரைக்கும் வளையல் உடைய கூடாதுங்க, ப்ளீஸ்
விடுங்க..........."

பிடியை தளர்த்தியபடி அவர்,

"விட முடியலடி செல்லம்............"

அப்பாவி குழந்தையைபோல் முகத்தை வைத்துக்கொண்டு அவர் கேட்கையில், நெஞ்சம்
விம்மிக்கொண்டு வந்தது.......

"என்னாலயும் முடியலீங்க............"

அவர் நெஞ்சில் இப்போது என் காதணி தடம் பதித்துக்கொண்டிருந்தது,

"அப்போ.........போகாதே........என்னைவிட்டுட்டு......"

"முதல் பிரசவம் அம்மா வீட்லன்னு எல்லாரும் பேசிதானே முடிவு
பண்ணினோம்..........இப்போ..........எப்படி...."

"'கன்னுகுட்டி....... உன்னை நான் பாத்துக்கிறேன்டி......"

"ஒரு குழந்தையை அம்போன்னு விட்டுட்டு......இன்னொரு குழந்தையை பெத்துக்க
அம்மா வீட்டுக்கு போய்தான் ஆகனுமான்னு எனக்கும் தடுமாற்றமா இருக்குதுபா"

இப்போது, என் 'முதல் குழந்தை' என் நெஞ்சோடு.........சேர்த்தணைத்துக்கொண்டேன்,
மற்றொரு குழந்தை 'எனக்குள்' நடை பயின்றபடி உதைத்து காண்பித்தது தன் இருப்பை,
பெண்மையின் லயிப்பில், பரவச நிலையில் நான்:))

உன் சிரிப்பில்
மயங்கி காதலித்தது
உனக்காக மட்டுமல்ல....
உன்னைப் போலவே
'புன்னகை' மன்னனாய்...
ஒரு மகன் வேண்டும்
என்பதற்காவும்தான்...!!

"போகமாட்டேன்......உங்களை விட்டு எங்கேயும் போகமாட்டேன்"
உணர்ச்சிவசத்துடன் என் குரல் கிசுகிசுத்தது அவர் செவிகளில்.

அணைப்பின் இருக்கும் அதிகரிக்க..........
சில மணிதுளிகள் மெளனமாக அணைப்பில் கழிந்தது,
மெல்ல தலைநிமிர்ந்த அவரது பார்வையில்.......
நான் அவருக்கே அவருக்கு மட்டும் சொந்தம் என்ற கர்வம் தலைதூக்கி நின்றது.

-- திசைகாட்டி

Tuesday, November 22, 2011

உன் நினைவுகள்!


உன்னை நினைத்து
இரவு முழுதும்
அழுது முடித்து
உறுதியாய்த்
தீர்மானித்தேன்
உன்னை மறந்து
விடுவதென்று!

உன் நினைவுகளை எங்கேனும்
தொலைத்து விடலாமென
அழுதுகொண்டு
அழைத்துக்கொண்டு
கிளம்பினேன்...

திரையரங்கில்..
நூலகத்தில்..
புத்தக இடுக்கில்..
பேருந்தில்..
அலுவலகத்தில்..
சாலையில் பார்த்த
குழந்தையின் சிரிப்பில்...

எங்கே தொலைப்பதென
அலைந்து திரிந்து
மீண்டும் வீட்டிற்குத்
திரும்பினேன்.

செருப்புகளைக் கழற்றுகையில்
உறைத்தது!
உன் நினைவுகளைக் காணவில்லை!!

மகிழ்ச்சியாய் நுழைந்து
படுக்கையறையைத் திறந்தேன்

அங்கே...
அலைந்த களைப்பில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்..
என் கட்டிலில் படுத்து
உறங்கிக் கொண்டிருந்தன
உன் நினைவுகள்!

--

உன்னை இழந்ததற்கு பதிலாய் உயிரை இழந்திருக்கலாம்

நீயும் நானும்
நடந்து சென்ற பாதை
நீண்டு கொண்டேயிருக்கிறது
முடிவில்லாமல்....

நாம் பேசிச் சிரித்த
நிமிடங்களுக்கு சாட்சியாய்
மெளனித்து நிற்கிறதே
அதோ அந்த மரத்தை
நினைவிருக்கிறதா?

யாருக்குத் தெரியும்?
சலசலத்துக் கொண்டிருக்கும்
அந்த பறவைகளின் பேச்சு
நம்மைப் பற்றியதாகக்கூட
இருக்கலாம்!

உண்மை சொல்!

உன்னை எனக்கு
நினைவூட்டும் எதுவும்
என்னை உனக்கு
நினைவூட்டவில்லையா?

உன் பார்வை காட்டும் பரிவு..
அன்பில் நனைந்த உன் கோபம்..
உன்னை என் நிழலாய்
உணர வைத்த உன் காதல்....

அய்யோ!

உன் பிரிவால்
உயிர் கரையும் பொழுதுகளில்....
உன்னை இழந்ததற்கு பதிலாய்
உயிரை இழந்திருக்கலாம்
என்றே தோன்றுகிறது!

--

Friday, November 18, 2011

Why this கொலைவெறி டி ? - தனுஷ்


Yo boys i am singing song
soup song
flop song
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
rhythm correct
why this kolaveri kolaveri kolaveri di
maintain this
why this kolaveri........... aaa di

distance la moon-u moon-u
moon-u  color-u  white-u
white background night-u night-u
night-u color-u black-u

why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di

white skin-u girl-u girl-u
girl-u heart-u black-u
eyes-u eyes-u meet-u meet-u
my future dark

why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di

maama notes eduthuko
apdiye kaila snacks eduthuko
pa pa paan pa pa paan pa pa paa pa pa paan
sariya vaasi
super maama ready
ready 1 2 3 4

whaa wat a change over maama
ok maama now tune change-u

kaila glass only english..
hand la glass glass la scotch
eyes-u full-aa tear-u
empty life-u girl-u come-u
life reverse gear-u
lovvu lovvu  oh my lovvu
you showed me bow-u
cow-u cow-u holi cow-u
i want u hear now-u
god i m dying now-u
she is happy how-u

this song for soup boys-u
we dont have choice-u

why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di

-- Dhanush

Wednesday, November 9, 2011

காதல் என் காதல் அது கண்ணீருல - மயக்கம் என்ன



காதல் என் காதல் அது கண்ணீருல..
போச்சு அது போச்சு அட தண்ணீருல..

ஏ மச்சி.. உட்ரா…
ஏய்.. என்ன பாட உடுடா..
நா பாடியே தீருவேன்..
சரி பாடி தொல..

காதல் என் காதல் அது கண்ணீருல..
போச்சு அது போச்சு அட தண்ணீருல..
காயம் புது காயம் என் உள்ளுக்குள்ள
பாலான நெஞ்சு இப்ப வெந்நீருல..

அடிடா அவள.. ஒதடா அவள..
விட்ரா அவள.. தேவையே இல்ல….
எதுவும் புரில.. உலகம் தெரில..
சரியா வரல.. ஒன்னுமே இல்ல..

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல..

ஆயிரம் சொன்னியே காதுல வாங்கல..
சூப்புல தேங்குறேன் நெஞ்சுதான் தாங்கல
சின்ன சின்னதா டிரீம் எல்லாம் கண்டேன்..
ஆசிட் ஊத்திட்டா கண்ணுக்குள்ள..

நண்பன் அழுவுற கஷ்டமா இருக்கு
கொஞ்சம் கூட அவ ஒர்த்தே இல்ல..

தேன் ஊருன நெஞ்சுக்குள்ள கள் ஊறுதே என்ன சொல்ல
ஒ படகிருக்கு வலையிருக்கு கடலுக்குள்ள மீனா இல்ல

வேணாம் டா வேணாம் இந்த காதல் மோகம்
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்..
பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்..
பட்டாச்சு சாமி எனக்கிதுவே போதும்..

மான் விழி தேன் மொழி, என் கிளி நான் பலி
காதலி காதலி என் ஃபிகர் கண்ணகி..

ஃப்ரெண்ட்ஸு கூடத்தான் இருக்கனும் மாமா..
பிகரு வந்துடா ரொம்ப தொல்ல..
உன்ன சுட்டவ உருப்பட மாட்ட..
உன்ன தவிர என்னகொன்னும் இல்ல..

ஒ.. கனவிருக்கு… கலரே இல்ல,…
படம் பாக்கறேன்.. கதையே இல்ல….
உடம்பிருக்கு உயிரே இல்ல..
உறவிருக்கு, பெயரே இல்ல..

வேணாம் டா வேணாம் இந்த காதல் மோகம்
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்..
பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்..
பட்டாச்சு சாமி போதும் மச்சான்..

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல..
குட் நைட்.. குட் நைட்.. அஹ.. ஓகே..
குட் நைட்.. தங்க யு சோ மச் மச்சி..


-- தனுஷ்

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை - வாரணம் ஆயிரம்



நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் காலலை
பொன்வண்ணம் சூடிடும் காரிகை
பெண்ணே உன் காஞ்சலை

ஓம் ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி

ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தன்ம் ஏதும் இல்லா
புன்னகையோ போகும்மில்லா

நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ
நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ
என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்

இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
போகாதே..

தூக்கங்களை தூக்கிச் சென்றாள்
தூக்கி சென்றாள்..
ஏக்கங்களை தூவிச் சென்றாள்
உன்னை தாண்டி போகும் போது
போகும் போது..
வீசும் காற்றின் வீச்சிலே
நில்லென்று நீ சொன்னால் என் காதல் நகராதே
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே
காதல் எனை கேட்கவில்லை
கேட்காதது காதில் இல்லா

என் ஜீவன் ஜீவன் நீதானே
என தோன்றும் நேரம் இதுதானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே

-- தாமரை

மன்னிப்பாயா!.. மன்னிப்பாயா!....

கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் கடலிடமே

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா

கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஓஹோ உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்

ஓடும் நீரில் ஓர் அலைதான் நான்
உள்ளே உள்ள ஈரம் நீதான்
வரம் கிடைத்தும் தவர விட்டேன்
மன்னிப்பாயா அன்பே

காற்றிலே ஆடும் காகிதம் நான்
நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்
என் கலங்கரை விளக்கமே

அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்
அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்
ஆர்வளர்க்கும் கண்ணீர் பூசல்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் எல்லாம் உரியர் பிறர்க்கு
புலம்பல் என சென்றேன்
புலினேன் நெஞ்சம் கலத்தல் உருவது கண்டேன்

ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ
பூவாயா காணல் நீர் போலே தோன்றி
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்


-- தாமரை

Saturday, November 5, 2011

தோற்கடிக்க முடியாதவன் - தல அஜித்குமார் :)


நேற்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் இருந்தது. பொதுவாக லைவ் தொலைக்காட்சிக்குச் செல்லும்போது ஒப்பனையெல்லாம் செய்ய மாட்டார்கள். ஆனால் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒப்பனை அறை ஒன்று உள்ளது. ஒப்பனைக் கலைஞர்களும் உள்ளனர். நமக்கு மேக்கப் போடாமல் விடமாட்டார்கள்.

கண்ணுக்குக்கீழ் கருமையைப் போக்க ஏதோ மாவைப் பூசினார். முகத்தை அழுந்தத் துடைத்துவிட்டார். புருவத்தைச் சீராக்கினார்.

நான் சிரித்தேன். ‘நான் என்ன சினிமாக்காரனா? எனக்கு எதற்கு இந்த மேக்கப் எல்லாம்? இதனால் என்ன பிரயோஜனம்?’ என்றேன்.

‘இல்ல சார், வயசை ஒரு 15 வருஷமாவது குறைச்சுக் காட்டும்’ என்றார்.

‘அது எனக்கு எதுக்கு? வயசு ஆகிட்டுத்தானே இருக்கு? முன்னாடி தலை எல்லாம் நரைக்க ஆரம்பிச்சாச்சே’ என்றேன்.

‘வேணும்னா அதை மாத்திடலாமா?’ என்றார்.

‘வேண்டாம், வேண்டாம். நான் ரஜினி மாதிரி’ என்றேன்.

‘அவரேகூட சினிமால நரைச்ச தலையோட வந்தா நீங்க ஏத்துப்பீங்களா?’ என்றார்.

‘சினிமால எப்படி வந்தாலும் நிஜ வாழ்க்கைல நரைச்ச முள்ளு தாடி, பாதி வழுக்கை ரேஞ்சில தைரியமா வராரே? அந்த மாதிரி யாரால முடியும்? கமலால முடியுமா?’ என்றேன்.

‘கமல், ரஜினி ரெண்டு பேருக்குமே நான் மேக்கப் போட்டிருக்கேன் சார்’ என்றார்.

‘ஓ, அப்படியா? அப்ப ஏன் சினிமாவ விட்டுட்டு இப்பிடி டிவிக்கு வந்திருக்கீங்க?’ என்றேன்.

‘சினிமால ஹீரோ, கேமராமேன், டைரெக்டர் இப்படி கொஞ்சம் பேருக்கு மட்டும்தான் சார் பணம். மத்தவங்களுக்கு, தினசரி பேட்டா இல்லாட்டி வாழ்க்கை ஓடாது சார். அதுவும் பேட்டாகூடக் கட்டாயமாக் கிடைக்கும்னு சொல்லமுடியாது. குடும்பம்னு வந்தாச்சு சார், இனிமேயும் சினிமால லோல்பட முடியாதுன்னு விட்டுட்டேன்.’

‘யாரோட எல்லாம் சினிமால வொர்க் பண்ணிருக்கீங்க?’

‘கமல், ரஜினி, விக்ரம், அஜித்னு தமிழ் ஹீரோக்கள் எல்லாரோடையும் வொர்க் பண்ணிட்டேன் சார். கமல்கிட்டேருந்துதான் வேலையே ஆரம்பம்.’

‘இந்த நடிகர்கள் எல்லாம் எப்படி?’

‘ஒவ்வொர்த்தர் ஒவ்வொரு மாதிரி சார். ஆனா அஜித் மாதிரி வராது சார்.’

‘ஏம்ப்பா அப்படிச் சொல்றே?’

‘அவர் ஒருத்தர்தான் சார் மனுஷனை மனுஷனா மதிக்கிறவர். மத்தவங்க மோசம்னு எல்லாம் சொல்லலை சார். ஆனா என்னவோ அஜித் ஒருத்தர மட்டும்தான் சார் இந்த மாதிரி நான் பார்த்திருக்கேன். அவர மாதிரி இன்னொருத்தர் இனிக் கிடைப்பாரான்னு தெரியலை சார். முந்தி ஜெனரேஷன்ல ஆக்டருங்க எப்படி இருந்தாங்கன்னு எனக்குத் தெரியாது சார். ஆனா இந்த ஜெனரேஷன்ல அஜித் மாதிரி ஒரு நல்ல மனிதர் யாருமே கிடையாதுன்னு சொல்வேன் சார்!’

‘அதெப்படி அப்பா அவ்வளவு ஆழமாச் சொல்லறே? அப்படி என்ன பண்ணிருக்கார்?’

‘கூட வேலை செய்யற டெக்னீஷியன்ஸை மனுஷனா வேற யாரும் மதிச்சு நான் பார்த்ததில்லை சார். மங்காத்தா பட ஷூட்டிங் மொத நாள். இந்த ஃபால்ஸ் சீலிங் போடற போர்டை வெச்சு சுவர் மாதிரி அலங்காரம் பண்ணி, அதைத் தேச்சு தேச்சு, பொடி பொடியா உதிர்ந்து இருக்கும். அந்தப் பொடி அவர் மேல விழுந்து ஒரே அழுக்கா இருக்காரு ஆர்ட்ல செட் போடற ஒருத்தர். அஜித் அங்க உள்ள வந்து நேராப் போயி அந்த ஆளைத் தொட்டு, அப்படியே தன் கை அழுக்காறதையும் கவனிக்காம, கையைக் குலுக்கி நலம் விசாரிச்சாரு சார்.’

‘அது பெரிய விஷயமாப்பா?’

‘இல்ல சார். இங்க ஏர்போர்ட்டுக்கு முன்னாடி பழைய பின்னி மில்லுல ஷூட்டிங் சார். 14 நாள் நடந்துச்சு. சாப்பாடு சரியா இல்லை. மொத நாள் மோசமான சாப்பாடு. புரடக்‌ஷன்ல சரியாப் பாத்துக்கல. அடுத்த நாள் லைட் பாய்கிட்டப் பேசிக்கிட்டிருக்கறப்ப அவருக்குத் தெரிஞ்சிடுச்சு. உடனே அன்னிக்கு வீட்டுல மட்டன் பிரியாணிக்கு ரெடி பண்ணிக்கிட்டு வந்துட்டாரு. மட்டன் பீஸ் எல்லாம் வீட்டுலயே தயார் பண்ணிக் கொண்டுவந்துட்டாரு. அரிசி ஒரு கிலோ 190 ரூபாய் சார். அவரே சமையல் பண்ணாரு.’

‘என்னப்பா விளையாடற? அவரே சமையல் பண்ணாரா, இல்லை ஆளுகளை வெச்சு சமைச்சாரா?’

‘இல்லைங்க, அவரே சமையல். ஃப்ரீயா இருந்த டெனீஷியன்களைக் கூட்டு வெங்காயம், தக்காளி வெட்டித் தரச் சொன்னாரு. அவரே அரிசியை சோம்பு, பட்டை எல்லாம் போட்டு சமைச்சு, அப்புறம் மட்டனைச் சேர்த்து பிரியாணி செஞ்சாரு.’

‘அப்புறம் என்ன ஆச்சு?’

‘மொத நாள், எங்க யாருக்குமே பீஸ் கிடைக்கல சார். வெறும் சோறு மட்டும்தான். புரடக்‌ஷன்ல ஆளுங்க வந்து பீஸ் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்க. டிஃபன் கேரியர்ல அள்ளிக்கிட்டுப் போயிட்டாங்க. அதுவும் அவரோட காதுக்கு அடுத்த நாள் போயிருச்சு. ஒருத்தரக் கூப்பிட்டு பிரியாணி எப்படி இருந்துச்சுன்னு கேட்டாரு. அவர் வந்து, ‘நல்லா இருந்துச்சு சார், ஆனா பீஸ்தான் கிடைக்கல. எங்களுக்கு யாருக்குமே கிடைக்கலை’னு சொன்னாரு. அன்னிக்கு அவரே திரும்ப பிரியாணி பண்ணினதுமே, புரடக்‌ஷன் மேனேஜரைக் கூப்பிட்டுச் சொல்லிட்டாரு: ‘இன்னிக்கு டிஃபன் பாக்ஸ் கட்டற வேலை எல்லாம் கிடையாது. ஏ, பி, சி அப்பிடின்னு எந்த வித்தியாசமும் இல்லாம, எல்லாரும் இங்கியே உக்கார்ந்து சேர்ந்து சாப்பிடட்டும்.’ அன்னிக்குத் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் முடிஞ்சதும் அவரேதான் சார் யூனிட்டுல உள்ள அத்தனை பேருக்கும் பிரியாணி செஞ்சு போடுவாரு. ஒவ்வொரு நாளும் டேஸ்டு அதிகமாகிக்கிட்டே போச்சு சார்.’

‘அப்புறம்?’

‘அப்புறம் ஷூட்டிங்குக்கு ஹைதராபாத் போனோம் சார். அங்க சமையல் செய்ய முடியாதுங்கறதுனால, அவரோட சொந்தக் காசுல, கிரீன் பாவர்ச்சின்னு ஒரு ஹோட்டல் சார். அதுலேர்ந்து அத்தனை பேருக்கும் பிரியாணி வாங்கிக் கொடுத்தாரு. ஒரு பிரியாணிய நாலு பேர் சாப்பிடலாம். ஹைதராபாத்ல ஷூட்டிங் முடியறவரை அங்கேருந்துதான் சாப்பாடே.’

‘சாப்பாடு மட்டும்தானா?’

‘இல்ல சார். தீபாவளி சமயத்துல ஒவ்வொருத்தருக்கும் 3,000 ரூபாய்க்கு வெடி, ஆளுக்கு 500 ரூபாய் கேஷ் கொடுத்தாரு சார். அப்புறம் பொங்கல் சமயத்துல ஒவ்வொரு டெக்னீஷியனுக்கும் கால் பவுன் தங்கத்துல மோதிரம் வாங்கிப் போட்டாரு சார். வருஷப் பொறப்புக்கு...’

