Tuesday, December 28, 2010

காதல்னா என்ன?

பேச்சினூடே
சாதாரணமாய் உனைக் கேட்டேன்..
காதல்னா என்ன?
கிண்டலாகச் சிரித்துவிட்டு
உன் தலைஎன்றாய்.
அதில் தான் எவ்வளவு உண்மை?
நான்
சுவாசிப்பது,
சிந்திப்பது,
பார்ப்பது,
கேட்பது,
அழுவது,
சிரிப்பது,
பேசுவது,
உணவருந்துவது என
சகலமும்
என் தலையால்..
அதாவது என் காதலால்..
சரியாகத்தான் சொல்லியிருக்கிறாய்..
உனக்கு கிறுக்கு தான் பிடிச்சிருக்கு
என்றாய் நகைத்து.
ஆம் அதுவம் தலையில் தான்..
அதாவது என் காதலில்..
இதயம் மட்டும் தலையிலன்றி
இடம்பெயரக் காரணம் என்னவோ?
--

Sunday, December 26, 2010

Bobby's Rasam - Receipe of the Year ;)

1) One katori hot water - boil the puli (small lemon size) in water and
switch off when it boils
2) Once it cooks, squeeze the puli
3) Add one more karandi of water to the puli and karachify well
4) Add 3/4th tsp salt to the puli water
5) Add turmeric powder - less than 1/4th tsp to the puli water (totally puli
water should be 1 tumbler)
6) Add rasam podi - 1tsp to the mixture
7) Add peringayam powder
8) Wash tomato - cut into 4 pieces  and add to puli water
9) Keep in gas and let it boil till the puli water contents become half or
3/4
10) 1 katori paruppu - wash in water - 2 or 3 times
11) Add 1/2 katoris water to it
12) Add less than 1/4 tsp manja podi
13) Add 1 drop of gingerly oil
14) Keep it in cooker and let it cook for 4-5 whistles. In the cooker, keep
2 tumblers of water and on top of it keep paruppu katori - keep in low flame
15) Lift the weight after 5-10 mins
16) Take out the tomato only out of the puli water and smash it well
(karachify) and take out the tholi
17) Add 1 1/2 karandi paruppu to the tomatoes and smash well and add water
(1 tumbler) and add to puli water and add cut tomatoes (if u want at this
stage)
18) Boil this mixture for 1 boil
19) Off it after 2-3 mins
20) In a kadai, add 2 tsp of ghee, add kadugu, inlcude karuvaipullai when
kadugu is hot an add to rasam.
21) Lastly add kothamali to the rasam.


-- From my Best Friend's receipe notes :P

Tuesday, December 21, 2010

பழையகதை, புதிய கருத்து

நமக்கு எல்லாருக்கும் தெரிந்திருக்கும் ஒரு பழைய கதைக்குள் இருக்கும் புதிய கருத்தைப் பற்றி பார்ப்போம்.

முயலுக்கும், ஆமைக்கும் நடந்த ஓட்டப்பந்தயக் கதை நாம் அறிந்ததுதான்.

முயலுக்கும் ஆமைக்கும் இடையே ஓட்டப்பந்தயத்தில் யார் முதலில் வருவார்கள் என்று வாக்குவாதம் நடந்தது. ஓட்டப்பந்தயம் வைப்பது என்று முடிவானது. ஓட்டப்பந்தயம் தொடங்கிய அடுத்த சில நிமிடங்களில் முயல் ஓட்டப்பந்தய எல்லைக்குப் பக்கத்தில் இருந்தது. நாம் சிறிது நேரம் தூங்கினாலும் கூட. சுலபமாக இலக்கை அடைந்து வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைத்து சிறிது நேரம் கண் அயர்ந்தது. நன்றாக உறங்கியும் விட்டது. மெல்ல நடந்து முன்னேறிய ஆமை இலக்கை அடைநது வெற்றி பெற்றது.

இதில் இருந்து நாம் கற்றுக்கொண்டது என்ன?

நிதானமாக செயல்பட்டால், வெற்றி இலக்கை முதலாவதாக அடையலாம் என்பதுதான் நாம் அறிந்து கொண்டது.

மேல் கூறிய கதையைத்தான், ஆண்டாண்டு காலமாக நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இதற்குப் பிறகு என்ன நடந்தது என்று பார்ப்போம்.

உறங்கிக் கண் விழித்த முயல் மிகவும் வேதனை அடைந்தது. ஏன் தான் தோல்வி அடைந்தோம் என்று ஆராய்ந்தது. தான் மிகவும் மெத்தனமாக இருந்தால்தான் தோற்றுப்போனோம் என்று முடிவு செய்தது. தான் எதையும் லேசாக எடுத்துக் கொள்ளலாமல், முழு மனதோடு போட்டியில் கலந்து கொண்டால், ஆமையை சுலபமாக வென்றுவிடலாம் என்று நினைத்தது, மீண்டும் ஆமையை சந்தித்து மற்றொரு போட்டி வைத்துக் கொள்ளலாம் என்று கூறியது.

இந்தமுறை எந்தத் தடையும் ஏற்படாமல் முயல் வேகமாக ஓடி இலக்கை அடைந்து, பல மைல் தொலைவு வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது.

இதில் இருந்து நாம் அறிவது என்ன?

வேகமும் விவேகமும் இருந்தால் நிதானமாக செயல்படுபவரை முறியடித்து முன்னேறிவிடலாம் என்பதுதான்.

உங்கள் ஸ்தாபனத்தில் இருவர் இருக்கிறார்கள். ஒருவர் நிதானமாகச் செயல்படுவார், மிகவும் நம்பிக்கைக்கு உரியவர். அதே போல் இருக்கும் இன்னொரு நபர் வேகமாக செயல்படுபவர் இருவரும் மிகவும் நம்பிக்கைக்கு உரியவர் இதில் இரண்டாவதாகக் கூறிய வேகமாகச் செயல்படுபவர் நிச்சயமாக முதலாமவரைக் காட்டிலும் வேகமாக வாழ்க்கையில் முன்னேறி விடுவார் சரிதானே?

நிதானமாக இருப்பது அவசியம்தான், அதைவிட வேகமாக செயல்படுவது நல்லது. சரி கதை இத்தோடு முடிந்தது என்று நினைக்கிறீர்களா? இல்லை நண்பர்களே கதை மீண்டும் தொடருகிறது.

