Thursday, January 26, 2012

தபு ஷங்கர் காதல் கவிதைகள் - III



மௌனம்

அற்புதமான காதலை மட்டுமல்ல
அதை உன்னிடம் சொல்ல முடியாத
அதி அற்புதமான மௌனத்தையும்
நீதான்
எனக்குத்
தந்தாய்.

கோலம்
எதற்காக
நீ கஷ்டப்பட்டுக்
கோலம் போடுகிறாய்..?
பேசாமல்
வாசலிலேயே சிறிது நேரம்
உட்கார்ந்திரு, போதும்!


பூ
ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது
ஏன் இந்தப் பூ
நகர்ந்துகொண்டே இருக்கிறது?
என்று!

வானம்
நீ எப்போதும்
தலையைக் குனிந்தே
வெட்கப்படுவதால்
உன் மதிப்புமிக்க வெட்கத்தையெல்லாம்
இந்தப் பூமி மட்டுமே
தரிசிக்க முடிகிறது!
ஒரேயரு முறை
கொஞ்சம் உன் தலையை
நிமிர்த்தி வெட்கப்படேன்...
வெகுநாட்களாய் உன்
வெட்கத்தைத் தரிசிக்கத்
துடிக்கிறது வானம்!

-- தபு ஷங்கர்

Tuesday, January 24, 2012

காமராஜர் - The King Maker



மூத்தவர்கள் அரசாங்கப் பதவிகளில் இருந்து விலகி, கட்சிப் பணியாற்ற வேண்டும் என்ற 'கே.பிளான்' போட்டுக் கொடுத்த இவரே முதல் ஆளாகப் பதவி விலகினார். 'எனக்கு எந்தப் பற்றும் இல்லைன்னு காட்டினாதான் மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ண முடியும்' என்றார்!

ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பேசுவார். பத்திரிகையாளர் சாவி ஒருமுறை சந்திக்கச் சென்றபோது ஜான் கன்டர் எழுதிய இன்சைட் ஆப்பிரிக்கா என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் படித்துக்கொண்டு இருந்தாராம்!

அவரளவுக்குச் சுருக்கமாக யாராலும் பேச முடியாது. உ.பி-யில் ஒரு பிரஸ்மீட். 50 கேள்விகளுக்கு ஏழு நிமிடத்தில் பதில் சொன்னாராம். இரண்டரை மணி நேரத்தில் எட்டு ஊர்களில் கூட்டம் பேசியிருக்கிறார். இசை விழாவைத் தொடக்கிவைக்க அழைத்தார்கள். 'இசை விழாவைத் தொடக்கிவைப்பதில் பெருமைப்படுகிறேன்' என்று மட்டுமே சொல்லி விட்டு இறங்கினார்!

நாற்காலியில் உட்காருவது அவருக்குப் பிடிக்காது. சோபாவில் இரண்டு பக்கமும் தனது நீளமான கைகளை விரித்தபடி உட்காரவே விரும்புவார். முதல்வராக இருந்தபோதும் தலைமைச் செயலகத்தில் பிரத்யேகமாக சோபா வைத்திருந்தார்!

கடிகாரம் கட்ட மாட்டார். சின்ன டைம்பீஸைத் தனது பையில் வைத்திருப்பார். தேவைப்படும்போது எடுத்துப் பார்த்துக்கொள்வார்!

'ஆறாவது வரை படித்தவர்தானே! என்ற அலட்சியத்துடன் முதல்வர் காமராஜரின் அறைக்குள் அலட்சியமாக நுழைவார்கள் அதிகாரிகள். வெளியே வரும்போது அவர்களின் வால், கால்சட்டைக்குள் மடக்கிச் சொருகப்பட்டு இருந்தது!' என்று அவரது அறிவாற்றலை மெச்சினார் ஆர்.வெங்கட்ராமன்!

தான் முதலமைச்சரானபோது தன்னை எதிர்த்து முதல்வர் வேட்பாளராக நின்ற சி.சுப்பிரமணியத்தையும் அவரது பெயரை முன் மொழிந்த பக்தவத்சலத்தையும் அமைச்சரவையில் இணைத்துக்கொண்டார்!

தனது வலதுகரமாக இருந்த ஜி.ராஜகோபாலன் இறந்தபோது மட்டும்தான் காமராஜரின் கண்கள் லேசாகக் கலங்கினவாம். தாய் சிவகாமி இறந்தபோதுகூட அழவில்லை அவர்!

'தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளோடுஒட்டோ, உறவோ இல்லை. இந்தக் கட்சிகளோடு உறவு வைத் துள்ள கட்சிகளோடும் உறவு இல்லை' - காமராஜர் கூட்டிய கடைசி நிர்வாகக் கமிட்டியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இது. இதை அவரது மரண சாசனம் என்பார்கள்!

விருதுநகர் தொகுதியில் அவர் தோற்றபோது கட்சிக்காரர்கள் அழுதார்கள். 'இதுதான்யா ஜனநாயகம். ஜெயிச்சவனைக் குறை சொல்லாமல் தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்!' என்று அலட்டிக்கொள்ளாமல் சொன்னவர்.

கோடை காலத்தில் இரண்டே இரண்டு நாட்கள் குற்றாலத்தில் போய் தங்கிவிட்டு வருவார். அவரது அதிகபட்ச சந்தோஷமாக அதுதான் இருந்திருக்கிறது!

ஒன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர், பல ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த அவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம்!

இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த காமராஜருக்கு 1975 அக்டோபர் 2-ம் தேதி அதிகமாக வியர்த்தது. டாக்டர் அண்ணாமலைக்கு அவரே போன் செய்துவிட்டு, 'டாக்டர் வந்தா எழுப்பு... விளக்கை அணைச்சிட்டுப் போ' என்றார். அதுவே அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தை. டாக்டர் வரும்போது காமராஜர் அணைந்துவிட்டார்

( காமராஜர் 25 - ப.திருமாவேலன் )

Sunday, January 15, 2012

அஸ்க் லஸ்கா - நண்பன்



ஏதோ தன்னாலே உன் மேலே ….காதல் கொண்டேனே
ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே ….

அஸ்கா அஸ்கா அஸ்கா அஸ்கா
அஸ்கா அஸ்கா அஸ்கா அஸ்கா

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ – ஐ
அஸ்த் அஸ்த் லைபே
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே – லவ்
இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே

ஹுச்க் ஹுச்க் ….அஸ்கா அஸ்கா

அத்தனை மொழியிலும் வார்த்தை ஒவ்வொன்று கொய்தேன் ..
மொத்தமாய் கோர்த்து தான் காதல் செண்டு ஒன்று செய்தேன்…

உன்னிடம் நீட்டினேன் காதலை காட்டினேன் ….

ஏதோ தன்னாலே உன் மேலே ….காதல் கொண்டேனே
ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே ….

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ – ஐ
அஸ்த் அஸ்த் லைபே
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே – லவ்
இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே

ப்ளுட்டோவில் உனை நான் கூடேற்றுவேன்
விண்மீன்கள் பொறுக்கி சூடேற்றுவேன்
முக்கோணங்கள் படித்தேன்
உன் மூக்கின் மேலே
விட்டம் மட்டம் படித்தேன்
உன் நெஞ்சின் மேலே
மெல்லிடையோடு வளைகோடு நான் ஆய்கிறேன் ஒ.. ஓ…

ப்ளாட்டோவின் மகனாய் உன் வேடமா
ஆராய்ச்சி நடத்த நான் கூடமா
காதல் நோயில் விழுந்தாய்
உன் கண்ணில் கண்டேன்
நாளும் உண்ணும் மருந்தாய்
என் முத்தம் தந்தேன்
உன் நெஞ்சில் நாடிமானி வைக்க
காதல் காதல் என்றே கேட்க

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ – ஐ
அஸ்த் அஸ்த் லைபே
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே

லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே

தே ஜா வூ கனவில் தீ மூட்டினாய்
ராஜா என் மனதை ஏன் வாட்டினாய்
கப்பம் கேட்டு மிரட்டி நீ வெப்பம் கொண்டாய்
ரத்தம் மொத்தம் கொதிக்க என் பக்கம் வந்தாய்
வெண்ணிலவாக இதமாக குளிரூட்டவா

கண்ணாடி நிலவாய் கண் கூசினாய்
வெண் வண்ண நிழலை மண் வீசினாய்
புல்லில் பூத்த பனி நீ ஒரு கள்ளம் இல்லை
வைரஸ் இல்லா கணிணி உன் உள்ளம் வெள்ளை
நீ கொல்லை மல்லி முல்லை போலே
பிள்ளை மெல்லும் சொல்லைப் போலே