இப்படித் தொடர்ந்துகொண்டே போனார். கமல், ரஜினி போன்றவர்கள் தனிப்பட்ட முறையில் பலருக்கு உதவி செய்துள்ளதையும் சுட்டிக் காட்டினார். ஆனால் அஜித் அளவுக்குத் தான் யாரையுமே பார்த்ததில்லை என்றார்.

செட்டில், உடல் நலம் சரியில்லாமல் யாரேனும் வேலைக்கு வரவில்லை என்றால் உடனே தன் மேனேஜரை அனுப்பி, என்ன விஷயம் என்று தெரிந்துகொண்டு, உடல் நலக் குறைவுக்கு ஏற்றார்போலப் பணம் அனுப்பிவைப்பாராம். கூட வேலை செய்வோரை அண்ணே என்றுதான் அழைப்பாராம்.

மேக்கப் கலைஞரின் குரல் தழுதழுத்தது.


-- From Asir's Buzz 

Thursday, November 3, 2011

அத்தை பெண்

நம் வீட்டில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளின்
இறுதியில் எடுக்கபட்ட புகைப் படங்களிலும்
என்னை பார்த்துக் கொண்டே நிற்கிறாய் நீ.

நாமிருவரும் ஒன்றாய் அமர்ந்து படிக்கும் சமயங்களில்
தெரியாமல் புத்தகத்தை மிதித்து விடும் என்னிடம்
'டேய் அது சரஸ்வதிடா தொட்டு கும்பிடுடா என்கிறாய்'


தெரிந்தே உன் கால்களை உரசி விட்டு
'டீ நீ தேவதைடி' என்று தொட்டு கும்பிட வந்தாலோ
முறைத்து விட்டு பின் துரத்த ஆரம்பிக்கிறாய்.


-- Courtesy: Vallinayagam Jayapadian :)

Thursday, October 20, 2011

தபு ஷங்கர் காதல் கவிதைகள்


ன்
வீடு எனக்கு
பிடித்திருக்கு
எதிர் வீட்டில் நீ இருப்பதால்...

**
துடிப்பதை விட
உன்னை நினைப்பதற்கே
நேரம் சரியாக இருக்கிறது
என் இதயத்திற்கு
 
**
ரதட்சிணை
எல்லாம் கேட்டு
உன்னைக்
கொடுமைப்படுத்திவிட
மாட்டேன்.
ஆனால்
அதைவிடக்
கொடுமையாய் இருக்கும்
என் காதல்.

**

கூந்தலில் பூவாசனை வீசும்;
தெரியும்.
இந்தப் பூவிலோ உன் கூந்தல்
வாசனையல்லவா வீசுகிறது!

**

நீ கிடைக்கலாம்
கிடைக்காமல் போகலாம்
ஆனால்
உன்னால் கிடைக்கும்
எதுவும்
எனக்கு சம்மதம்தான்..

**

னது உறக்கத்தின்
வாசலில்
நான் காவல்
வைத்திருக்கிறேன்.
உனது கனவுகளை
மட்டும் அனுமதிக்க..

**

நீ
வெயில் காரணமாக
உன் முகத்தை
மூடி கொண்டாய்..
உன் முகத்தை
பார்க்காத கோபத்தில்
சூரியன்
எங்களை சுட்டெரிகிறது!!

**

நீ
சாய்வதற்கென்றே
வைத்திருக்கும்
என் தோள்களில்
யார்யாரோ
தூங்கிச் சாய்கிறார்கள்
பயணத்தில்

**

ன் தைல விரல்களுக்கு
ஏங்குகின்றன
என் தலைவலிகள்……

**

ன்
பிறந்த நாளையும்
பிறந்த நேரத்தையும்
காட்டுகிற
ஒரு கடிகாரம்
என் அறையிலிருக்கிறது.

"கடிகாரம் ஓடலியா?"
என யாராவது கேட்டால்
சிரிப்புத்தான் வரும்..

அது
காலக் கடிகாரம் அல்ல
என் காதல் கடிகாரம்

**

ரத்தின்
கீழ்
உனக்காக
காத்திருக்கையில்
மரமேறிப் பார்க்கும்
மனசு

**

னக்கு
லீப் வருடங்கள்
ரொம்ப பிடிக்கும்
அந்த வருடத்தில்தான்
இன்னும் ஒரு நாள்
அதிகமாய் வாழலாம்
உன்னுடன்!

**

ன் பாட்டியின்
நினைவுநாளில்
நீ ஒரு சின்ன இலையில்
சாதத்தை வைத்துக்கொண்டு
‘ கா கா ‘
என கத்துவதைப்பார்த்ததும்
‘"அட...
குயில் கா கா ன்னு கூவுதே “
என்றேன்.
நீ இலையை கிணற்று
மேல் போட்டுவிட்டு
மானைப்போல் ஓடி மறைந்தாய்.

**

சீப்பெடுத்து
உன் கூந்தலைச் சீவி
அலங்கரித்துக்கொண்டாய்..
அந்த சீப்போ
உன் கூந்தலில்
ஒரு முடி எடுத்து
தன்னை அலங்கரித்துக்கொண்டது.

**

சொல்லாமல் வந்த
புயல்மழை நாளில்
நீயும் உனது தந்தையும்
வருகையில் குடைக்கம்பி
உன் தலையில்
குத்திவிட்டதற்காக
உன் தந்தையைப்பார்த்து

கெஞ்சலாய் நீ
சுழித்த முகச்சுழிப்பில்
இன்னொரு
புயல் உருவாகி
மழையால்
அடித்துவிட்டு போனது
என்னை மட்டும் .!

**
ல்லோரும் கோயில் சிற்பங்களை
ரசித்துக்கொண்டிருந்தார்கள்
சிற்பங்களெல்லாம்
உன்னை ரசித்துகொண்டிருந்தன !

**

ரே ஒரு முறைதான்
என்றியும்
உன் நிழல்
என் மீது பட்டதால்
நான்
ஒளியூட்டபட்டு
கவிஞனானேன்!

**

ழகான பொருட்கள்
எல்லாம் உன்னை
நினைவு படுத்துகின்றன.
உன்னை நினைவு படுத்தும்
பொருட்கள்
எல்லாமே
அழகாகத்தான் இருக்கின்றன..

**

நீ எந்த உடையிலும்
கவிதையாகத்தான்
இருக்கிறாய்
சேலை கட்டியிருக்கும்
போதுதான்
தலைப்புடன் கூடிய
கவிதையாகிறாய்.

**

ன் கையசைவிற்காகவே
எத்தனைமுறை
வேண்டுமானாலும்
உன்னிடமிருந்து விடை பெறலாம்!

**

நீ தூங்குகிறாய்...
எல்லா அழகுகளுடனும்.
உன் கண்களை
மூடியிருக்கும்
இமைகளில் கூட
எனக்காக விழித்திருக்கிறது
உன் அழகிய காதல்.

**

ன்னை
காத்திருக்க வைக்கவாவது
நீ
என் காதலியாக வேண்டும்..
கடைசிவரை
வராமல் போனால்கூட
ஒன்றுமில்லை.

**

காதலிக்கும்போது
கவிதைதான்
கிடைக்கிறது.
காதலிக்கப்படும்போதுதான்
வாழ்க்கை கிடைக்கிறது.

**

நீ எவ்வளவு ஒருதலைப்பட்சமானவள்.
நடக்கையில் சிக்கிக்கொள்ளும் உன்
உடையுடன் சேர்ந்து என் மனமும் சிக்கிக்
கொள்கையில், நீயோ என்னை விட்டுவிட்டு
உன் உடையை மட்டும் இழுத்துவிட்டுக்
கொண்டு போகிறாய்!

**

ன்னைக் காத்திருக்க வைக்கவாவது நீ என்
காதலியாக வேண்டும். கடைசிவரை வராமல்
போனால் கூட ஒன்றுமில்லை!

**
-- தபு ஷங்கர்

தபு ஷங்கர் கவிதைகள்



*****

நீ
சாய்வதற்கென்றே
வைத்திருக்கும்
என் தோள்களில்
யார் யாரோ
தூங்கிச் சாய்கிறார்கள்
பயணத்தில்!

*****

உன் தைல விரல்களுக்கு
ஏங்குகின்ற
என் தலைவலிகள்

******

நீ எந்த உடையிலும்
கவிதையாகத்தான்
இருக்கிறாய்
சேலை கட்டியிருக்கும் போது தான்
தலைப்புடன் கூடிய
கவிதையாகிறாய்..

*******

உன் கையசைவிற்க்காகவே
எத்தனைமுறை
வேண்டுமானாலும்
உன்னிடம் இருந்து விடை பெறலாம்...

*******

-- தபு ஷங்கர்

 




Thursday, October 13, 2011

இது எப்படி இருக்கு....



ராமசாமியும் கிருஷ்ணசாமியும் நண்பர்கள். சிறு வயது முதலே இருவரும் கிரிக்கெட் விளையாடுவார்கள். இப்போது இருவருக்கும் எண்பது வயது.

கிருஷ்ணசாமி படுத்த படுக்கையாக இருக்கிறார் என்று தெரிந்து அவரைப் பார்க்க வந்தார் ராமசாமி. நண்பரை சமாதானப் படுத்த எண்ணிய ராமசாமி, "கவலைப்படாதே கிருஷ்ணசாமி, உலகக் கோப்பை முடியறவரைக்கும் நீ சாகமாட்டே" என்றார்.

கிருஷ்ணசாமி சமாதானமாகவில்லை. "எனக்கு சாகறதைப் பத்திக் கூடக் கவலை இல்லைடா, என்னைப் பிரிஞ்சு நீ எப்படி வாழப் போறியோன்னு தான் கவலை" என்றார்.