இந்த முறை, தான் ஏன் தோல்வி அடைந்தோம் என்று ஆமை சிந்தித்தது. எப்படி முயலை ஜெயிப்பது என்று யோசனை செய்தது. பிறகு முயலை சந்தித்து, மற்றொரு ஓட்டப்பந்தயத்திற்கு ஏற்பாடு செய்கிறது. இந்த முறை வேறு பாதையில் செல்லலாம் என்று முயலிடம் கூறுகிறது. முயல் சரி என்று ஒத்துக் கொள்கிறது.

ஓட்டப்பந்தயம் தொடங்குகிறது. சிறிது தூரம் வந்த பிறகு முயல் நின்று விடுகிறது. காணரம் பாதையின் நடுவில் ஒரு பெரிய ஆறு ஓடுகிறது. என்ன செய்வது என்று திகைத்து நிற்கிறது முயல். இதற்கிடையில் ஆமை ஆற்றங்கரையை மெல்ல அடைந்து ஆற்றில் இறங்கி, நீந்தி மறுகரையை தொட்டு, இலக்கை அடைந்து வெற்றி பெறுகிறது.

இதில் இருந்து நாம் அறிந்து கொள்வது என்ன? முதலில் நாம் எதில் சிறந்து விளங்க முடியும் என்பதைக் கண்டுபிடித்து, அதில் உழைக்க வேண்டும்.

ஒரு ஸ்தாபனத்தில் பணிபுரியும் நீங்கள். நல்ல பேச்சாளர் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் உங்கள் திறமையை வெளிப்படுத்த சந்தர்பங்களை உருவாக்க வேண்டும்.

அதேபோல், நீங்கள் ஆராய்வதில் வல்லவர் என்றால், ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிந்து, உங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும்.

உங்கள் திறமை எது என்று கண்டுபிடித்து அதில் உழைத்து முன்னேற முற்பட்டால் வெற்றி நிச்சயம்.

ஆனால் கதை இன்னும் முடியவில்லை. ஆமையும் முயலும் இப்பொழுது நல்ல நண்பர்கள்களாக மாறி இருந்தனர். இருவரும் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தனர். போன முறை இருவரும் சென்ற ஓட்டப்பந்தயதை, இந்த முறை இன்னும் சிறப்பாக வேறு முறையில் செயல்பட முடிவு செய்கின்றனர். இந்த முறை இருவரும் சேர்ந்து செயல்பட முடிவு செய்கின்றனர்.

ஓட்டப்பந்தயம் தொடங்குகிறது. ஆனால் இந்த முறை முயல் ஆமையை தூக்கிக்கொண்டு ஆற்றங்கரை வரை ஓடுகிறது. அங்கே ஆமை, முயலைத் தூக்கிக் கொண்டு ஆற்றில் நீந்தி மறுகரையை அடைகிறது. இப்போது முயல், ஆமையை சுமந்து கொண்டு இலக்கை நோக்கி ஓடுகிறது. இருவரும் ஓரே நேரத்தில், மிகவும் குறைந்த நேரத்தில் இலக்கை அடைகிறார்கள். இதுவரை ஏற்படாத திருப்தி இருவருக்கும் ஏற்படுகிறது.

இதில் இருந்து நாம் அறிந்து கொள்வது என்ன?

நீங்கள் ஒரு பொருளை விற்பதில் கெட்டிக்காரர் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் நண்பர், அந்தப் பொருளை தயாரிப்பதில் வல்லவர் என்று வைத்துக் கொள்வோம். இருவரும் சேர்ந்து செயல்பட்டால், தரமான பொருளைத் தயாரிக்கவும் முடியும், அதே சமயம் அப்பொருளின் விற்பனையையும் அதிகரிக்க முடியும். சேர்ந்து செயல்பட்டால் இருமடங்காகும்.

இந்தக் கதையில் இருந்து நாம் அறிவது என்ன?

* தோல்வி அடைந்தால் தளர்ந்து போகாமல் அடுத்தது என்ன என்று சிந்தியுங்கள்.

* வேகமும், விவேகமும் நிச்சயமாக நிதானத்தை தோற்கடிக்கும்.

* நமது திறமையை கண்டறிந்து, அதில் உழைக்க வேண்டும். எதிரியை எதிர்த்து போராடாமல் சூழ்நிலையை எதிர்த்து பேராடுங்கள்.

* இணைந்து செயல்பட்டால், தனித்து செயல்படுவதைக் காட்டிலும் அதிகமாக பயன் அடையலாம்.

இதனை எல்லாம் மனதில் கொண்டு, வெற்றியை நோக்கி முன்னால்

வாருங்கள் தோழர்களே!


Sunday, December 19, 2010

என்றென்றும் காதல்

பேருந்துப் பயணங்களில்
இருக்கை கிடைத்து
அருகருகே
அமர்ந்துவிட்டால் போதும்
எப்படி வருமோ தூக்கம்
தோள் சாய்ந்து தூங்குவாய்
இறங்கும்போதுதான்
துயில் எழுவாய்
நின்று பயணிக்கும்போது,
தனித்தனியே அமர்ந்து
பயணிக்கும்போது
வராத தூக்கம்
அருகருகே அமர்ந்தால் மட்டுமென்ன?
எனக்குத் தெரியாதா?
நீ
தூங்குவதற்காக தோள்சாய்வதில்லை
தோளில் சாயத்தான் தூங்குகிறாய்.

-- பொன் சுதா

 

Friday, December 17, 2010

நாம் நாமாக இருப்போம்..

நம்மில் பலருக்கு வாழ்நாள் முழுவதும் ஒரு கவலை இருந்து கொண்டேதான் இருக்கிறது. அவர் எவ்வளவு செழிப்பாக வாழ்கிறார். அவரைப் போல நாம் இல்லையே என்று பிறரைப் பார்த்து கவலைப்படும் மனோபாவம். பணக்காரனை பார்த்து ஏழை இப்படி நினைக்கிறான். பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பவன் பிரச்சினைகள் ஏதுமின்றி மகிழ்ச்சியாய் உள்ளவனைப் பார்த்து கவலைப்படுகிறான். ஆரோக்கியமானவனைப் பார்த்து உடல் நலம் குன்றியவன் அவனைப் போல் நாம் ஆரோக்கியமாக இல்லையே என்று கவலைப்படுகிறான். கருப்பாக இருப்பவன் சிவப்பாய் இருப்பவனைப் பார்த்து நாம் அவரைப் போல சிவப்பாக இல்லையே என்று கவலைப்படுகிறான்.