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ – ஐ
அஸ்த் அஸ்த் லைபே

அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே

லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே

ஓ…அத்தனை மொழியிலும் வார்த்தை ஒவ்வொன்று கொய்தேன்

மொத்தமாய் கோர்த்துதான் காதல் செண்டொன்று செய்தேன்
உன்னிடம் நீட்டினேன் காதலை காட்டினேன்

ஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே
ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே

-- கார்க்கி

Tuesday, January 10, 2012

மதுரனந்தபுரம் -- கி.பி.2212



நண்பன் கிருஷின் வற்புறுத்தலால் இந்தியா செல்லும்
சுற்றுப் பயணத்திற்கு சம்மதித்தான் மூர். அவர்களது குடும்பம் அமெரிக்காவில் குடியேறி நான்கைந்து தலைமுறைகளைக் கடந்துவிட்டது. தாத்தா என்றால் அத்தனை பிரியம் மூருக்கு. அவர் இறந்து பல வருடங்கள் கடந்துவிட்டாலும், இப்போது இந்திய சுற்றுப் பயணத்திற்கு சம்மதித்தது கூட தாத்தா பாசத்தால் தான். ஒரு தடவையாவது இந்தியாவையும் குறிப்பாக தமிழகத்தையும் தனது மூதாதையர்கள் வாழ்ந்த ஊர்களையும் பார்க்கவேண்டும் என ஆசைப்பட்டார். அவரால் ஆசைதான் பட முடிந்ததே தவிர, அதை செயல்படுத்த முடியவில்லை. எனவே அவர் ஆசைப்பட்டு, செல்ல முடியாத ஒரு இடத்திற்கு தான் போகப் போகிறோம் என நினைத்து சந்தோஷப்பட்டான் மூர்.

பயணத்திற்குத் தேவையானவற்றை எடுத்துவைக்கும்போது தாத்தவுடைய "டூரிஸ்ட் ப்லேசஸ் இன் இண்டியா" புத்தகதையும் எடுத்துக் கொண்டான். லீவ் அப்ரூவாகி, டிக்கெட் புக் செய்து, ஒருவழியாக இந்தியா வந்தே விட்டார்கள் இருவரும். டெல்லி விமான நிலையத்தில் இறங்கிய அந்த நொடி தாத்தவைத்தான் நினைத்துக் கொண்டான் மூர்.

வடஇந்தியாவில் பல இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு டெல்லியில் டெண்ட் அடித்தார்கள். ஓரிரு நாட்களில் தென்னிந்தியா செல்ல திட்டமிட்டார்கள்.

"மூர், கண்டிப்பா ஆந்திரா போகணும். அங்க திருப்பதின்னு ஒரு பில்க்ரிமேஜ் சென்டர் இருக்காம். அங்கே லட்டுன்னு ஒன்னு தருவாங்களாம். செம டேஸ்ட்டா இருக்கும்னு எங்க தாத்தா சொல்லியிருக்கார். முந்தியெல்லாம் அங்க வர்ற எல்லாருக்கும் 2 லட்டு குடுப்பாங்கன்னு எங்க தாத்தாவுக்கு அவங்க தாத்தா சொல்லியிருக்காராம். இப்போ அங்க வர்ற லோக்கல் பீப்பிளுக்கு லட்டே கிடையாதாம்.  ஒன்லி எக்ஸ்போர்ட் மட்டும் பண்றாங்களாம். பட், ஃபாரினர்ஸ் கோட்டா-ல நமக்கு குடுப்பாங்க. ஒரு பாஸ்போர்ட்டுக்கு 1 லட்டு", என்றான் கிருஷ்.

மூருக்கு லட்டின் மீது எல்லாம் ஆர்வம் அதிகமில்லை. அவனது எண்ணமெல்லாம் தமிழ்நாட்டுக்குப் போக வேண்டும் என்பதே. "சரி. போகலாம். அதை முடிச்சுட்டு கண்டிப்பா தமிழ்நாட்டுக்கு ஒரு விசிட் போடணும்" என்றான். "ஒன்னு பண்ணலாம். ரிட்டன் டிக்கெட் மும்பை-ல இருந்து போட்டிருக்கோம். ஸோ "கேப் காமரின்" (Cape Comorin) போயிட்டு, அங்க இருந்து ஒவ்வொரு இடமா பாத்துக்கிட்டே வந்து, திருப்பதியும் பாப்போம். அப்பறம்மஹாராஷ்டிரா வழியா மும்பை வந்துடுவோம்" என்றான் கிருஷ்.

