Wednesday, March 30, 2011

இத படிக்காதீங்க.. கடுப்பாய்டுவீங்க...

“ஆபீஸ்ல ஒரு சின்ன மீட்டிங். நான் வீட்டுக்க வர லேட் ஆகும். நீ சாப்ட்டு தூங்கு“.. கிருஷ்ணா போனில் சொன்னதும் வசந்திக்கு கோபம் வந்துவிட்டது. “என்னங்க திடீருனு இப்டி சொல்றீங்க?? இப்பவே மணி 10.30 ஆய்டுச்சு. தனியா இருந்தா நா பயப்புடுவேனு உங்களுக்கு தெரியாதா??? ப்ளீஸ் சீக்கிரம் வந்துடுங்க“னு அழுகாத குறையாக கணவனிடம் கெஞ்சினாள். “வந்துட்றேன் செல்லம். முடிஞ்ச வரைக்கும் சீக்கிரம் வந்துட்றேன்டா. நீ கதவெல்லாம் பூட்டிட்டு லைட் ஆஃப் பண்ணிட்டு தூங்கு. நா வந்துட்றேன்“னு சொல்லி மனைவியை ஒருவழியாக சமாதானப்படுத்திவிட்டு மீட்டிங்கை தொடர்ந்தான்.
இங்கு..... வசந்தி வாட்ச்சைக் கவலையோடு பார்த்துவிட்டு எழுந்து மெதுவாக நடந்தாள்.. நடந்தாள்.. வாசலுக்கு வெளியே வந்து சுற்றும் முற்றும் பார்த்தாள். ஒரே இருட்டு. வலதுபுறம் இடதுபுறம் முன்புறம் எல்லா பகுதியும் ஒரே இருட்டாக இருந்தது. அக்கம்பக்க வீடுகள் அதிகமில்லாத ஏரியா அது. இனம்புரியாத பயம் அவளைப் பிடித்துக்கொண்டது. மெதுவாய் உள்ளே சென்று வாசற்கதவைப் பூட்டி தாழ் போட்டாள். மேல் தாழ், நடுத்தாழ் இரண்டையும் போட்டுவிட்டு திரும்பி நடந்தாள்.. நடந்தாள்..
அங்கு..... அலுவலகத்தில் மீட்டிங் நடந்துகொண்டிருந்தது. கிருஷ்ணா அவர்களுடன் விவாதித்துக்கொண்டிருந்தான்.
இங்கு..... திரும்பி நடந்த வசந்தி கிச்சனுக்குள் சென்றாள். சாப்பாட்டை ஒரு தட்டில் போட்டுக்கொண்டு டைனிங் டேபிளுக்கு சென்று உட்கார்ந்தாள். சாதத்தைப் பிசைந்தாள். வாயருகே கொண்டு சென்றாள்.. திடீரென அப்படியே அசையாமல் இருந்தாள்.. அப்படியே இருந்தாள்.. இன்னும்.. இன்னும்... பிறகு சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தாள். பெருமூச்சு விட்டுக்கொண்டபடியே சாப்பிடாமல் அதிலேயே கை கழுவினாள்.
அங்கு..... ஒரு வழியாக மீட்டிங் முடிந்தது. கிருஷ்ணா அலுவலகத்திலிருந்து புறப்பட்டான். மெதுவாக தன் பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பினான்.
இங்கு..... சாப்பிடாமல் எழுந்த வசந்தி டிவி ஆன் செய்தாள். சோபாவில் உட்கார்ந்து சேனல் மாற்ற ஆரம்பித்தாள். மாற்றினாள்.. மாற்றினாள்.. அடுத்த சேனல்.. அதற்கடுத்த சேனல்.....
“........னங்..........“ திடீரென மாடியில் ஏதோ சத்தம் கேட்க அதிர்ந்தாள். பயத்துடனே மெதுவாக எழுந்தாள். டிவிஐ ஆஃப் செய்துவிட்டு மாடிப்படி அருகே வந்தாள். மெதுவாக எட்டிப் பார்த்துவிட்டு படிகளில் ஏறினாள்......... ஏறினாள்......... ஏறினாள்..
அங்கு........ கிருஷ்ணா பைக்கில் வந்துகொண்டிருந்தான். வேகமாக வந்துகொண்டிருந்தான். வாகனங்களைத் தாண்டி படு வேகமாக வந்துகொண்டிருந்தான்.
இங்கு....... மாடி ஏறிய வசந்தி சத்தம் வந்த திசையில் பார்த்தாள். அங்கே........ அங்கே......... அங்கே............
“மியாவ்.“. ஒரு கருப்புப் பூனை. பயம் தெளிந்து மீண்டும் மாடியிலிருந்து இறங்கினாள். இறங்கினாள். மெதுவாக.. மெதுவாக.. இறங்கினாள்.
அங்கு...... கிருஷ்ணா இன்னும் வந்துகொண்டிருந்தான்.. வந்துகொண்டிருந்தான். வேகமாக வந்துகொண்டிருந்தான்.
இங்கு..... வசந்தி படிகளில் மெதுவாக இன்னும் இறங்கிக் கொண்டிருந்தாள்..
அங்கு.... பைக்கில் கிருஷ்ணா வந்துகொண்டிருந்தான்.
இங்கு....... கடைசிப் படியில் கால் வைத்தாள் வசந்தி... பட்டென கரெண்ட் போனது. எதிர்பாராத அந்த நொடியினால் அவளுக்கு பயத்தால் உடல் வியர்த்து நடுங்கியது. எங்கும் ஒரே அமைதி....... அமைதி.......... அமைதி..
அப்போது தான் அந்த சம்பவம் நடந்தது...
“டொக் டொக்“ கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. அதிர்ச்சியில் வசந்தி உரைந்துவிட்டாள். தைரியத்தை வரவழைத்து “யாரது“ என்று கேட்டாள். பதிலில்லை. மறுபடியும் தட்டும் ஓசை... “யாருனு கேக்குறேன்ல“ வசந்தியின் குரல் நடுக்கத்துடன் வந்தது. பதிலேதுமில்லை. அந்த இருட்டுக்குள்ளும் அவளுடைய கண்கள் பயத்தில் மின்னியது. “டொக் டொக்“ கதவு தட்டப்பட்டது.. வசந்தி பயத்துடன் உள்ளே நின்றுகொண்டிருந்தாள்.
“டொக் டொக்“...... “டொக் டொக்“....
மெதுவாக கதவருகே சென்றாள் வசந்தி.. கதவின் தாழ்ப்பாளை விளக்கும் நோக்கத்தில் அதன் அருகே கையை கொண்டுசென்றாள். கைகள் நடுங்கியது.
இப்போது கதவு பலமாக தட்டப்பட்டது. “டொக் டொக் டொக்“.. வசந்தியின் கைகள் நடுங்கியது.... “டொக் டொக்“... நடுக்கம்.. “டொக் டொக்“.. நடுக்கம்..
மெதுவாக கதவின் தாழ்ப்பாள் நீக்கித் திறந்தாள். அங்கே.. அங்கே... அங்ங்ங்ங்கே..
தொடரும்“னு கொட்ட எழுத்துல போட்டுட்டாய்ங்க..
என்ன முறைக்குறீங்க??? அதான் படிக்காதீங்கனு சொன்னோம்ல... படிச்சு முடிக்கிறதுக்குள்ள கடுப்பாய்ருப்பீங்களே.. படிச்சதுக்கே இப்டினா டிவில பாத்த எனக்கு எப்டி இருக்கும். அட ஆமாங்க.. இது ஒரு மெகா தொடரோட ஒரு அத்தியாயம். :)