ஒரு நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பணக்காரன் முதல் பணக்காரனைப் பார்த்து அவனைப் போல நாம் இல்லையே என்று கவலை கொள்ளுகிறான். அவனுக்கு எல்லா வசதிகளும் இருக்கின்றன. அவன் நினைத்தால் பணத்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். ஆனாலும் அவனுக்கும் ஒரு கவலை இருக்கத்தான் செய்கிறது. ஒரு நாட்டின் முதல் பணக்காரனோ உலகத்தின் முதல் பணக்காரனைப் பார்த்து கவலைப்படுகிறான். அவனைப் போல நாம் இருந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்க்கிறான். உலகின் முதல் பணக்காரன் தான் இரண்டாவது பணக்காரனாகிவிட்டால் என்ன செய்வது என்று கவலையுடனும் பயத்துடனும் நாட்களைக் கழிக்கிறான். ஆக ஏழையானாலும் சரி பணக்காரனானாலும் சரி ஒருவர் மற்றவரைப் பார்த்து அவரைப் போல நாம் இல்லையே என்று கவலைப்படுவது மனித வாழ்க்கையில் இயல்பாகிப் போய்விட்டது.

இயற்கை எப்போதும் மாறாத தன்மையுடன் விளங்குவதாலேயே அது இன்றுவரை பழமையும் பெருமையும் மாறாமல் தலைநிமிர்ந்து நிற்கிறது. இயற்கையைப் போலவே விலங்குகளும் இயல்பான வாழ்க்கை வாழ்கின்றன. சிங்கம் புலியைப் போல வாழ எண்ணுவதில்லை. புலி யானையைப் போல வாழ எண்ணுவதில்லை. ஒருவர் பிறரைப் போல வாழ முயற்சிக்கும் போது பிரச்சினைகள் தோன்றுகின்றன. இதனாலேயே மனிதன் ஏராளமான பிரச்சினைகளைச் சந்திக்கிறான். விலங்குகள் பெரிய பிரச்சனைகள் ஏதுமின்றி இயல்பாக வாழ்க்கையை நடத்துகின்றன.

காட்டில் வசித்து வந்த ஒரு பூனைக்கு ஒருநாள் அந்த எண்ணம் தோன்றியது.

‘நாமும் பார்ப்பதற்கு புலி போலத்தானே இருக்கிறோம்? என்ன உருவத்தில் கொஞ்சம் சிறியதாக இருக்கிறோம். ஆனால் நம்மைப் பார்த்து ஏன் மற்றவர்கள் பயப்படமாட்டேன் என்கிறார்கள்? புலியைப் போல நாமும் மற்றவரை உறுமி மிரட்டிப் பார்த்தால் என்ன?’

இந்த எண்ணத்தை உடனே செயல்படுத்தியது.

சற்று தொலைவில் ஒரு மான் மேய்ந்து கொண்டிருந்தததைப் பார்த்து அதன் அருகே போனது பூனை. பூனையைப் பார்த்துவிட்டு மீண்டும் புல்லை மேயத்தொடங்கியது மான்.

பூனை இப்போது கோபத்துடன் உறுமி குரல் கொடுத்துவிட்டு மானைப் பார்த்துப் பேசியது.

“ஏய். எவ்வளவு தைரியம் இருந்தா என்னைப் பார்த்து பயப்படாம புல் மேயற. நானும் புலியைப் போலத்தான். நீ எனக்கு பயந்தாகணும்”

இதைக் கேட்ட மான் கிண்டலாய் சிரித்தது.

“எங்கே புலியைப் போல என்னைத் துரத்திப் பிடியேன் பார்க்கலாம்”

இப்படிச் சொன்ன மான் ஓடத்தொடங்கியது. பூனை அதைத் துரத்தியது. ஆனால் வேகமாக ஓடும் மானைத் துரத்திக் கொண்டு ஓட பூனையால் முடியவில்லை. பூனை மூச்சு வாங்கி பாதியிலேயே நின்று விட்டது.

அடுத்தநாள் காட்டுப் பன்றி ஒன்றைப் பார்த்த பூனை அதனிடம் சென்று மானிடம் சொன்னது போலவே சொன்னது. இதைக் கேட்டு கோபமடைந்த காட்டுப்பன்றி பூனையைப் பிடித்து தூக்கி வீசியது. தொலைவில் போய் விழுந்த பூனைக்கு நல்ல காயம் ஏற்பட்டது. இப்போது அது யோசிக்க ஆரம்பித்தது.

‘யாரும் நமக்கு பயப்படுகிற மாதிரி இல்லை. எனவே வேறு வழியில்லை. இனி நம்மை நாம் மாற்றிக் கொண்டு எல்லோரிடமும் நல்ல பெயர் எடுக்கப் பார்க்கலாம்’

இவ்வாறு அது யோசித்துக் கொண்டிருந்த போது இரண்டு எலிகள் அந்தப் பக்கம் சென்றன. பூனையைப் பார்த்து பயந்து ஓட எத்தனித்த அந்த எலிகளைப் பூனை கூப்பிட்டது.

“நண்பர்களே. என்னைப் பார்த்து இனி நீங்கள் ஓடத் தேவையில்லை. இன்றிலிருந்து நான் உங்களைப் பிடித்து சாப்பிடப் போவதில்லை. சுத்த சைவமாக மாறிவிட்டேன். என்னை நம்புங்கள்”

பூனை சொன்னதைக் கேட்ட எலிகள் பூனையை நம்பின. பூனை அதனிடம் அன்பாகப் பழகியது. அது சுத்த சைவமாக மாறி கிழங்குகளை மட்டுமே சாப்பிடத் தொடங்கியது.

எலிகள் பூனையிடம் இப்போது மிகவும் சகஜமாக விளையாடின. ஒரு எலி பூனையின் காதைப் பிடித்து இழுத்துப் பார்த்தது. பூனை தூங்கிய சமயத்தில் அதன் மீது குதித்து விளையாடின. விளையாட்டு எல்லை மீறி பூனை மிகவும் கஷ்டப்பட்டது. கிழங்குகளை மட்டுமே சாப்பிட்டதால் உடல் சோர்வடைந்தது.

பூனை இப்போது யோசித்தது.

“எல்லோரும் நமக்கு பயப்பட வேண்டும் என்று நினைத்தது வம்பில் முடிந்தது. எல்லோரிடமும் அன்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் தொல்லையாக இருக்கிறது. வேறு வழியில்லை. இனி நாம் நாமாக இருப்போம்”

இந்த முடிவிற்கு வந்த பூனை இப்போது கோபத்துடன் எலிகளைப் பார்த்து உறுமத் தொடங்கியது. பயந்து போன எலிகள் ஓடி மறைந்தன.