ஓ.கே.  தாத்தா புக்-ல பாத்தேன். மதுரைன்னு ஒரு ப்லேஸ் இருக்கு. அங்க இருந்து கேப் காமரின் பக்கத்துல தான். நான் அந்த மதுரைக்கு ப்ளைட் டைமிங் பாக்கறேன் என்றான். இன்டர்நெட்டில் எவ்வளவு தேடியும் அவனால் மதுரை செல்லும் ப்ளைட்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியாக ஒரு ஏர்-லைன்ஸ் நிறுவனத்தின் கால்-சென்டர் நம்பரைத் தொடர்பு கொண்டான்.

பதிவு செய்யப்பட்ட கம்ப்யூட்டர் குரல் பேசியது. "தேங்க்ஸ் ஃபார் யூசிங் அவர் கால்-சென்டர் சர்வீஸ். வாட் இன்பர்மேஷன் டூ யூ நீட்?" என்று கேட்டது. ஐ நீட் ஃப்ளைட் டைமிங்ஸ் ஃப்ரம் டெல்லி டூ மதுரை? என்றான். "சாரி நோ ஸச் டெஸ்டினேஷன்" (அப்படி ஒரு இடம் இல்லை) என்று பதில் வந்தது. வாய்ஸ் ரெக்கனைஸ் சிஸ்டம் சரியில்லையோ என நினைத்து மீண்டும், ஐ ரிப்பீட், ஃப்ளைட் டைமிங்ஸ் ஃப்ரம் டெல்லி டூ மதுரை என்றான். "சாரி நோ ஸச் டெஸ்டினேஷன்". அதே பதில். மே ஐ ஸ்பீக் டூ ஏஜன்ட்? என்றான். வழக்கம் போல "ப்ளீஸ் வெயிட். யுவர் கால் வில் பீ ஆன்ஸர்டு ஷார்ட்லி" என பதில் வந்தது. சில நிமிடக் காத்திருப்புக்குப் பின், ஒரு பெண் குரல் "ஹலோ திஸ் இஸ் அஷ்வினி குப்தா. ஹவ் குட் ஐ ஹெல்ப் யூ?" என்றது.

ஹை, திஸ் இஸ் மூர். டெல்லி டூ மதுரை ஃப்ளைட் டைமிங்ஸ் வேண்டும் என்றான். கம்ப்யூட்டர் சொன்ன அதே பதில் தான் வந்தது. அந்த விமான நிலையத்தின் குறியீடு (Airport Code) தெரியுமா எனக் கேட்டாள். IXM என்றான் மூர். அந்த விமான நிலையத்தின் பெயர் "மதுரனந்தபுரம்" எனக் கூறி, அங்கு செல்லும் விமானங்களின் நேரத்தையும் சொன்னாள்.

"
நோ. அந்த ஊரின் பெயர் மதுரை தான்" என்றான் மூர். "நீங்கள் சொல்லும் அந்த ஊர் திருச்சினஹள்ளிக்கு பக்கத்தில் உள்ளது தானே?" எனக் கேட்டாள். திருச்சினஹள்ளி-யா? அது திருச்சிராப்பள்ளி (அ) திருச்சி தானே? ஏன் இப்படி எல்லா ஊர் பெயர்களையும் மாற்றிச் சொல்லிக் குழப்புகிறீர்கள்? ஐ வில் ரிப்போர்ட் திஸ் டூ யுவர் ஹையர் அஃபிஷியல்ஸ் என்றான். "நீங்கள் தான் சார் குழம்பியுள்ளீர்கள். வேண்டுமானால் இப்போதுள்ள மேப் (வரைபடம்) எடுத்துப் பாருங்கள் என்றாள்.


உடனே லேப்-டாப்பினான். அவள் சொன்னபடி தான் கொடுத்திருந்தார்கள். மூர் இப்போது தான் குழம்ப ஆரம்பித்தான். மீண்டும் "மதுரை" எனத் தேடினான். விக்கிபீடியாவில் "மதுரனந்தபுரம்" குறித்த பக்கங்கள் வந்தது. அதில் மதுரனந்தபுரத்தின் பெயர், சில நூற்றாண்டுகளுக்கு முன்பு மதுரை என இருந்தது எனக் குறிப்பிட்டிருந்தார்கள்.