ராமசாமி, "உண்மைதான்டா, சரி நீ ஒண்ணு மட்டும் செய், ஒரு வேளை இறந்து போயிட்டா மேல் உலகத்தில கிரிக்கெட் விளையாட முடியுமான்னு என் கனவில வந்து சொல்றியா?" என்று கேட்டார். "அதுக்கென்னடா, நிச்சயம் சொல்றேன்"னு சொல்லிட்டு கொஞ்ச நாளில் இறந்துவிட்டார்.

ஒரு நாள் இரவு, ராமசாமி தூங்கும்போது கனவில் கிருஷ்ணசாமி வந்தார். நண்பனைப்பார்த்து ஆனந்தமாகக் கேட்டார், "அந்த உலகத்தில ஏதாவது விசேஷம் உண்டா?"

"உண்டு, ஒரு நல்ல செய்தி, கெட்ட செய்தி ரெண்டு இருக்கு, எதை முதல்ல சொல்லட்டும்?" என்று கேட்டார் கிருஷ்ணசாமி.

"நல்ல செய்தி முதல்ல" - இது ராமசாமி.

"மேல் உலகத்தில கூட கிரிக்கெட் விளையாடறாங்க. இப்பக் கூட அங்கேயும் வேர்ல்ட் கப் மேட்ச் நடக்குது" என்றார் கிருஷ்ணசாமி.

"சரி, கெட்ட செய்தி?" ஆர்வமாகக் கேட்டார் ராமசாமி.


சோகமாகச் சொன்னார், கிருஷ்ணசாமி, "நாளைய மேட்சுல, நீயும் ஆடறே!"

Friday, October 7, 2011

எடுத்த காரியம் வெற்றிகரமாக முடிக்க ரஜினி சொல்லும் மந்திரம்..!

வாழ்க்கையில் வெற்றி பெறுவது முக்கியம் அல்ல. கிடைச்ச வெற்றியை , தொடர்ந்து தக்க வைக்க தெரிஞ்சு இருக்கணும். அதுக்கு குறுக்கு வழி வேலைக்கு ஆகாது. திறமை , நேர்மை ரெண்டும் வேணும்.

ரஜினிகாந்த் நமது சம கால சரித்திரம். அந்த மாமனிதரின் , இத்தகைய இமாலய வெற்றிக்கு, என்ன காரணம் என்பதை , நம் ஒவ்வொருவரும் தனித்தனியாக யோசனை செய்து பாருங்கள். அந்த பண்புகளை , முடிந்தவரையில் கடை பிடிக்க பாருங்கள் ! ஒரு சாதாரண மனிதரா இருந்தவருக்கு, வானத்தில இருந்து எந்த தேவதையும் ஆசீர்வாதம் கொடுத்திட்டு , ஒரே நாள்ல அவர் பெரிய ஆளா ஆகிடலை.
இலக்கு, உழைப்பு, பணிவு , சக மனிதனை மதிக்க தெரிஞ்ச குணம் - இது எல்லாத்துக்கும் மேல , ஆண்டவனை பரிபூரணமா நம்பி , அவன் கிட்ட எல்லாத்தையுமே ஒப்படைச்சது... இப்படி...நெறைய..

எனக்கு தனிப்பட்ட முறையில பிடிச்ச விஷயம்.. " நல்லவன் மாதிரி நடிக்கிறது இல்லை, முடிஞ்ச அளவுக்கு நல்லவனா வாழ்ந்து காட்டும் குணம்."! இன்னைக்கு தமிழ் பேச தெரிஞ்ச , உலகத்தில் உள்ள அத்தனை உள்ளங்களும் நேசிக்கும் - ஒரு மகா மனிதன் , நிஜமாகவே காந்தம்..!

சமீபத்துல நான் படிச்ச கட்டுரை ஒன்னு, நம்ம வாசகர்களுக்கு பயன்படுமே என்று கருதி , உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்...

ரஜினிகாந்த் சொல்லும் அந்த மெசேஜ் , நம் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய ஒன்று...!

அவர் பகிர்ந்துகொண்ட குட்டிக் கதை என்னவாம் தெரியுமா?

மூணு தவளைகள் இருந்ததாம். ஒரு மலைக்கு முன்னால் மூன்றும் ஒன்று கூடியதாம். மலைக்கு மேல இருக்கற கோயிலுக்குப் போக முடிவெடுத்ததாம். ஆனா, அது ரொம்ப ஆபத்தான மலை. பாம்பு, மிருகங்கள் என்று கொடூர ஜந்துக்கள் உலவும் இடம். போதாக்குறைக்கு, தவளைகள் மலைக்கு மேல் போய்விடக்கூடாது என்று வேறு சில சக்திகளும் முடிவு செய்தது.

முதலில் ஒரு தவளை மலை மேல் ஏற ஆரம்பித்த உடனேயே, ‘போகாதே போகாதே செத்துடுவே… பின்னால் பார்… பாம்பு படமெடுக்குது’ என்று குரல் கேட்டது. தவளை திரும்பி வந்துவிட்டது. அடுத்த தவளை ஏறியது. அதே குரல், ஆனா தவளைகண்டுக்கவில்லை. தொடர்ந்து பயமுறுத்தல் குரல் அதிகமாக , அதிகமாக - ஒரு கட்டத்தில் ரெண்டாம் தவளையும் கீழே வந்துவிட்டது.

இப்போது மூன்றாம் தவளை ஏற ஆரம் பித்தது.
அதே மிரட்டல் குரல்கள்… இப்போது சில மிருகங் களின் சத்தங்களும் கேட்க ஆரம்பித்தது. ஆனால் தவளை எதற்குமே ரியாக்ட் பண்ணவில்லை. நேராக மலை உச்சியில் இருந்த கோயிலை அடைந்த பிறகுதான் நின்றது!

இந்தக் கதையைச் சொல்லி நிறுத்திய ரஜினி. ‘அந்த மூணாவது தவளை மட்டும் இதை சாதிக்க என்ன காரணம் தெரியுமா? அதுக்குக் காது கேட்காது. அதனால் எந்த பயமுறுத்தலும் காதில் விழாமல், தன் லட்சியம் மட்டுமே மனதில் இருக்க… அது சாதிக்க முடிந்தது. நாமளும் அப்படித்தான் இருக்கணும்..பக்தியாகட்டும், எடுத்த காரியமாகட்டும்! மனசுல ஒரு முடிவு எடுத்த பிறகு வேண்டாத மிரட்டல்களை காதுல போட்டுக்கவே கூடாது. காது கேட்காத தவளைகளாகவே முன்னேறணும்’
என்றாராம்!

Thursday, September 22, 2011

கோபம்

சில ஆண்டுகளுக்கு முன், சென்னையில் ஒருநாள் இரயில் பயணத்திற்கு முன்பதிவு செய்வதற்கு நான் வரிசையில் நின்றுகொண்டிருந்தேன். வரிசை மிக நீளமாக இருந்தது. இவ்வளவு கூட்டம் இருந்தும், ஒரே ஓர் அலுவலர் மட்டும் வேலை செய்து கொண்டிருந்தார். எப்படியும் நான் அந்த முன்பதிவு சன்னல் பக்கம் செல்ல இன்னும் அரை மணி நேரம் ஆகும் என்று தெரிந்தது. வேறு வழியின்றி, நான் கொண்டுவந்திருந்த புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன்.

அரைமணி நேரம் சென்றது. நான் பதிவு செய்யும் சன்னலை நெருங்கி விட்டேன். நான்தான் அடுத்தது. அந்த நேரம் பார்த்து, மற்றொரு அலுவலர் அடுத்த சன்னலைத் திறந்தார். எனக்குப் பின் வரிசையில் வெகு குறைந்த நேரமே நின்றுகொண்டிருந்த பலர் அந்தச் சன்னலுக்குச் சென்றனர். முன்பதிவை ஆரம்பித்தனர். அவர்களில் ஒருவர் எனக்கு முன் தன் வேலையை முடித்துவிட்டுப் போனார். அவர் என்னைப் பார்த்துச் சிரித்ததைப் போல் எனக்குத் தோன்றியது.
எனக்குள் ஏகப்பட்ட எரிச்சல், கோபம். நான் அரைமணி நேரமாய் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், எனக்குப் பின் வந்தவர்கள் அவ்வளவு நேரம் வரிசையில் நிற்கவில்லையே என்ற எரிச்சல்.

வீட்டுக்குத் திரும்பியதும், ஏன் எனக்கு எரிச்சலும் கோபமும் வந்தது என்று கொஞ்சம் ஆராய்ந்தேன். நான் வரிசையில் நிற்க ஆரம்பித்தபோது, எப்படியும் நான் வந்த வேலை முடிய அரைமணி நேரம் ஆகும் என்று தீர்மானித்துவிட்டேன். அதேபோல், அரைமணி நேரம் கழிந்ததும் என் வாய்ப்பு வந்தது. என் வரிசையில் யாரும் குறுக்கே புகவில்லை. என் வாய்ப்பை வேறு யாரும் பறித்துச் செல்லவில்லை. ஆனால், அடுத்த சன்னல் திறந்ததால், எனக்குப் பின் வந்து வரிசையில் நின்ற சிலர் எனக்கு ஈடாக, அல்லது எனக்கு முன்னதாக வாய்ப்பு பெற்றனர்.

இதைக் கண்டு நான் ஏன் எரிச்சல் கொ்ண்டேன்? என்னுடைய வரிசையில் நான் காத்திருக்கும் வரை அமைதியாக இருந்த நான், அடுத்த வரிசை, அடுத்த சன்னல் திறந்ததும் ஏன் கோபமடைந்தேன்? எனக்குப் பின் வந்தவர்கள் என்னைப் போல் நேரத்தை வீணாக்கவில்லை என்று கோபமா? அல்லது, அவர்களுக்கு என்னைவிட கூடுதல் அதிர்ஷ்டம் கிடைத்துவிட்டதே என்று கோபமா?

நியாயமாகப் பார்த்தால், எனக்குப் பின் வந்தவர்கள் ஒவ்வொருவரும் அரைமணி நேரமாவது அந்த வரிசையில் நின்றிருக்கவேண்டும்.

‘நியாயமாகப் பார்த்தால்’ என்று நாம் அடிக்கடி சொல்லிக்கொள்ளும் நீதி, நியாயங்கள் எல்லாம் நம்மைவிட மற்றவர்கள் அடையும் அதிர்ஷ்டத்தைப் பார்த்து நாம் அடையும் பொறாமையை நியாயப்படுத்த நாம் சொல்லிக்கொள்ளும் சாக்கு போக்குகள்.