பூனை இப்போது பழையபடி நிம்மதியாக வாழத் தொடங்கியது.

அவரை மாதிரி நாம் இல்லையே என்று ஏங்குவதைப் போலவே அவரை விட நாம் எவ்வளவோ மேல் என்ற எண்ணமும் நமது வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்களில் தோன்றும். அது எப்போது என்றால் நாம் சிலருடைய வாழ்க்கையைப் பார்த்து அவரைப் போல வாழ்க்கை நமக்கிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்திருப்போம். ஆனால் அவர் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்பாராதவிதமாக பெரும் பிரச்சினையில் மாட்டிக்கொண்டு இழக்கக்கூடாததை எல்லாம் இழந்து தவித்து வேதனைப்படும் போது நமக்கு ‘அவரை விட நாம் எவ்வளவோ பரவாயில்லை’ என்ற எண்ணம் தோன்றும். உண்மையில் சொல்லப்போனால் மனிதனாய்ப் பிறந்த அனைவருக்கும் ஏதாவது ஒரு பிரச்சினையும் வேதனைகளும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. அது அவரவர் தகுதியையும் வாழ்க்கை முறையையும் பொறுத்தே அமைகிறது.

உலகப்புகழ் பெற்ற யேல் பல்கலைக்கழகத்திற்கு அண்ணாதுரை அழைக்கப்பட்டார். எப்போதும் போலவே மிகவும் எளிமையாக இயல்பாக அங்கே சென்றார். அவருடைய தோற்றத்தைக் கண்டோர் அவரை சாதாரணமாக நினைத்து விட்டார்கள். ஒரு மாணவன் அண்ணாதுரையை ஏளனமாக நினைத்து அவரிடம் because என்ற ஆங்கிலச்சொல்லை தொடர்ந்து மூன்று முறை வருமாறு அமைத்து ஒரு வாக்கியத்தைக் கூற முடியுமா என்று கேட்டான். அண்ணாதுரை யோசிக்கவே இல்லை. உடனே சர் sentence begins with because, because, because is a conjunction என்று பதிலுரைத்தார். இன்னொரு மாணவன் அண்ணாவிடம் அஆஇஈ என்ற எழுத்துக்களே இல்லாத நூறு வார்த்தைகளை உடனே கூற முடியுமா என்று கேட்டான். அண்ணா உடனே One to Ninety Nine என்று பதிலளித்தார். அண்ணாவின் அறிவைக் கண்டு பிரமித்துப்போனார்கள் பேராசிரியர்களும் மாணவர்களும். அண்ணாவை தங்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்த்திக் கொண்டார்கள். மற்றொரு முறை அண்ணா இராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்த அழைக்கப்பட்டிருந்தார். அக்கூட்டத்திற்கு தலைமை வகிக்க துணைவேந்தரை அழைத்தார்கள். அண்ணாவின் எளிய தோற்றத்தைக் கண்டு தவறாக எடைபோட்ட அந்தத் துணைவேந்தர் மறுத்தார். வேறொருவர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது, அந்தக் கூட்டத்தில் அண்ணா இரண்டு மணிநேரம் அழகான ஆங்கிலத்தில் உரையாற்றினார். அண்ணாவின் பேச்சை தனது அறையிலிருந்து கேட்ட அந்தத் துணைவேந்தர் உடனே மேடையேறி தான் இதுவரை இதுபோன்ற அற்புதமான பேச்சைக் கேட்டதில்லை என்று மனதாரப் பாராட்டினார்.

அண்ணா எப்போதும் இப்படித்தான். எளிமையான வாழ்க்கை. அவருக்கென்று ஒரு பாணி. அவர் எப்போதும் நம்பியது அவருடைய அறிவைத்தான். அதுதான் அவருக்கு உயர்வைத் தேடித்தந்தது. மிகப்பெரிய மனிதர்கள் எல்லாம் ஒருபோதும் அவரைப் போல நாம் இல்லையே என்று எண்ணி ஏங்குவதே இல்லை.

கடவுள் புழு பூச்சி முதல் மிகப்பெரிய யானை வரை அனைத்தையும் ஏதோ ஒரு காரணத்திற்காகவே படைத்திருக்கிறார் என்று திடமாக நம்புங்கள். அவரைப் போல நாம் இல்லையே என்று எண்ணி எண்ணி அற்புதமான வாழ்க்கையைத் தொலைக்காதீர்கள். இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் பாக்கியசாலிகள். அனைவருக்கும் திறமை இருக்கிறது. அனைவருக்கும் ஆற்றல் இருக்கிறது. அனைவருக்கும் சாதித்து உயரக்கூடிய தகுதி இருக்கிறது. அனைவருமே ஏதோ ஒரு வகையில் சிறந்தவர்கள்தான். இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மிகப்பெரிய அந்தஸ்தில் உள்ளவர்கள் ஒரே நாளில் பிச்சைக்காரர்களைவிட மோசமான நிலைக்கு வருவதைப் பார்க்கிறோம். சில வருடங்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் புஜ் என்ற இடத்தில் மிகமோசமான பூகம்பம் ஏற்பட்டபோது இந்த நிலை பலருக்கு ஏற்பட்டது. அடுத்தவேளை சாப்பாட்டிற்கே வழியில்லாதவர்கள் சிலர் எதிர்காலத்தில் மிகப்பெரிய பணக்காரர்களாய் ஆவதையும் நாம் பார்க்கிறோம். ஒரு ஏழை ஏழையாக இருக்கும்போதே பணக்காரனாய் தன்னை பாவித்து அவனைப் போலவே வாழ விரும்பும் போதுதான் பிரச்சினைகளும் சிக்கல்களும் தோன்றுகின்றன.

அவரைப் போல நாம் இல்லையே என்று கவலைப்படும் வழக்கத்தை நீங்கள் முதலில் கைவிடுங்கள். அவரைப் போல நாம் வாழ்க்கையில் உயர வேண்டும் என்று மட்டும் நினையுங்கள். சலிக்காது உழையுங்கள். வெற்றியும், நிம்மதியும், புகழும் உங்களைத் தேடி வரும். நாம் நாமாக இருப்போம். வெற்றிகளைக் குவித்து புதிதாய் பிறப்போம்.


--- நன்றி ஆர்.வி. பதி

Thursday, December 16, 2010

காதல்...

நம் கண்கள் சந்தித்துக்கொண்டபோதல்ல
மனங்கள் ஒன்றுபட்டபோதல்ல
உடல்கள் சங்கமித்தபோதல்ல
நினைவற்ற தூக்கத்திலும்
பிடிவாதமாக என் கைகளைச்
சிறைப்படுத்திக் கொண்டிருந்த
உன் உள்ளங்கைச் சூட்டில்
அதிகம் உணர்ந்தேன்,
காதலை!!!