அப்போது தான் அவன் கவனித்தான், "மதுரனந்தபுரம், கேரளா God's Own Country" எனக் கொடுத்திருந்தது அதிர்ச்சியாக இருந்தது. இந்திய வரைபடத்தை முழுமையாக டவுன்லோடினான். தமிழ்நாடு என்ற ஒன்றே இல்லை. தென்னிந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மட்டுமே இருந்தது.  "வாட்ட்ட்??? திஸ் இஸ் அன்பீலவபிள்" என தனக்குத் தானே கூறிக் கொண்டான்.

தாத்தாவின் புத்தகத்திலிருந்த மேப்பையும் இதையும் ஒப்பிட்டுப் பார்த்தான். கேரளா எல்லை மிகப் பெரியதாகி இருந்தது இப்போதிருக்கும் மேப்பில். பழைய மேப்பில் இருந்த மதுரை, தேனி, கம்பம், கூடலூர் போன்ற ஊர்கள், இப்போது மதுரனந்தபுரம், தேனீக்கரா, கம்பத்துப்புழா, கூடக்கரா எனப் பெயர் பெற்று, கேரள மாநிலமாக இருந்தது. முக்கியமாக எந்தெந்த கிராமங்கள் "பட்டி"யில் முடிந்தோ, அந்த ஊர் பெயர்கள் கண்டிப்பாக மாற்றப்பட்டிருந்தன.

கொஞ்சம் மேலே வந்தால், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் எல்லாம், திருச்சினஹள்ளி, தஞ்சனஹள்ளி என்ற பெயர்களுடன் கர்நாடக மாநிலமாக இருந்தது. தமிழகத்தின் தலைநகரமாக இருந்த சென்னை சென்ஹராபாத் என்றும், வேலூர்வேலுவாடா என்ற பெயர்களுடன் ஆந்திர எல்லைக்குள் இருந்தது.

எந்தந்த மாநிலங்களில் இருந்து தண்ணீர் பெறப்பட்டதோ, அந்த தண்ணீரைப் பயன்படுத்திய தமிழகப் பகுதிகள் அந்தந்த மாநிலங்களுடன் இணைக்கப்பட்டிருந்தன. அந்த அடிப்படையில் தான் ஒப்பந்தங்களே போடப்பட்டிருந்தன. 999 வருடங்களுக்கு. இந்தத் தகவல்களை கூகிள் ஆர்கைவிலிருந்து(Archive) தெரிந்துகொண்டான். அங்கு வாழ்ந்து வந்த தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறினர். அல்லது வெளியேற்றப்பட்டனர் என்ற தகவல் ஆர்கைவிலிருந்து டெலீட்டப்பட்டது அவனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

சரி. நம் மூதாதையர்கள் வாழ்ந்த ஊரின் பெயர் தான் மாறியிருக்கிறதே தவிர, ஊர் இருக்கிறது. அதையாவது போய்ப் பார்க்க வேண்டும் என நினைத்தான்.

"
ஹலோ Mr.மூர், ஆர் யூ ஹியரிங் மீ?" எனக் கேட்டாள் அஷ்வினி. அப்போது தான் அவனுக்கு அந்த ஞாபகமே வந்தது. "யா. சாரி. வேறு ஏதோ நினைத்துக் கொண்டிருந்தேன். குட் யூ ப்ளாக் 2 டிக்கெட்ஸ் டூ மதுரனந்தபுரம்?" என்றான்.

"
யுவர் பாஸ்போர்ட் நம்பர் ப்ளீஸ்" என்றாள். சொன்னான்.

கம்ப்யூட்டரில் தகவல்களைப் பார்த்தபடியே, சாரி சார். யுவர் ஃபேமிலி நேம் இஸ் நாட் "நாயர்". உங்கள் முழுப் பெயர் "மூர்த்தி அதியமான்" என உள்ளது. நீங்கள் தமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கிறேன். அது தமிழர்களுக்கு தடை செய்யப்பட்ட பகுதி. நீங்கள் அங்கு செல்ல முடியாது. வீ இண்டியன்ஸ் ஆர் அல்சோ நாட் பெர்மிட்டட் டு டாக் வித் ஸச் பீப்பிள், எனக் கூறி இணைப்பைத் துண்டித்துவிட்டாள்.