என் எரிச்சல், கோபம் எல்லாம் எனக்கு ஒன்றை மட்டும் மிகத் தெளிவாகச் சொல்லித் தந்தன.
என் மனம் இன்னும் கொஞ்சம் பரந்து விரிய வேண்டும் என்ற உண்மையை இந்தக் கோபம் எனக்கு உணர்த்தியது.

-- From SIPFriends

Wednesday, September 14, 2011

வாழ்க்கை வசப்படும்

சில பொழுதாவது சோகப்படு,

ஆனந்தத்தின் அருமை புரியும்.

யாருக்காவது கண்ணீர் விடு,

புன்னகையின் பெருமை புரியும்.

ஒருநாளாவது பணமில்லாமல் ஊர்சுற்று,

வறுமையின் கொடுமை தெரியும்.

மாளிகைவிட்டு மண் குடிசைக்கு வா,

அன்றாடங்காய்ச்சியின் அழுகுரல் புரியும்.

மொழிபுரியாத தேசத்திற்க்குச் செல்,

கல்வியின் அவசியம் தெரியும்.

அன்பிற்குரியவர்களிடமிருந்து விலகிப்பார்,

மரணத்தின் வேதனை புரியும்.

குற்றவாளிகளின் கதறலைக் கேள்,

முன்கோபத்தின் பின்விளைவு புரியும்.

காலைப்பத்திரிகை விற்பனை பின்தொடர்,

வாழ்க்கையின் வேகம்தெரியும்.

கடற்கரையில் குடிநீர் விற்பனைக் கேள்,

வாழ்க்கையின் தாகம் புரியும்.

உழைக்கும் சிறுவர்களை சற்றுப்பார்,

வாழ்க்கையின் அச்சம் தெரியும்.

உயர்ந்தவர்களின் வரலாறு படி,

 வாழ்க்கையின் வலி புரியும்.


-- வலைபதிவிலிருந்து

Monday, September 12, 2011

பரமார்த்த குரு கதை - பத்திரிகை

"குருநாதா! நாம் ஒரு ஓலைச் சுவடி பத்திரிகை ஆரம்பித்தால் என்ன?" என்று கேட்டான் முட்டாள்.
"பத்திரிகையா? அதனால் நமக்கு என்ன லாபம்?" என்றார் பரமார்த்தர்.
"தினம் தினம் நம்மைப் பற்றிப் புகழ்ந்து எழுதிக் கொள்ளலாம். நமக்குப் பிடிக்காதவர்களை விருப்பம் போல் திட்டலாம்" என்றான் மூடன்.
"அப்படியானால் நம் பத்திரிகைக்குத் 'தினப் புளுகு' என்று பெயர் வைக்கலாம்" என்றார் குரு.

"பெயருக்குக் கீழே "கெட்டிக்காரன் புளுகு - எட்டு நாள் உண்மை!" என்று போடலாம்" என்றான் மண்டு.

அன்று முதல் பரமார்த்தரின் மடம், பத்திரிகை அலுவலகம் ஆயிற்று. பரமார்த்தர், 'தினப் புளுகு' நாளிதழின் ஆசிரியராக பதவி ஏற்றுக் கொண்டார். மட்டியும், மடையனும் நிருபர்களாக நியமிக்கப்பட்டனர்.

இருட்டத் தொடங்கியதும், நிருபர்களான மட்டியும், மடையனும் வெளியே புறப்பட்டனர். அப்போது அந்த நாட்டு அரசன், நகர சோதனை செய்வதற்காக மாறு வேடத்தில் புறப்பட்டான்.

அதைக் கண்ட மட்டி, "அரசர் ஏன் மாறு வேடத்தில் போகிறார்?" என்று கேட்டான். "திருடுவதற்காக இருக்கும்" என்றான் மடையன்.
"ஒவ்வொரு வீடாக எட்டிப் பார்க்கிறாரே, ஏன்?" என்று சந்தேகம் கொண்டான், மட்டி.

"எந்த வீட்டில் கொள்ளையடிக்கலாம் எனத் திட்டம் தீட்டுகிறார்" என்று விளக்கினான், மடையன் "அப்படியானால் இதைச் சும்மா விடக் கூடாது. முதல் பக்கத்திலேயே பெரிதாக எழுத வேண்டும்!" என்றான் மட்டி.

மடத்துக்கு வந்ததும், திரட்டி வந்த செய்திகளை எழுதத் தொடங்கினார்கள்.
வேலியே பயிரை மேய்கிறது! பொதுச் சொத்தைக் கொள்ளையடிக்க அரசரே திட்டம்!! இரவு நேரத்தில், மாறு வேடத்தில் ஒவ்வொரு வீடாக எட்டிப் பார்த்தார். இந்தத் தலைப்பின் கீழ், அரசரைக் கண்டிபடித் தாக்கி எழுதினார்கள்.
மட்டியும் மடையனும் கீழ்க்கண்டவாறு செய்திகளை எழுதினார்கள்.
அரசு பணத்தில் அட்டகாசம்! தளபதி தம்புசாமி குடித்து விட்டுக் கலாட்டா!
அறிவுகெட்ட அமைச்சர் அப்புசாமி, ஆறு கட்டு சுருட்டு லஞ்சம் வாங்கினார்.
ஊழலோ ஊழல்! மந்திரி மலர்வண்ணன் மாடி வீடு கட்டிய மர்மம் என்ன?
இளவரசர் இந்திரனின் லீலை! இளம் பெண்ணின் கையைப் பிடித்திழுத்து வம்பு!

இதே போல் தங்களுக்குப் பிடிக்காதவர்களை எல்லாம் விருப்பம் போல் தாக்கி எழுதினார்கள்.

"நம்மைப் பற்றிக் கொஞ்சம் புகழ்ந்து எழுதிக் கொள்வோமே!" என்றான் முட்டாள். "என்ன எழுதுவது?" எனக் கேட்டான் மூடன்.

சுருட்டு மன்னர் பரமார்த்தரின் சாதனை! ஒரே நாளில் தொடர்ந்து முப்பது சுருட்டு பிடித்தார்! என்று எழுதினான், முட்டாள்.

'மண்ணில் புரளுவது எப்படி?' என்ற தலைப்பில் மண்ணில் புரளுவதால் உடல் நலம் ஏற்படும் எனப் பேட்டி கொடுத்தான் மட்டி!

'தொப்பை வளர்ப்பது எப்படி?' என்ற ஆராய்ச்சிக் கட்டுரையை 'அறிவியல்' பகுதியில் எழுதினார் பரமார்த்தர்.

'பரமார்த்தருக்குச் சிலை! மக்கள் போராட்டம்! 'தத்துவத் தந்தை' பரமார்த்த குருவுக்கும், அவரது சீடர்களுக்கும் சிலை வைக்க வேண்டும் என்று கோரி, மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்தச் சிலையை அரண்மனைக்கு எதிரேதான் வைக்க வேண்டும் என்றும் மக்கள் கோஷமிட்டபடி ஊர்வலம் சென்றார்கள்!' இதே போல் ஒவ்வொருவருக்கும் தங்களைப் பற்றிக் கண்டபடி கிறுக்கி வைத்தனர்.

எல்லாவற்றையும் கொண்டு போய்ப் பரமார்த்தரிடம் கொடுத்ததும், "எல்லாம் நன்றாகத்தான் எழுதியிருப்பீர்கள். விடிந்ததும் விற்றுவிட்டு வாருங்கள்" என்று கூறிவிட்டுப் படுத்து விட்டார்.

பொழுது விடிந்ததும், சீடர்கள் பத்திரிகைகளை எடுத்துக் கொண்டு விற்கப் போனார்கள்.

'தினப் புளுகு வாங்கலையோ, தினப் புளுகு! நாலு பக்கம் நாற்பது காசு!' என்று கத்தினான் முட்டாள்.

சிலர் ஓடிவந்து ஓலையில் எழுதப்பட்ட பத்திரிகையை வாங்கிப் பார்த்தனர். செய்திகளைப் படித்து விட்டு அதிர்ச்சி அடைந்தனர். செய்தி, அரசருக்கும் மற்ற அமைச்சர்களுக்கும் எட்டியது. நீதி தவறாத மன்னனைப் பற்றியும், அவனது மந்திரிகளைக் குறித்தும் கண்டபடி தவறா எழுதியதற்காகப் பரமார்த்தர் மீதும், சீடர்கள் மீதும் 'குற்றப்பத்திரிகை' வாசிக்கப்பட்டது.

"பரமார்த்தரோ, "இதெல்லாம் உண்மை என்று யார் சொன்னது? பத்திரிகையின் பெயரைப் பாருங்கள்; 'தினப் புளுகு' என்று தானே போட்டிருக்கிறோம்" என்று கூறினார்.

அதன் பின் குருவும், சீடர்களும் விடுதலை செய்யப்பட்டனர்..

Thursday, August 11, 2011

தமிழ்


தடுக்கி விழுந்தால் மட்டும் அ,ஆ
சிரிக்கும்போது மட்டும் இ,ஈ
சூடுபட்டால் மட்டும் உ,ஊ
அதட்டும்போது மட்டும் எ,ஏ
ஆச்சர்யத்தின்போது மட்டும் ஒ,ஓ
வக்கனையின்போது மட்டும் ஒள
விக்களின்போது மட்டும் ஃ !

என்று தமிழ்பேசி மற்ற நேரம் வேற்று மொழி பேசும் தமிழர்களிடம் சொல்லுங்கள் உன் மொழி தமிழ் மொழியென்று !!!!
தமிழ் நம் அடையாளம்!