Wednesday, December 15, 2010

யாருக்கும் வெட்கமில்லை - ஞாநி

ரத்தம் கொதித்தது - நவம்பர் 18ஆம் தேதி மதுரையில் கருணாநிதியின் பேரன் கல்யாணத் திருவிழா நிகழ்ச்சிகளை டி.வி.யில் பார்த்தபோதும் செய்திகளைப் பத்திரிகைகளில் படித்தபோதும்.

பள்ளிகளுக்கு விடுமுறை. பல்கலைக்கழகத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. மதுரையின் இளவரசர் என்று அழகிரி மகனைப் போற்றி விளம்பரப் பலகைகள். தாம் மேற்கொண்ட அதே பகுத்தறிவு லட்சியத்தைத் தம் குடும்பமே பேரன், பேத்திகள் வரை பின்பற்றுவதைப் பற்றிப் பெருமைப்படுவதாக மேடையில் கருணாநிதியின் ஓர் அப்பட்டமான பொய்ப் பேச்சு... எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தமாதிரி திருமணத்துக்கு வந்த ஆங்கில வாழ்த்துச் செய்திகளைப் படித்து நன்றி கூறியது தயாநிதிமாறன். பக்கத்தில் அழகிரி.

இவர்களின் சண்டையினால் தானே மதுரை தினகரன் அலு வலகத்தில் மூன்று அப்பாவி மனிதர்கள் செத்தார்கள். தீ வைத்தவர்கள் எல்லாம் கல்யாணப் பந்தலில் விருந்தினர்களாக...

கருணாநிதி குடும்பத்தில் தயாளு அம்மாளிலிருந்து தயாநிதி வரை எல்லோரும் எப்பேர்ப்பட்ட திறமையான நடிகர்கள் என்பது அன்றைக்கு மேடையில் தெரிந்தது. அடுத்த சில நாட்களில் வெளிவந்த அவுட்லுக் இதழில் அம்பலப் படுத்தப்பட்ட நீரா ராடியா ஃபோன் பேச்சு டேப்களைப் படித்தபோதுதான், அவர்களின் நடிப்புத் திறமையின் முழுப் பரிமாணமும் புரிந்தது. சிவாஜி கணேசன் முதல் தனுஷ் வரை பத்மினி, சாவித்திரி முதல் த்ரிஷா வரை அத்தனை நடிகர்களையும் தூக்கிச் சாப்பிட்டு விடுகிற திறமையுடன் ஒரே குடும்பத்தில் இத்தனை பேர் இருக்கிறார்களே என்று வியப்பாகவும் எரிச்சலாகவும் இருந்தது.

மக்களுக்குத் தொண்டு செய்வதற்காக தயாநிதி மாறனும் கனிமொழியும் ஆ.ராசாவும் எவ்வளவு துடித்திருக்கிறார்கள் என்பதை நீரா ராடியா டேப்கள் நமக்குப் புரியவைக்கின்றன. இந்த டேப்கள் எதுவும் எந்தப் பத்திரிகையாளரும் தனி முயற்சியில் பதிவு செய்தவை அல்ல. அரசாங்கத்தின் வருமானவரித் துறை, உள்துறை அனுமதியுடன் நீரா ராடியாவைத் தொடர்ந்து கண்காணித்துப் பதிவு செய்தவை. இப்போது உச்ச நீதி மன்றத்தின் முன்னால் தாக்கல் செய்யப்பட்டிருப்பவை. இவற்றிலிருந்து தெரியவரும் தகவல்கள் தான் என்ன?

1. ‘கருணாநிதிக்கு வயதாகி புத்தி பேதலித்துவிட்டது. ( senile ). இனிமேல் தானும் ஸ்டாலினும் தான் கட்சியை நடத் திச் செல்லப் போகிறோம். காங்கிர ஸார் என்னுடன் பேசுவதுதான் நல்லது. ஸ்டாலினும் என் கட்டுப் பாட்டில் தான் இருப்பார்’ என் றெல்லாம் தயாநிதிமாறன் தில்லியில் சொல்வதாக நீரா ராடியா, ஆ.ராசாவிடம் சொல்கிறார்.

2. அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது என காங்கிரஸார் மனத்தில் விதைத்தது யாரென்று தமக்குத் தெரியும் என ராசா சொன்னதுக்குதான் மேற்படி பதில்.

3. அதுமட்டுமல்ல அழகிரி ஒரு கிரிமினல். ஐந்தாவது வகுப்புக்கு மேல் படிக்கவில்லை என்றும் தயாநிதி சொல்லியிருக்கிறார். இதையெல்லாம் கருணாநிதியிடம் சொல்லுங்கள் என்கிறார் நீரா.

4. இல்லை. நான் அழகிரியிடமே சொல்லிவிட் டேன். அவர் தலைவரிடம் போய்ச் சொல்லிவிட்டார் என்கிறார் ராசா.

5. எங்களுக்கு டி.ஆர்.பாலுவுடன்தான் பிரச்னை. ராசாவிடம் இல்லை என்று சோனியா காந்தியை நேரடியாகவே கருணாநிதியிடம் ஃபோனில் சொல்ல வைக்கும்படி ராசா, நீராவைக் கேட்டுக் கொள்கிறார். அகமது படேல் மூலம் சொல்லுவதாக நீரா சொல்கிறார். பாலுதான் பிரச்னை என்பதை எழுதி ஒரு சீலிட்ட கவரில் வைத்து கருணாநிதியிடம் கொடுக்கச் சொல்கிறார் ராசா.

6. தம்மைத்தான் தி.மு.க சார்பில் தில்லியில் காங்கிரஸாருடன் பேசும்படி கருணாநிதி தனியே சொல்லியனுப்பி இருப்பதாக தயாநிதி மாறன் தில்லியில் சொல்லிவருவதாக நீரா, கனிமொழியிடம் சொல்கிறார்.

7. தயாநிதி பொய் சொல்வதாகவும் பொய்களைப் பரப்புவதாகவும் கனிமொழி, நீராவிடம் சொல்கிறார். அதற்கு நீரா, சென்னையில் சன் டி.வி.காரர்கள் இதர வட இந்திய சேனல்கள் எல்லோரிடமும் தவறான செய்திகளை வேண்டுமென்றே பரப்புகிறார்கள் என்று தம்மிடம் சி.என்.என்.ஐ.பி.என். சேனலின் ராஜ்தீப் சர்தேசாய் கூறியதாகத் தெரிவிக்கிறார்.