தங்கள் இனம் புலம் பெயர்ந்ததற்கான காரணம் கொஞ்சம் புரிந்தது போல இருந்தது அவனுக்கு..
-- இணையத்திலிருந்து

Wednesday, January 4, 2012

தபு ஷங்கர் காதல் கவிதைகள் - II



வரதட்சிணை
எல்லாம் கேட்டு
உன்னைக்
கொடுமைப்படுத்திவிட
மாட்டேன்.
ஆனால்
அதைவிடக்
கொடுமையாய் இருக்கும்
என் காதல்.

**
கூந்தலில் பூவாசனை வீசும்;
தெரியும்.
இந்தப் பூவிலோ உன் கூந்தல்
வாசனையல்லவா வீசுகிறது!

**

நீ கிடைக்கலாம்
கிடைக்காமல் போகலாம்
ஆனால்
உன்னால் கிடைக்கும்
எதுவும்
எனக்கு சம்மதம்தான்..

**

எனது உறக்கத்தின்
வாசலில்
நான் காவல்
வைத்திருக்கிறேன்.
உனது கனவுகளை
மட்டும் அனுமதிக்க..

**

நீ
வெயில் காரணமாக
உன் முகத்தை
மூடி கொண்டாய்..
உன் முகத்தை
பார்க்காத கோபத்தில்
சூரியன்
எங்களை சுட்டெரிகிறது!!

**

நீ
சாய்வதற்கென்றே
வைத்திருக்கும்
என் தோள்களில்
யார்யாரோ
தூங்கிச் சாய்கிறார்கள்
பயணத்தில்

**

உன் தைல விரல்களுக்கு
ஏங்குகின்றன
என் தலைவலிகள்……

**

உன்
பிறந்த நாளையும்
பிறந்த நேரத்தையும்
காட்டுகிற
ஒரு கடிகாரம்
என் அறையிலிருக்கிறது.

"கடிகாரம் ஓடலியா?"
என யாராவது கேட்டால்
சிரிப்புத்தான் வரும்..

அது
காலக் கடிகாரம் அல்ல
என் காதல் கடிகாரம்

**

மரத்தின்
கீழ்
உனக்காக
காத்திருக்கையில்
மரமேறிப் பார்க்கும்
மனசு

**

எனக்கு
லீப் வருடங்கள்
ரொம்ப பிடிக்கும்
அந்த வருடத்தில்தான்
இன்னும் ஒரு நாள்
அதிகமாய் வாழலாம்
உன்னுடன்!

**

உன் பாட்டியின்
நினைவுநாளில்
நீ ஒரு சின்ன இலையில்
சாதத்தை வைத்துக்கொண்டு
‘ கா கா ‘
என கத்துவதைப்பார்த்ததும்
‘"அட...
குயில் கா கா ன்னு கூவுதே “
என்றேன்.
நீ இலையை கிணற்று
மேல் போட்டுவிட்டு
மானைப்போல் ஓடி மறைந்தாய்.

**

சீப்பெடுத்து
உன் கூந்தலைச் சீவி
அலங்கரித்துக்கொண்டாய்..
அந்த சீப்போ
உன் கூந்தலில்
ஒரு முடி எடுத்து
தன்னை அலங்கரித்துக்கொண்டது.

**

சொல்லாமல் வந்த
புயல்மழை நாளில்
நீயும் உனது தந்தையும்
வருகையில் குடைக்கம்பி
உன் தலையில்
குத்திவிட்டதற்காக
உன் தந்தையைப்பார்த்து

கெஞ்சலாய் நீ
சுழித்த முகச்சுழிப்பில்
இன்னொரு
புயல் உருவாகி
மழையால்
அடித்துவிட்டு போனது
என்னை மட்டும் .!

**
எல்லோரும் கோயில் சிற்பங்களை
ரசித்துக்கொண்டிருந்தார்கள்
சிற்பங்களெல்லாம்
உன்னை ரசித்துகொண்டிருந்தன !

**

ஒரே ஒரு முறைதான்
என்றியும்
உன் நிழல்
என் மீது பட்டதால்
நான்
ஒளியூட்டபட்டு
கவிஞனானேன்!

**

அழகான பொருட்கள்
எல்லாம் உன்னை
நினைவு படுத்துகின்றன.
உன்னை நினைவு படுத்தும்
பொருட்கள்
எல்லாமே
அழகாகத்தான் இருக்கின்றன..

**

நீ எந்த உடையிலும்
கவிதையாகத்தான்
இருக்கிறாய்
சேலை கட்டியிருக்கும்
போதுதான்
தலைப்புடன் கூடிய
கவிதையாகிறாய்.

