Monday, December 4, 2017

சாரட்டு வண்டில சீரட்டொளியில


சாரட்டு வண்டில சீரட்டொளியில
ஓரந்தெரிஞ்சது உம்முகம்.
உள்ளம் கிள்ளும் அந்தக் கள்ளச் சிரிப்புல
மெல்லச் சிவந்தது எம்முகம்.
சாரட்டு வண்டில சீரட்டொளியில
ஓரந்தெரிஞ்சது உம்முகம்.
உள்ளம் கிள்ளும் அந்தக் கள்ளச் சிரிப்புல
மெல்லச் சிவந்தது எம்முகம்.
அடி வெத்தல போட உதட்ட எனக்கு
பத்திரம் பண்ணிக்குடு.
நான் கொடுத்த கடன திருப்பிக் குடுக்க
சத்தியம் பண்ணிக்குடு.
என் ரத்தம் சூடு கொள்ள பத்து நிமிஷம்
தான் ராசாத்தி.
ஆணுக்கோ பத்து நிமிஷம் ஹ...
பொண்ணுக்கோ அஞ்சு நிமிஷம் ஹ...
பொதுவா சண்டித்தனம் பண்ணும் ஆம்பளய பொண்ணு
கிண்டிக் கெழெங்கெடுப்பா.
சேலைக்கு சாயம் போகு மட்டும்
உன்ன நான் வெளுக்க வேணுமடி.
பாடுபட்டு விடியும் பொழுது
வெளியில் சொல்ல பொய்கள் வேணுமடி.
புதுப் பொண்ணே
அதுதாண்டி தமிழ்நாட்டுப் பாணி.
சாரட்டு வண்டில சீரட்டொளியில
ஓரந்தெரிஞ்சது உம்முகம்.
உள்ளம் கிள்ளும் அந்தக் கள்ளச் சிரிப்புல
மெல்லச் சிவந்தது எம்முகம்.
சாரட்டு வண்டில சீரட்டொளியில
ஓரந்தெரிஞ்சது உம்முகம்.
உள்ளம் கிள்ளும் அந்தக் கள்ளச் சிரிப்புல
மெல்லச் சிவந்தது எம்முகம்.

வெக்கத்தயே கொழச்சு கொழச்சு
குங்குமம் பூசிக்கோடி...
ஆசை உள்ள வேர்வைய போல்
வாசம் ஏதடி
ஏ பூங்கொடி... வந்து தேன்குடி
அவன் கைகளில் உடையட்டும்
கன்னி கண்ணாடி

கத்தாழங் காட்டுக்குள் மத்தளம் கேக்குது
சித்தானை ரெண்டுக்கும் கொண்டாட்டம்.
குத்தாலச் சாரலே.. முத்தான பன்னீரே..
வித்தார கள்ளிக்கு துள்ளாட்டம்
அவ மன்மத காட்டுச் சந்தனம் எடுத்து
மார்பில் அப்பிக்கிட்டான்.
இவ குரங்கு கழுத்தில்
குட்டியப் போல தோளில் ஓட்டிக்கிட்டா
இனி புத்தி கலங்கற முத்தம் கொடுத்திரு ராசாவே...

பொண்ணுதான் ரத்தினக் கட்டி... ஹா.. 
மாப்பிள்ள வெத்தலப் பொட்டி
எடுத்து ரத்தினக் கட்டிய வெத்தல பொட்டியில்
மூடச் சொல்லுங்கடி.
மொதலில் மால மாத்துங்கடி
பிறகு பால மாத்துங்கடி.
கட்டில் விட்டு காலையிலே கசங்கி வந்தா
சேலை மாத்துங்கடி..
மகாராணி.. அதுதாண்டி தமிழ்நாட்டுப் பாணி..
கத்தாழங் காட்டுக்குள் மத்தளம் கேக்குது
சித்தானை ரெண்டுக்கும் கொண்டாட்டம்.
குத்தாலச் சாரலே.. முத்தான பன்னீரே..
வித்தார கள்ளிக்கு துள்ளாட்டம்
புதுப் பொண்ணே
அதுதாண்டி தமிழ்நாட்டுப் பாணி.


-- கவிப்பேரரசு வைரமுத்து.

You may also like