-- இணையத்திலிருந்து

Monday, August 8, 2011

முட்டாள் சீடர்களும் பரமார்த்த குருவும் - நொண்டிக்குதிரை


பரமார்த்த குருவுக்கு ஒரு பணக்காரன் இலவசமாக ஒரு குதிரையைக் கொடுத்தான்.
அந்தக் குதிரையோ கிழடு தட்டிப் போயிருந்தது. ஒரு கண் நொள்ளை! ஒரு காது மூளி! முன் கால்களில் ஒன்று நொண்டி! பின் கால்கள் வீங்கிப் போய் இருந்தன.
உடம்பு பூராவும் சொறிபிடித்து, பார்ப்பதற்கு அசிங்கமாக இருந்தது. இருந்தாலும், பரமார்த்தருக்கும் சீடர்களுக்கும் பரம சந்தோஷம். 'பணம் செலவு செய்யாமல் இலவசமாகக் கிடைத்ததே!' என்று நினைத்தனர்.

"குருவே! கடிவாளம் கட்டுவதற்கு வார் இல்லை. அதனால் வைக்கோல் பிரியைச் சுற்றி விடலாம்!" என்று அப்படியே செய்தான் மட்டி.

குரு உட்காருவதற்காக, கிழிந்து போன பழைய கந்தல் கோணி ஒன்றைக் குதிரைமேல் போட்டான் மண்டு. எருக்கம் பூவைப் பறித்து மாலையாக்கி குதிரையின் கழுத்தில் அணிவித்தான், முட்டாள்.

இவர்கள் செய்வதைப் பார்ப்பதற்கு ஊரே கூடி விட்டது. குதிரைக்கு எல்லா அலங்காரமும் முடிந்தது.

தொந்தியும், தொப்பையுமாய் இருக்கும் பரமார்த்தர், குதிரையின் மேல் பெருமையோடு ஏறி உட்கார்ந்தார். அவ்வளவுதான்!

கனம் தாங்காமல் வலியால் குதிரை அலற ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாய் அப்படியே படுத்து விட்டது.

"சே, சே! இதென்ன சண்டித்தனம் பண்ணுகிறது?" என்று சலித்துக் கொண்டே கீழே இறங்கினார் குரு.

முட்டாளுக்கு ஒரு யோசனை தோன்றியது. கையில் வைத்திருந்த கொள்ளிக் கட்டையைக் கொண்டு போய் குதிரையின் காலில் வைத்தான். உடனே அது விலுக்கென்று உதைத்துக் கொண்டு எழுந்தது. இப்படியும் அப்படியுமாக கொஞ்ச தூரம் ஓடி நின்றது.

மறுபடியும் குரு அதன் மேல் உட்கார்ந்தார். இப்போது மட்டி, அதன் வாலைப் பிடித்து முறுக்கினான். கோபம் கொண்ட குதிரை எட்டி ஓர் உதை விட்டது.

அது உதைத்த உதையில் கீழே விழுந்து புரண்ட மட்டிக்கு நாலு பற்கள் உடைந்து விட்டன! வாயெல்லாம் ரத்தம்.
இதை எல்லாம் பார்த்த குருவுக்கு உதறல் எடுத்தது.

சீžடர்களே! எனக்குப் பயமாக இருக்கிறது. நான் கீழே இறங்கி விடுகிறேன்!" என்றார்.

"குருவே! நீங்கள் கவலையே பட வேண்டாம். அப்படியே உட்கார்ந்து இருங்கள். நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்!" என்று பதில் சொன்னான் முட்டாள்.

மண்டுவுக்கும் மடையனுக்கும் வேறு ஒரு யோசனை உதித்தது.

குதிரைக்கு முன்னால் நின்று கொண்டு, முகத்தைக் கோணலாக்கி, கண்களை உருட்டி, உதட்டைப் பிதுக்கி, "ஆ....ஊ....ஊ..." என்று ஊளையிட்டுப் பயம் காட்டினார்கள்.

இதனால் குதிரை ஒரேயடியாக மிரண்டு, மெல்ல மெல்லப் பின் பக்கமாக நடக்க ஆரம்பித்தது! குருவுக்கும், சீடர்களுக்கும் அதிசயமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. சுற்றி இருந்தவர்கள் கைதட்டிச் சிரிக்க ஆரம்பித்தார்கள்.

தொடர்ந்து பின்பக்கமாகவே குதிரை ஓடவும் தொடங்கியது.

"நொண்டிக் குதிரை! நொள்ளைக் குதிரை! குருவுக்கேற்ற குதிரை! கழுதைபோல எட்டி உதைக்கும்! நாயைப் போல் ஆளைக் கடிக்கும்! ஓரம் போங்கோ! வழியை விடுங்கோ!" என்று பாடியபடி சீடர்கள் போய்க் கொண்டு இருந்தனர்.

பின்பக்கமாகவே ஓடுவது குதிரைக்குப் பழகி விட்டது.

அப்போது அடுத்த ஊரின் எல்லை வந்தது. அங்கிருந்த மணியக்காரன் இவர்களை நிறுத்தினார்கள்.

"வெளியூர்க் குதிரைக்கு வரி கட்ட வேண்டும். பத்துப் பணம் எடுங்கள்" என்றான்.

"வரியா? நான் ஏறி வருகிற குதிரைக்கு வரிக வாங்கலாமா? அதுவும் இது இனாமாகவே வந்த குதிரை. இதற்கு வரி கட்ட மாட்டோம்!" என்று கூறினார் குரு.

"எதுவானாலும் சரி. வரி கொடுக்காவிட்டால் விடமாட்டேன்" என்று சொல்லி அவர்களை மடக்கினான், மணியக்காரன்.

"நாம் கொடாக்கண்டன் என்றால் இவன் விடாக்கண்டனாய் இருக்கிறானே!" என்று நினைத்து ஐந்து பணம் கொடுத்தனர்.

"இன்னும் ஐந்து பணம் கொடுங்கள்"

"ஒரு குதிரைக்கு ஐந்து பணம்தானே வரி?"

"ஒரு பக்கம் மட்டும் போகும் குதிரைக்குத்தான் ஐந்து பணம். உங்கள் குதிரை பின்னாலும் போகிறதே!"

"இதென்ன அநியாயம்?" என்று வருத்தப்பட்டு மேலும் ஐந்து பணம் தந்தனர்.

"இந்தக் குதிரையால் நமக்கு எவ்வளவு பணம் நஷ்டமாகிறது?" என்று சொன்னபடி பயணத்தைத் தொடர்ந்தனர்.

ஒரு வழியாக ஊருக்குள் நுழைந்து, ஒரு மடத்துக்குப் போனார்கள். அப்போது இரவு நேரம். எல்லோருக்கும் களைப்பாக இருந்ததால், குதிரையைக் கட்டிப்போட மறந்து, தூங்கி விட்டனர்.

காலையில் எழுந்து ஆளுக்கொரு பக்கமாகத் தேடிக் கொண்டு போனார்கள்.

கடைசியில் ஒரு வயலுக்குப் பக்கத்தில் அந்தக் குதிரை கட்டப்பட்டு இருந்தது!

"இது இரவு முழுவதும் என் வயலில் இறங்கி பயிர்களை எல்லாம் நாசம் செய்து விட்டது. அதற்குப் பதிலாகப் பத்துப் பணம் கொடுத்தால்தான் குதிரையை விடுவேன்" என்று சொன்னான், அதைக் கட்டி வைத்திருந்த உழவன்.

அவனிடம் பேரம் பேசி நான்கு பணம் கொடுத்து விட்டுக் குதிரையை ஓட்டி வந்தனர்.

"" இந்தக் குதிரையால் நமக்குப் பெரும் தொல்லை. என் மானமே போகிறது.! பேசாமல் இதை விட்டு விடலாம்! என்று வருத்தப்பட்டார் குரு.

அப்போது அங்கிருந்த ஒருவன், குதிரைக்குப் பீடை பிடித்துள்ளது. அதனால்தான் இப்படி ஆகிறது. அந்தப் பீடையைக் கழித்து விட்டால் எல்லாம் சரியாகி விடும். செலவோடு செலவாக எனக்கும் ஐந்து பணம் கொடுங்கள் என்று யோசனை சொன்னான். குருவும், žடர்களும் மூக்கால் அழுது கொண்டே அவனிடம் பணம் கொடுத்தனர்.

பிறகு, குதிரையின் ஒரு காதைப் பிடித்துக் கொண்டு "ஆ! பீடையெல்லாம் இந்தக் காதிலேதான் இருக்கிறது. இதனால்தான் ஏற்கனவே ஒரு காதை அறுத்திருக்கிறார்கள். இப்போது இந்தக் காதையும் அறுத்து விட்டால் சரியாகி விடும்!" என்றான், ஏமாற்றுக்காரன்.

உடனே மட்டி, மண்ணில் விழுந்து புரண்டு, "சீக்கிரம் காதை அறுங்கள்!" என்று குதித்தான். மூடனோ ஓர் அரிவாளைத் தீட்டிக் கொண்டு வந்து கொடுத்தான்.

எல்லோரும் பிடித்துக் கொள்ள, ஏமாற்றுக்காரன், குதிரையின் காதை அறுத்து எடுத்தான்! குதிரையோ வலி தாங்காமல் கீழே விழுந்து கதறியது. பிறகு உயிரை விட்டது!

எல்லோரும் அறுத்த காதைக் கொண்டு போய் ஆழக் குழி தோண்டிப் புதைத்தனர்.

"ஒழிந்தது பீடை! இனி மேல் கவலையில்லை!" என்றான், ஏமாற்றுக்காரன்.

கொலைகார பரமார்த்த குருவும் சீடர்களும் மகிழ்ச்சியோடு அடுத்த ஊருக்குப் புறப்பட்டார்கள்.

Monday, August 1, 2011

நாலணா நண்பேன்டா!