**

உன் கையசைவிற்காகவே
எத்தனைமுறை
வேண்டுமானாலும்
உன்னிடமிருந்து விடை பெறலாம்!

**

நீ தூங்குகிறாய்...
எல்லா அழகுகளுடனும்.
உன் கண்களை
மூடியிருக்கும்
இமைகளில் கூட
எனக்காக விழித்திருக்கிறது
உன் அழகிய காதல்.

**

என்னை
காத்திருக்க வைக்கவாவது
நீ
என் காதலியாக வேண்டும்..
கடைசிவரை
வராமல் போனால்கூட
ஒன்றுமில்லை.

**

காதலிக்கும்போது
கவிதைதான்
கிடைக்கிறது.
காதலிக்கப்படும்போதுதான்
வாழ்க்கை கிடைக்கிறது.

**

Tuesday, January 3, 2012

காதல் ஆறு



என்னுள் நீ
மெதுவாய்த் தான்
நுழைந்தாய்.
மண்ணுள் நுழையும்
வேரைப் போல,
ஆழமாய்!

முதலில் யார் உனக்கு
வணக்கம் சொல்வதென
தினமும் காலையில் சண்டை
எனக்கும், சூரியனுக்கும்!

“என்னைத்
தொட்டுப் பேசாதே!”
என்று சொல்லிவிட்டு
நீ மட்டும்
என் உள்ளங்கையைக்
கிள்ளுகிறாயே
இது என்னடி நியாயம்?

அதிக நேரம்
கண்ணாடி முன் நிற்காதே!
நீ அதைத்தான் ரசிக்கிறாய்
என நினைத்துக்
கொள்ளப் போகிறது!

நீ வரைந்த கோலம்
அழகு என்கிறார்கள்!
நீ கோலம் வரைவது
அழகு என்கிறேன்!

நீ பிறந்த பிறகுதான்
உன் அப்பாவுக்கேப்
பெயர் வைத்தார்களா?
‘அழகப்பன்’ என்று!

--  அருட்பெருங்கோ

கண்ணம்மா !


தம்பி இதுல கண்ணம்மான்னு ஒரு பேரிருக்கும். எடுத்துக்குடு” - அந்தப் பெரியவர் தன் சீட்டிலிருந்து என்னிடம் அவரது நோகியாவை நீட்டினார். நோகியா 1100. பலரது ஆல்டைம் ஃபேவரைட் மொபைல்.
பேருந்தில் ஏறும் வாசலை ஒட்டிய, இடதுபுற இரட்டை சீட்டில் நானும் உமாவும் அமர்ந்திருந்தோம். வலது புறம் அந்தப் பெரியவர் அமர்ந்திருந்தார்.
நான் கண்ணம்மாவைத் தேடினேன். மொபைலில். ம்ஹும். ‘K' வரிசையில் அப்படி ஒரு பெயரே இருக்கவில்லை.

ஐயா.. அந்தப் பேரே இல்லீங்களே..

அடென்ன தம்பி.. உன்ரகூட ரோதனையாருக்கு. நமக்கு அதெல்லாம் பார்க்கத் தெரியாததாலதானே கேட்கறேன்.. ரெண்டு நாள் பேசலைன்னா நம்பர் அவிஞ்சு போயிருமா.... இல்லீன்ற?” என்றார் கொஞ்சம், கோபமும் கொஞ்சம் எரிச்சலும் கலந்த தொனியில்.

இல்லைங்கய்யா.. கே-ல கண்ணம்மாங்கற பேர் இல்லைங்க...

அதெ எவன்கண்டான் கேயாவது ஏயாவது... நல்லாப் பார்த்து எடுத்துக்குடு.. வூட்டுல சமைக்கச் சொல்லோணும்என்றார்.
மணி இரவு ஒன்பதரை. கோவையிலிருந்து திருப்பூர் சென்று கொண்டிருந்தது பேருந்து.
நான் மறுபடி தேடிவிட்டு இல்லைங்க...என்றேன்.
அவர் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு, உமாவை நோக்கி நீ பாத்துக்குடும்மணி.. என்ர மருமவப்புள்ள மாதிரி நீயும் வெவரமாத்தான் இருப்பஎன்றார்.
நான் இந்த நேரத்துக்குள் அவரை ரசிக்கத் தொடங்கியிருந்தேன். உமா சிரித்துக் கொண்டே அந்தப் பேர் இல்லீங்கய்யா.. அவர் பார்க்கறப்ப நானும் பார்த்தேன்என்றார்.