8. தயாநிதி, பதவி ஏற்பு நிகழ்ச்சிக்குச் செல்லப் போவதாக நீரா, கனிமொழியிடம் சொல்கிறார். போகக்கூடாது என்று கருணாநிதி சொல்லியிருப்பதாகக் கனிமொழி சொல்கிறார். ராசாதான் போகவேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறதாம். ஆனால் தயாநிதி பின்னால் கருணாநிதியிடம் வந்து அகமது படேல் கூப்பிட்டதால் சென்றேன் என்று ஏதாவது கதை விடுவார் என்கிறார் கனிமொழி. இதையெல்லாம் அப்பாவிடம் சொல்ல வேண்டி யதுதானே என்று நீரா கேட்கிறார். அய்யோ அவருக்குப் புரியவே புரியாது, என்று அலுத்துக் கொள்கிறார் கனிமொழி. விரக்தியடையாதே. நீதான் மகள். நீதான் அப்பாவிடம் பேசவேண்டும் என்று ஆறுதல் சொல்கிறார் நீரா.

9.தமக்கு கேபினட்டில் என்ன துறை தருவார்கள் என்று நீராவிடம் கனிமொழி கேட்கிறார். நல்வாழ்வு, சுற்றுச் சூழல், விமானத்துறைகளில் ஒன்றைத் தரச் சொல்லியிருப்பதாக நீரா சொல்கிறார். சுற்றுலா வேண்டாம் என்கிறார் கனிமொழி.

10. தொழிலதிபர் ரத்தன் டாட்டாவுடன் நீரா பேசும்போது, அமைச்சர் ராசாவை தயாநிதி துரத்தித் துரத்தி அடிப்பது கவலையாக இருப்பதாக டாட்டா சொல்கிறார். எதுவும் ஆகாது. அப்படியே ஆனாலும், ராசா இடத்துக்குக் கனிமொழிதான் வருவார் என்று ஆறுதல் சொல்கிறார் நீரா.

11. இன்னொரு பேச்சில், ராசாவுக்காக இவ்வளவு செய்திருந்தும் இப்படி ( நமக்குச் சாதகமில்லாமல்) நடந்துகொள்கிறாரே என்று கவலைப்படுகிறார் ரத்தன் டாட்டா. கோர்ட் உத்தரவினால் அப்படி என்று தம்மிடம் ராசா விளக்கியதாகவும் கோர்ட் உத்தரவைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். அதற்கு வியாக்யானம் சொல்வது ராசா கையில்தான் இருக்கிறது என்று ராசாவிடம் சொல்லிவிட்ட தாகவும் நீரா தெரிவிக்கிறார்.

12. புதிய அட்டர்னி ஜெனரல் பற்றி ரத்தன் டாட்டா கவலை தெரிவிக்கிறார். அவரைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நமக்கு சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம்தான் முக்கியம். அவரைப் பார்க்கப்போகிறேன். அவருக்கு அனில் அம்பானியைத் துளியும் பிடிக்காது. நேர்மையானவர். (!) அனில் சொல்வதை ஒப்புக் கொள்ளமாட்டார் என்று நீரா பதிலளிக்கிறார்.

13. அனில் அம்பானியின் குழப்படிகள் பற்றி ஏன் மீடியா அம்பலப்படுத்தாமல் இருக்கிறது என்று டாட்டா, நீராவைக் கேட்கிறார். விளம்பர பலம்தான். ஏதாவது நெகட்டிவாக எழுதினால் உடனே விளம் பரத்தை நிறுத்திவிடுகிறார்கள் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவும் தைனிக் பாஸ்கர் பத்திரிகையும் சொல்கிறார்கள். மற்றவர்களும் இதைச் செய்யமுடியுமே என்றேன். மீடியா ரொம்ப ரொம்ப பேரா சைப்படுகிறது என்று விளக்குகிறார் நீரா.

14. என்.டி. டி.வி.யின் பர்க்கா தத்துடன் நீரா பேசுகிறார். இருவரும் காங்கிரஸ் - தி.மு.க அமைச்சர் பதவிப் பங்கீடு பேச்சு வார்த்தைகளை விவாதிக்கிறார்கள். தாம் காங்கிரஸ் தரப்பிடம் என்ன தெரிவிக்க வேண்டும் என்று பர்க்கா கேட்கிறார். தாம் அம்மா, மகள் (ராஜாத்தி, கனிமொழி) இரு வருடனும் பேசிவிட்டதாகவும் , காங்கிரஸ் தலைவர்கள் கருணாநிதியிடம் நேரடியாகப் பேசவேண்டும் என்றும் தயாநிதி மாறன், பாலு இருவரையும் வைத்துக் கொண்டு பேசக் கூடாது என்றும் நீரா சொல்கிறார்.

15. ஹிந்துஸ்தான் டைம்ஸின் ஆசிரியர் இயக்குனர் வீர் சிங்வியும் நீராவும் பேசுகிறார்கள். சிங்வி, தாம் தொடர்ந்து சோனி யாவையும் ராகுலையும் சந்தித்து வருவதாகச் சொல்கிறார். அமைச்சர் இலாக்கா பங்கீட்டுப் பிரச்னை காங்கிரஸ்-தி.மு.க பிரச்னை அல்ல. தி.மு.கவின் உள்தகராறுதான் என்கிறார். இரண்டு மனைவிகள், ஒரு சகோதரன், ஒரு சகோதரி, ஒரு மருமகன், என்று எல்லாம் ஒரே சிக்கலாக இருக்கிறது. கருணாநிதி தானே நேரில் பேசட்டும். அல்லது இன்னார்தான் தம் சார்பில் என்று ஒரே ஒருவரைத் தெரிவிக்கட்டும். ஆளுக்கு ஆள் பேசுகிறார்கள். தயாநிதி, குலாம் நபி ஆசாதை அடிக்கடி கூப்பிட்டு நான் தான் அதிகாரபூர்வமான பிரதிநிதி என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். யாரும் அவரை சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை என்று வீர் சிங்வி சொல்கிறார்.

16. நீரா உடனே தயாநிதி மாறனை அமைச்சரவையில் சேர்க்கப் பெரும் நிர்ப்பந்தம் இருப்பதாகச் சொல்கிறார். என்ன நிர்ப்பந்தம்? தயாநிதி, கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 600 கோடி ரூபாய் கொடுத்திருப்பதாகவும் அதனால் ஸ்டாலினும், செல்வியும் நிர்ப் பந்திப்பதாகவும் நீரா சொல்கிறார்.