-- இந்திரா

Friday, March 18, 2011

எப்படி இருந்த பயலை எப்படி மாத்திட்டாளுக!

ஒரு பையன் ஒரு பெண்
இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல்
வெவ்வேறு வயதுகளில்:


@எல்கேஜி:
பெண்: "பென்சில் தருவியா..?"
பையன்: "மிஸ்கிட்ட சொல்லிடுவேன்..!"


@5ம் வகுப்பு:
பெண்: "பென்சில் தருவியா..?"
பையன்: "இந்தா..!"


@10ம் வகுப்பு:
பெண்: "பேனா இருந்தா கொடுக்க முடியுமா..?"
பையன்: "ஓ மை காட்... ப்ளாக் வேணுமா., ரெட் வேணுமா., ப்ளூ வேணுமா., க்ரீன் வேணுமா.?"


@12ம் வகுப்பு:
பெண்; (ஒன்றுமே கேட்கவில்லை)
பையன்: "2உன்னோட பென் சரியா எழுதலைனு நெனைக்கிறேன். இந்தா என்னோட பென்... இதை யூஸ் பண்ணிக்க..!"


@காலேஜ்:
பையன்: "புதுசா ஒரு பென் வாங்கினேன்... எழுதிப் பாத்துட்டுக் குடு...!".



நீதி:

"எப்படி இருந்த பயலை
எப்படி மாத்திட்டாளுக பாத்தீங்களா..?"

- மீனாக்க்ஷி சுந்தரம் 



 

You may also like