ம்ம்ம்... அப்டீன்னா பாலு இருக்கான்னு பாரேன்என்றார்.
நான் ஃபோனை வாங்கிப் பார்த்தேன். Balu K, Bala, Balasubbu என்றொரு நான்கைந்து பாலுக்கள் இருந்தனர்.
அவரிடம் சொல்லி, கேட்டேன்.

எந்த பாலுங்க?”

என்ர மவன்தான்
உமா சிரித்துவிட்டார். அவர் பார்க்கவே, ஜன்னலோரம் முகம் திருப்பிக் கொண்டார்.

அதெல்லாம் இதுல இல்லீங்கய்யா.. என்ன பேர்ல பாலுவை நீங்க இதுல பதிவு செஞ்சிருக்கீங்கன்னு தெரியணும்என்றேன்.

என்ர மவனை மொதல்ல ஒதைக்கணும். இந்தக் கெரகம் வேணாம்னா கேட்டாத்தானே..என்று கொஞ்சம் உரக்கவே - சொல்லிவிட்டு கொஞ்ச நேரம் முந்திகூட கூப்டான் கண்ணு...என்றார்.

அப்டீன்னா இருங்கய்யா..என்று சொல்லிவிட்டு ரிசீவ்ட் காலை சோதித்தேன். பாலு.கே என்றிருந்தது.
அதை டயல் செய்து பேசுங்க..என்று அவரிடம் நீட்டினேன்.
என்னை ஆழமாக முறைத்து.. இப்ப மட்டும் எப்படிக் கெடச்சுதாம்?’ என்று கேட்டுவிட்டு அடே பாலு.. வூட்லயா இருக்கியா தோட்டத்துலயா?...’ என்று உரத்த குரலில் பேசத் தொடங்கியவர் பாலு... பாலு.... இதென்ன அவன் பேசமாட்டீங்கறான்..?’ என்று என்னைப் பார்த்துக் கேட்டார்.
நான் ஃபோனை வாங்கிப் பார்க்க ரிங்டோன் போய்க் கொண்டிருந்தது. இன்னும் அவர் எடுக்கலைங்கஎன்று சொல்லச் சொல்ல எடுத்தார் யாரோ. அந்தப் பெரியவரிடம் நீட்டினேன்.
அவர் மகன்தான். இரவே திரும்பிவிடுவதாகவும், அதனால் மருமகளை சமைத்து வைக்கச் சொல்லியும் கூறினார்.
அதற்குள் நான் என் ஃபோனில் Angry Birds விளையாட ஆரம்பித்திருந்தேன். அவர் ஃபோனை வைத்துவிட்ட கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அவருக்கு ஒரு அழைப்பு வந்தது.
எடுத்தவர் பேசத் தொடங்கினார். இப்போது அழைத்தது அவர் மருமகள். பேசியவர் முடிவில்.. அவன் தோட்டத்துல இருப்பான். உன்ரகிட்டயே சொல்லிடலாமுன்னு பார்த்தா, இங்க ஒரு தம்பி இதுல உன்ர பேரே இல்லைன்னுடுச்சுஎன்று என்னைப் பற்றி புகார் வாசித்துக் கொண்டிருந்தார்.
ஃபோனை வைத்துவிட்டு இப்ப பேசிட்டேன்ல? படிச்சவனாட்டம் இருக்க.. இத்தாத்தண்டில போனை வெச்சு நோண்டிகிட்டிருக்க.. பேரில்லைன்றஎன்று அவர் சொல்லவும், ‘இங்க குடுங்கய்யாஎன்று அவர் ஃபோனை வாங்கி ரிசீவ்ட் காலைப் பார்க்க ‘Gannama” என்று இருந்தது.

ஐயா.. கண்ணம்மாக்கு கே தாங்க வரும்.. இதுல ஜி போட்டிருக்கு. அதான் தெரியல..என்றேன்.

அந்தக் கெரகெமெல்லாம் எனக்குத் தெரியுமா.. படிச்சவனுக. உங்களுக்குதான் தெரியணும்.. என்றவர் சரி விடு... என்ர மருமவன்கிட்ட பேசணும்... சுப்புன்னு இருக்கும்பாரு... எடுத்துக் கொடுஎன்றார்.
நான் 'A' விலிருந்து தேட ஆரம்பித்தேன்.

-- இணையத்திலிருந்து

You may also like