திடுதிப்புன்னு இப்படி பண்ணுவாங்கன்னு நான் நினைச்சு கூட பாக்கலை பாஸ்.. பொசுக்குன்னு இனிமே நாலணா செல்லாதுன்னுட்டாங்க..
நாலணா நம்ம வாழ்க்கைல எப்படி எல்லாம் விளையாடி இருக்கு. என்னமோ டிவி சீரியல்ல கால்ஷீட் சொதுப்புற நடிகைக்கு போட்டோ மாட்டி மாலை போட்டுவிடற மாதிரி, நாலணாவுக்கு கல்தா குடுத்துட்டாங்க. என்ன போங்கா இருக்கு பாருங்க..
ஸ்கூல் போகும்போது பாக்கெட் மணியா எப்பவாச்சும் 25 காசு குடுப்பாங்க. அந்த வயசுல பாக்கெட்ல அந்த நாலணா காயின் இருக்கும் போது ஒரு சந்தோஷம் பொங்கும் பாருங்க. இன்னிக்கு பாக்கெட்ல கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுன்னு நாலு கார்டு வெச்சிருந்தாலும் அந்த நாலணா காசுக்கு இதெல்லாம் ஈடாகாது பாஸ்!
பத்து காசா இருந்தா அன்னிக்கே செலவாகிடும். நாலணாவா இருந்ததுன்னா அதை செலவு பண்ண 4 நாள் ஆகும். அதை எப்படி செலவு பண்ணினா அதிகபட்சமா அனுபவிக்க முடியும்னு பெரிய லெவல்ல திட்டம் போடணும்.
இண்டெர்வெல்ல ஸ்கூல் வாசல்ல இருக்க ஆயா கடைக்கு போனா, அங்கே செமத்தியான கும்பல் இருக்கும். கய்யாமுய்யான்னு பசங்க ஒரே சத்தம் போட்டுகிட்டு இருப்பாங்க.
நெல்லிக்கா, கமர்கட், எலந்த பழம், கலாக்கா, மாங்கா பத்தை, பேரு தெரியாத ஒரு ஸ்வீட்டு... இன்னும் என்னென்னமோ இருக்கும். சின்ன பிளாஸ்டிக் விரிப்புல ஒரு மினி சூப்பர் மார்கெட்டே கிடக்கும். 'லக்கி கமர்கட்'னு ஒரு ஐட்டம்.. நாம கமர்கட் வாங்கி வாய்ல போட்டு கடிச்சு பாக்கணும்.. நமக்கு அதிர்ஷ்டம் இருந்தா கமர்கட்டுக்கு உள்ள காசு இருக்கும்.. அதிகபட்சமா நாலணா கூட கிடைக்க வாய்ப்பிருக்கு.
பள்ளிக்கூடம் வாசல்ல கடைபோட்டிருக்க ஆயாவோட கஜானா ஒரு சின்ன துணி தான். அந்த துணிக்கு அடில 5, 10, 20, 25, 50 காசு சில்லரைங்க கிடக்கும். ஆயா 'கஸ்டமர்'களுக்கு தேவையானதை எடுத்து கொடுத்துகிட்டே, "உனக்கு என்னா வேணும்..? உனுக்கு..? தம்பி.. வாங்கியாச்சுன்னா நிக்காத.. போ.."ன்னு பேசிகிட்டே வியாபாரத்தை நடத்தும். ஆயா மீதி சில்லரையை எடுத்து குடுக்கற அழகே தனி. குனிஞ்சு காசை பாக்காமலேயே கரெக்ட்டா கையால மீதி காசை எடுத்து குடுக்கும்.. பின்ன, காசை எடுக்க குனிஞ்சா அந்த அரை செகண்ட்ல பயபுள்ளைங்க நெல்லிக்காய அபேஸ் பண்ணிடுவானுங்களே.. ஆயா செம உஷாரு..!
ஆனா, எங்க 'பர்சேஸிங் பவரை' நம்பி கடை போட்ட அந்த ஆயாவோட தைரியத்தை இப்ப நினைச்சு பாத்தாலும் ஆச்சர்யமா இருக்கு.
பத்தாக்குறைக்கு பக்கத்துல குச்சி ஐஸ் வண்டி நிக்கும். "பால் ஐஸ்.. கப் ஐஸ்"னு அப்பப்ப கத்துவார் 'ஐஸ்'கார்.
கலர் ஐஸ் தின்னுருக்கீங்களா? ஒரு பட்டைல ஐஸ் வெச்சிருப்பாங்க.. மஞ்சள், ரோஸ், சிகப்புன்னு கலர் கலரா இருக்கும். ஐஸை தின்னு முடிச்ச பிறகு, நாக்கை வாய்க்கு வெளிய நீட்டி அது கலராகி இருக்கான்னு பாப்போம்.. ஐஸ் தீர்ந்த பின்னும் குச்சியை உறிஞ்சிட்டு நாக்கை சப்பை கொட்டுவோம்.
ரெண்டு மூணு பசங்க சேர்ந்து ஜாயிண்ட் அக்கவுண்ட்ல சேமியா ஐஸ் வாங்கி பங்கு போட்டுக்குவாங்க.. சேமியா ஐஸை தின்ன பிறகும் வாய் மேலண்ணத்துல சேமியா ஒட்டிகிட்டிருக்கும்.
பாக்கெட்ல சில்லரை காசு இருந்துச்சுன்னா, பால் ஐஸ் திங்கலாமா இல்லை நெல்லிக்கா வாங்கலாமானு மனசுக்குள்ள 'அந்நியன்' விக்ரம் மாதிரி ஒரு 'மல்டிபில் பெர்சனாலிட்டி' போராட்டமே நடக்கும்.