இப்படியாகத் தமிழ் நாட்டின் மானத்தை தில்லியில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் குடும்பம் நாறடித்துக் கொண்டிருக்கும் கதை தொடர்கிறது.

படிக்கப் படிக்க ரத்தம் கொதிக்கிறது...

மேலே கொடுக்கப்பட்டது சுருக்கம்தான். முழு உரையாடல்களைக் கேட்டால், மந்திரி பதவிக்கான வெறி, ஆவேசம், பேராசை, நினைத்தபடி ஒவ்வொன்றும் நடக்கவில் லையே என்ற ஆதங்கம், எரிச்சல், எப்படி யாவது காரியத்தை முடித்துவிடவேண்டு மென்ற பதைப்பு எல்லாம் கனிமொழியின் பேச்சில் தொனிக்கின்றன. ஒவ்வொருவர் பேச்சிலும் ஒரு தொனி இருக்கிறது. தைரியம், மமதை, எல்லாம் தம் கண்ட்ரோலில் இருக்கிறது என்ற மிதப்பு எல்லாம் தெரிகின்றன.

இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை களையே உலுக்கும் கேள்விகளையும் அவற்றுக்கு அதிர்ச்சியான பதில்களையும் இந்த டேப்கள் நமக்குள் எழுப்புகின்றன.

கேள்வி 1: அமைச்சர்களைத் தேர்ந் தெடுப்பது யார்? பிரதமரா? தொழிலதி பர்களா?

பதில்: தொழிலதிபர்கள்தான். மன் மோகன்சிங் ஒரு டம்மி பீஸ்.

கேள்வி 2: எதற்காகக் குறிப்பிட்ட துறை தமக்கு வேண்டுமென்று அலைகிறார்கள்? தொண்டு செய்யவா? கொள்ளையடிக்கவா?

பதில்: கேள்வி கேட்ட முட்டாளே! தொண்டுக்கும் அரசியலுக்கும் என்ன சம் பந்தம் ? கொள்ளையடிக்கத்தான்.

கேள்வி 3: எல்லா ஊழல்களையும் முறை கேடுகளையும் அம்பலப்படுத்தும் மீடியா காரர்கள் அரசியல்வாதிகளுடன் செய்தி சேகரிக்கப் பேசினால் குற்றமா ? அது தரகு வேலை பார்ப்பதாகிவிடுமா?

பதில்: செய்தி சேகரிப்பவரின் தொனி வேறு. தரகு பேர்வழியின் தொனி வேறு. நிச்சயம் ராடியா டேப்களில் இருக்கும் தொனி தரகர்களின் தொனிதான்.

கேள்வி 4 : ராடியா டேப்கள் பற்றி கருணாநிதி, கனிமொழி, ராசா, தயாநிதி மாறன், மன்மோகன்சிங், சோனியா, ராகுல் காந்தி, ரத்தன் டாட்டா ஆகியோர் ஏன் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை ?

பதில்: சொன்னாலும் நாம் நம்பப் போவதில்லை என்பது அவர்களுக்குத் தெரியும் என்பதால்தான்.

கேள்வி 5: இத்தனைக்கும் பிறகு எப்படி மக்களைத் தேர்தலில் சந்திக்கத் தெருத் தெருவாக இனி வருவார்கள் ?

பதில்: ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய்களில் ஒரு துளியை, கவர்களில் கொடுத்தால் மக்களுக்குப் போதுமானது என்று அவர்கள் நம்புவதனால்தான்.

இந்தக் கட்டுரையை எப்படி முடிக்க? கண்கள் பனித்தன. நெஞ்சம் இனித்தது என்றா?

நன்றி: கல்கி  

Tuesday, December 14, 2010

காதலித்துப்பார் !!

காதலித்துப் பார்!

உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்
விளங்கும்....

உனக்கும்
கவிதை வரும்...
கையெழுத்து
அழகாகும்.....
தபால்காரன்
தெய்வமாவான்...

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்...

காதலித்துப்பார் !

தலையணை நனைப்பாய்
மூன்று முறை
பல்துலக்குவாய்...

காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்...

காக்கைகூட உன்னை
கவனிக்காது
ஆனால்...

இந்த உலகமே
உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்...

வயிற்றுக்கும்
தொண்டைக்கமாய்
உருவமில்லா
உருண்டையொன்று
உருளக் காண்பாய்...

இந்த வானம்
இந்த அந்தி
இந்த பூமி
இந்த பூக்கள்
எல்லாம்

காதலை கவுரவிக்கும்
ஏற்பாடுகள்
என்பாய்

காதலித்துப் பார்!

இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்...

நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்...

உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே
அம்புவிடும்...

காதலின்
திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்...

ஹார்மோன்கள்
நைல் நதியாய்ப்
பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்...

தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகு
கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்...

காதலித்துப் பார்!

சின்ன சின்ன பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே...

அதற்காகவேனும்
புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே...

அதற்காகவேனும்...
ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தம் விளங்குமே..

அதற்காகவேனும்...
வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே

செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...

காதலித்துப் பார்!
- கவிப்பேரசு வைரமுத்து


Monday, December 13, 2010

தன்மானத் தமிழன் விவசாயி விஜயகுமார்

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக் கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.

கடந்த 23-ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க.செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது.அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து
விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச் சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார்.

அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிக் கொண்டார்.ஒரு விநாடி அங்கே நின்றவர்,டி.வி.யை பெரியண்ண அரசுவிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு,கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார்.ஏதோ கோரிக்கை மனு
கொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக வாங்கிப் படித்தார்.

அதில் மனிதனுக்கு டி.வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் அதைவிட முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள் இருக்கின்றன. இவை தன்னிறைவு அடைந்து விட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப் பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்து விட்டதா?

துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வந்தது?இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள் தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழங்கும் பணத்தை வைத்து விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.

தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு அடையச் செய்திருக்கலாம். இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான
மருத்துவம், கல்வி, மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே போதும்.

அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார் வரை அனைத்தையும் வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து தன்னிறைவு அடைந்து விடுவோம்.

விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, லஞ்சம், ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம்.
முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும் உள்ளது.

எனவே,இந்த டி.வி.யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம் மேலும் வேதனைப்படும். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச்
செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும்என்று நீண்டது அந்த மனு.