சில நேரத்துல ஆசைப்பட்டு பால் ஐஸ் வாங்கிடுவோம். ஆனா, பால் ஐஸ் வாங்கின உடனே 'பேசாம கமர்கட்டும், மாங்கா பத்தையும் வாங்கியிருக்கலாமோ..? பால் ஐஸ் சீக்கிரமா தீர்ந்துடும். கம்மர்கட் வாங்கியிருந்தா அதை கிளாஸ் நடக்கும்போது கூட திங்கலாம்..'னு மனசு கிடந்து அடிச்சுக்கும்.
அந்த பாழாப்போன ஐஸ் வண்டிக்காரன் வேற சும்மா இருக்காம ஐஸ் வண்டி மூடியை டமால் டமால்னு சத்தத்தோட தொறந்து தொறந்து மூடி, பிசினஸ் டெக்னிக்கால நம்மை கலங்கடிப்பான். அதை தொறந்து உள்ளேயிருந்து குச்சி ஐஸை எடுக்கும் போது சில்லுன்னு காத்து அடிக்கும் பாருங்க.. இப்பல்லாம் வீட்லயும் ஆபிஸ்லயும் ஏசி போட்டா வர குளிர் காத்து எல்லாம் அதும் முன்னாடி தூசி !
கிளாஸ்ல டீச்சர் பாடம் நடத்தும்போது, யாருக்கும் தெரியாம நெல்லிக்காயையோ, மாங்கா பத்தையையோ நைசா வாய்ல போட்டு மெல்லற சந்தோஷத்தை எந்த வார்த்தைகளால முழுசா விளக்கிட முடியும்..? இந்த சுவை என்று பிடிபடாத அந்த ரகசிய ருசி.. இனிப்பா.. உப்பா.. காரமா.. துவர்ப்பா.. இல்லை.. பால்யம். பால்யத்தின் ருசி அது.!
சில நேரம் கைல காசே இருக்காது.. இருந்தாலும் ஏனோ கடைகிட்ட போய் நின்னு, எவன் என்ன வாங்கறான்னு பாத்துகிட்டு, விண்டோ ஷாப்பிங் பண்ணிட்டு வருவோம்.
பாக்கெட் மணி காசுல பலூன், கோலி, பீப்பீ, பிகில்னு விளையாட்டு பொருட்களை வாங்கறது ஒரு பக்கம் இருக்க, காசையே விளையாட்டு பொருளா பயன்படுத்தறதும் உண்டு.
10 காசு 20 காசு நாணயத்தை பேப்பர் கீழ வெச்சு, பென்சிலால பேப்பர் மேல தேய்ப்போம்.. அந்த 'காசு அச்சு' பாக்க அழகா இருக்கும். எங்க கிளாஸ்ல கணக்கு டீச்சர் பாடம் நடத்தும் போது, நோட்டுல கடைசி பக்கங்கள்ல காசை வெச்சு, 'காசு அச்சு' வரைஞ்சுகிட்டிருப்போம்.. என கணக்கு நோட்டுல அப்படி 10 காசு 20 காசு அச்சா கிட்டத்தட்ட 35 ரூபாய் வரைக்கும் வரைஞ்சு வெச்சிருந்தேன்.
என் பக்கத்து சீட்டு ஆர்.பாலு 38 ரூபாய் 80 காசுக்கு அவன் நோட்டுல 'காசு அச்சு' வரைஞ்சு வெச்சிருந்தான். கணக்கு நோட்டுல யாரு அதிக ரூபா சேக்கறாங்கன்னு ஒரு நாள் எங்களுக்குள்ள கடும் போட்டி. என் நேரம்.. நான் வரையறதுக்கு என் கணக்கு நோட்டுல பேப்பர் வேற கம்மியா இருந்தது.
பத்து காசும் இருபது காசும் சைஸ்ல பெருசு. வரைய நோட்டுல பக்கம் பத்தாது. அதனால ரெண்டு பேரும் பேச்சு வார்த்தை நடத்தி, ஆட்டத்துல 25 காசையும் பயன்படுத்திக்கலாம்னு கலந்துரையாடி கூட்டுத் தீர்மானம் போட்டோம். பந்தயம்னு வந்த பிறகு பணம் இல்லாமலா..?
பந்தயப் பணம் = 25 காசு.
ஸ்கூல் விட்டு வீட்டுக்கு போனதும் விளையாடக் கூட போகாம, அம்மாகிட்ட கெஞ்சி கூத்தாடி நாலணா காயின் வாங்கி, உற்சாகத்தோட 'காசு அச்சு 'ஆட்டத்தை ஆரம்பிச்சேன்.
கள்ள நோட்டு அடிக்கறவன் கூட அவ்ளோ உஷாரா வேலை செய்வானானு தெரியாது பாஸ்.. நான் ரொம்ம்ம்ம்ப கவனமா கண்ணு முழிச்சு 'காசு அச்சு' வேலைய செஞ்சேன்.
கணக்கு நோட்ல கொஞ்சம் பக்கம் தான் பாக்கி இருந்தது.. ஸோ.. கவனமா இடத்தை வீணாக்காம வரையணும்.. கணக்கு நோட்டை எடுத்து, ரெண்டு பேப்பருக்கு நடுவுல நாலணாவை வெச்சேன்.. பென்சில் ஊக்கு கூரா இருந்தா இதுக்கு சரி வராது. அதனால, என் புத்திய கூர் தீட்டி, பென்சில் ஊக்கை மொண்ணையாக்கினேன். (இந்த மாதிரி நுணுக்கம் எல்லாம் சின்ன வயசுல நமக்கு டக்கு டக்குன்னு தோணும்.. வளர வளர புத்தி தேயும்) ஜாக்கிரதையா பென்சிலால பேப்பர் மேல தேய்ச்சேன்.. முதல் 25 காசு அச்சு நல்லா வந்திருச்சு..
வெறியோட மேற்கொண்டு வரைய ஆரம்பிச்சேன். அம்மா நான் என்னமோ கணக்கு பரிட்சைக்கு படிக்கறேன்னு நினைச்சுகிட்டு தூங்க போயிட்டாங்க.
பென்சிலை பிடிச்சு தேய் தேய்னு தேய்ச்சதுல கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் கருப்பு தொப்பி போட்டுகிச்சு. நகம் பூரா அழுக்கு.
ராத்திரி பூரா கண்ணு முழிச்சு 35 ரூபாய 68.75 ரூபாயா ஆக்கி முடிக்கும் போது பொழுது பொலபொலன்னு விடிஞ்சு கோழி, சேவல், வாத்து எல்லாம் கூவிடுச்சு.
கண்ணு எரிச்சலோட ஸ்கூலுக்கு போய் ஆர்.பாலுவை தேடினா அவனை காணோம்.. சரி அவன் வரதுக்குள்ள இன்னும் நோட்டுல இருக்க இண்டு இடுக்குல 25 காசு அச்சு வெக்கலாம்னு பேப்பரை புரட்டிட்டிருக்கேன்.... ஆர்.பாலு வந்துட்டான்.. அவன் கண்ணு ரெண்டும் ச்சும்மா கிரிக்கெட் பால் மாதிரி செவந்து கிடந்தது. பெருமையா என் கணக்கு நோட்டை அவன்கிட்ட நீட்டினேன்.. அரைக் கண்ணை கஷ்டப்பட்டு தொறந்து பாத்தான்.. சிரிச்சான்.. தன் கைல இருந்த நோட்புக்கை எங்கிட்ட நீட்டினான். எனக்கு புரிஞ்சு போச்சு.. அவனும் ராத்திரி பூரா கண்ணு முழிச்சு.. அட போங்கடா..
நாலணா தோத்துட்டேன் !
"டேய்.. சயின்ஸ் நோட்டுல யாரு அதிகமா காசு அச்சு போடறாங்கன்னு பாப்போமா..? 25 காசு பந்தயம் " விட்ட காசை பிடிக்க வழி தேடினேன்.
"வேண்டாம்டா.." சிரிச்சுகிட்டே சொல்லிட்டு நேரா ஸ்கூல் வாசலுக்கு போனான்.
நாலணாவுக்கு கண்டபடி வாங்கி சாப்பிட்டான். கணக்கு வழக்கில்லாம செலவு பண்ணான். என் நாலணா!
அன்னிக்கு மத்தியானம் கிளாஸ்ல கணக்கு டீச்சர் என் நோட்ல இருந்த காசு அச்சை பாத்து அடிச்ச அடி எனக்கு இப்ப கூட ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பா.... வலிக்குது.
அதுக்கப்பறம் ஆர்.பாலு கூட பேச்சை கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுக்கிட்டேன். அவனைப் பார்த்தாலே வெறுப்பா வந்தது.
அடுத்த வருஷம் அவங்கப்பாவுக்கு வேலை மாத்தல் ஆனதால, ஸ்கூல்ல டிசி வாங்கிட்டு போயிட்டான்.
அப்பறம் பத்தாங்கிளாஸ் படிக்கும்போது ஒரு முறை ரோட்ல அவனை பாத்தேன். இருந்தாலும் கண்டுக்காம நகர்ந்துட்டேன். அதுக்குப் பிறகு பல வருஷங்கள் அவனை பாக்கவே இல்லை. கிட்டத்தட்ட அவன் முகமே மறந்து போச்சு.
போன வாரம் வேலை விஷயமா அவசரமா டெல்லிக்கு ஃப்ளைட்ல போக வேண்டியிருந்தது. ஃப்ளைட்ல என் சீட்ல போய் அக்கடான்னு உக்காந்தா, பக்கத்து சீட்ல வந்து ஒருத்தர் உக்கார்ந்தார்.. ஸாரி.. 'ர்' இல்லை.. 'ன்'.. உட்கார்ந்தான்.. ஆர்.பாலு. என் ஜென்ம விரோதி. என் நாலணாவை அபகரித்த நயவஞ்சகன்.
அவனை பாக்காத மாதிரி நடிச்சிடலாம்னு நான் முடிவு பண்ணின அதே நொடி, என்னைப் பார்த்து " ஹாய்.. ஆர் யூ மிஸ்டர் (என் பெயரைச் சொன்னான்)?"
ஆமாம்.. யெஸ் ரெண்டையும் கலந்து "ஆமெஸ்"னு உளறினேன்.
"என்னைத் தெரியலை.. நான் தான்டா பாலசுப்பிரமணி.. ஞாபகம் இருக்காடா.. ?" எத்தனை ' டா ' போடறான்.. மதிக்க மாட்டேங்கறான்.. மடையன்.
அப்பறம் என்னைப் பத்தி, பள்ளிக்கூடம் பத்தி, அவன் லவ் பண்ண பொண்ணைப் பத்தின்னு பத்தி பத்தியா பேசிட்டிருந்தான். எனக்கு பத்திகிட்டு வந்தது. அவன் சொன்னது சுத்தமா எதுவுமே மண்டைல ஏறல..
என் நினைவின் அடுக்குகளில் ஒளிந்து கொண்டிருந்த அந்த நாலணா இப்போது விஸ்வரூபம் எடுத்து புத்தி பூரா வியாபித்திருந்தது.
பேச்சை மாத்தறதுக்காக, "நீ இப்ப என்ன பண்ற?"ன்னேன்.
பெருமையா, "ரிசர்வ் பாங்க் ஆஃப் இண்டியால நல்ல போஸ்டிங்ல இருக்கேன்.. இப்ப 25 காசு செல்லாதுன்னு ஆர்டர் போட்டிருந்தோம் இல்லை.. அது சம்மந்தமா ஒரு கிளாரிஃபிகேஷன் கேட்டிருந்தாங்க.. நான் தான் இன்சார்ஜ்.. அதான் வந்துட்டு போறேன்.. ! "
அடப்பாவி..! அன்னிக்கு எங்கிட்டேந்து நாலணாவை பிடிங்கின.. இப்போ நாட்டுல எவனுமே நாலணாவை பயன்படுத்த முடியாம பண்ணிட்டியா..?
டெல்லி வந்ததும் கை குலுக்கிட்டு கிளம்பிட்டான். இவனை பாத்த குழப்பதுல நான் எதுக்காக டெல்லி வந்தேன்னே மறந்து போச்சு. கால, தேச, வர்த்தமான அவமானங்கள் எல்லாம் போய் ஒரு பள்ளிக்கூட பையன் மாதிரி ஆயிட்டேன்.
மேற்கொண்டு என்ன பண்றதுன்னு புரியாம பாக்கெட்ல இருந்த 25 காசு காயினை எடுத்து பாத்துகிட்டு நின்னுட்டிருக்கேன்..! வேற என்ன செய்ய முடியும் பாஸ்?!

மொத்தத்துல நாலணா இனி செல்லாது.. நம் மனதை விட்டும்!

-- விகடனிலிருந்து

Friday, July 22, 2011

நதியே நதியே - ரிதம்

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடலல்லோ
சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ
சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே (2)

தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே

தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே

காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை அறிவாய் கோடையிலே
வெட்கம் வந்தால் உரையும் விரல்கள் தொட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ

தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே வளைவுகள் அழகு
உங்கள் வளைவுகள் அழகு
ஹோ மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே
அது நங்கையின் குணமே
சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே (2)

தினம் மோதும் கரை தோரும் அட ஆறும் இசை பாடும்
...
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
...

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

தேன்கனியில் சாராகி பூக்களிலே தேனாகி பசுவினிலே பாலாகும் நீரே
தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி சேயருகே தாயாகும் பெண்ணே
பூங்குயிலே பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும்
நீர் நினைத்தால் பெண் நினைத்தால்
கரைகள் யாவும் கரைந்து போகக் கூடும்

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா.

-- கவிப்பேரரசு வைரமுத்து

Tuesday, July 12, 2011

இறைவன்!


குரங்குக்கும்
கோவில் கண்டோம் - தேங்காய்
குடிமிக்கும் தெய்வம் கண்டோம் - சொறி
சிறங்கு பயலையும் சாமி என்றால்
சீவதம் உய்வதெந்நாள்?

மொட்டையே அடித்தடித்து மண்டையில் மயிரு போச்சு
மொட்டையில் வெயிலடித்து மூளையும் கருகி போச்சு
பட்டியில் ஆடு போச்சு
பணங்காசு தானும் போச்சு
வட்டிக்கு பணங் கொடுத்தோன்
வாசலில் நின்ற போது
கட்டிய தாலியிலே
கயிறு தான் மிச்சமாச்சு.

கெட்டு நாம் போன பின்னும்
கீழென ஆன பின்னும்
இட்டிடும் கல்லை தொட்டு
இன்னுமா வணங்க வேணும்?
- துளசிதாசன்.

Friday, July 8, 2011

இப்படியாய் யாவரும் !


முதல் சந்திப்பில்

வார்த்தையின் ஊடே.

ஊர் வரை நுழைந்து

சாதியின் பெயரை

நாசூக்காக கேட்டறிவதும்.

நடிகையின் புதிய அந்தரங்கத்தை

தேநீர் விலையில் பறிமாறிக் கொள்வதும்

அடங்க மறுத்திடும்

காமக் கடும்பசிக்கு

பார்வையின் ஊடே

கூடு பாய்ந்து பசியாறுவதும்

காதலின் புதிய கணக்கை

கடக்க நேரிடுபவர்களின்

மீது திணிப்பதும்

பொதுவான ஒரு வியாதி

இருக்கத்தான் செய்கிறது

எல்லாரிடத்திலும்.
-- . லட்சுமணன்.


You may also like