இதைப் படித்த பெரியண்ண அரசு முகத்தில் ஈயாடவில்லை.அருகில் இருந்த அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். என்றாலும் அந்த மனுவையும் டி.வி.யையும் வாங்கி வைத்துக் கொண்டு மேலும் பரபரப்பை உண்டாக்காமல் விஜயகுமாரை அனுப்பி
வைத்தார் அரசு.

இதன் பின்னர் விஜயகுமாரிடம் பேசினோம்.

நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின்வெட்டால் பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் ஸ்டேட்காரன்கிட்ட வித்துட்டு நகரத்துல போய் கூலி வேலைக்கும்,ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்கான்.

இந்த நிலை, நாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது. எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது. ராத்திரியில படுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது.

சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும் வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு.ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும் ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடி குடும்ப அட்டைகள் இருக்கு.2கோடி குடும்ப அட்டைக்கும் டி.வி. கொடுத்தால் இருபது லட்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு அடையச் செய்தாலே போதுமே.

கனத்த இதயத்தோடும், வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி.வி.? அவன் பொழப்பே சிரிப்பா சிரிக்கும்போது அவன் டி.வி. பாத்து வேற சிரிக்கணுமாக்கும்.அதுனாலதான் நான் டி.வி.யை திருப்பிக் கொடுத்தேன்’’ என்றார்.

டி.வி.யை திருப்பிக் கொடுத்த கையோடு முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார்.


அந்தக் கடிதத்தில் கொத்தமங்கலத்துக்கு வந்த டி.வி.க்கள் 2519. அதில் 2518 மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு டி.வி.யை எனது அன்புப் பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ் செய்துள்ளார்.

மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்படும் லஞ்சம் தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார் பொட்டில் அடித்தாற்போல் தெளிவுபடுத்தியுள்ளார். மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசத்துக்கு எதிராக
போர் தொடுத்திருக்கும் அவரை பாராட்டத்தான் வார்த்தைகளே கிடைக்கவில்லை...!

நீ அழையாத என் கைபேசி..

வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்
காதலில்லாத என் கைபேசியை..
.
எழுத்துப் பலகைகள்
தேயப்பெற்ற காலம்போய்
எப்போதும் உறங்குகிறது..
நீ அழையாத என் பேசி.
.
எடுத்தெடுத்துப் பார்க்கிறேன்
நம் பழைய குறுஞ்செய்திகளை..
.
கவிதைகள் இல்லையெனினும்
காதலின் அடையாளங்கள் அழகாய்..
.
வினாடிகளையும் தோற்கடிக்கும்
நம் அடுத்தடுத்த பதில் பறிமாற்றங்கள்..
ஒவ்வொரு நாளின்
தொடக்கமும் முடிவும்
முடிவில்லாமல்..
.
நினைத்துப் பார்க்கிறேன்..
நேரமறியாத நள்ளிரவுகளில்
காதுமடல் சுட்டதையும்
கண்கள் உறக்கத்திற்கு சொருகியதையும்
பொருட்படுத்தாது நீண்டுபோன
நமக்கான உரையாடல்களை..
.
சொல்ல மறந்துவிட்டேனென..
சொன்னது கேட்கவில்லையென..
இப்போதுதான் நடந்ததென..
யாரோ சொன்னதென..
எத்தனை எத்தனையோ சாக்குகள்.
நம் குரல் கேட்க ப்ரயோகித்தோம்..
.
காத்திருப்பு ஒலியிருப்பின்..
ஒருவருக்கொருவர்
செல்லமாய்க் கோபித்து
சிரிக்காமல் சீண்டுவோம்..
சிணுங்கியபின் சிக்கிடுவோம்..
சமாதானம் எனும் சிறையில்..
.
பேசிக்கொண்டே ஓர்முறை
நானுறங்கிப்போக..
துண்டிக்க மனமில்லையென
தொடர்ந்து கொஞ்சினாய்
என் மௌனத்தை..
.
உனக்குத் தெரியுமா..
உறங்கும் நடிப்பில் நீயறியாது
உன் கொஞ்சல்களை
இன்றும் சேமித்து வைத்திருக்கிறேன்
என் அலைபேசியின் பதிவுகளில்..
.
புரட்டிப்போட்டதோ..
புரண்டுவிட்டதோ..
காரணம் அறியாத
கேள்விக் குறியாய்..
.
ஆயுள் முழுவதுக்குமான
ஒட்டுமொத்தக் காதலையும்
ஒருசேரத் தீர்த்துவிட்டோமோ???
அவசரமாய் முடிந்துவிட்டது
அணுவணுவாய் ரசித்த அனைத்தும்.
.
செல்லக் கொஞ்சல் வேண்டாம்
சின்னச் சிணுங்கலாவது போதும்.
வாசல் திறக்க வேண்டாம்
ஜன்னல் மட்டுமாவது போதும்.
காதல் பார்வை வேண்டாம்..
ஓரப்பார்வையாவது போதும்..
பார்த்துப் பழக வேண்டாம்..
பாதிப் பேச்சுக்களாவது போதும்..
.
முணுமுணுத்தபடி மூழ்கிப்போகிறேன்
உன்மீதான நினைவுகளில்..
மூச்சுத்திணறுகிறது..
ஆனாலும் மீள மனமில்லை..
.
விழிநீர் துடைத்து
வெறுமையை சுமந்து
வெற்றிடமாய் நான்..
விரும்பிய நாட்கள்
திரும்பாதா எனும் ஏக்கத்தில்..
.
காத்திருப்பு சுகம் தான் காதலில்..
காயமில்லாதிருப்பின்.
கனப்பதில்லை எப்போதும் மனது..
வலியில்லாதிருப்பின்.
.
இன்னும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
உன் அழைப்பிற்கு ஏங்கும்
நீ அழையா என் பேசியை..
-- இந்திரா


Thursday, December 9, 2010

வைரமுத்துவின் புதுக்கவிதைகள்

புதுக்கவிதைக் காலம் -1
ஏப்ரல் சூரியன்
டீசல் புகை
பேருந்து நெரிசல்
அலுவலக எரிச்சல்
இவையெதிலும் வாடாமல்
பத்திரமாய் வைத்திருக்கிறேன்
உனக்குத் தெரியாமல் உதிர்ந்து
யாருக்கும் தெரியாமல் நான் கவர்ந்த
உன் கருங்கூந்தற் சிறுபூவை

புதுக்கவிதைக் காலம் - 2
உன்வீட்டு
ஆன்ட்டனாவிலும்
என்வீட்டு
நைலான் கொடியிலும்
தனித்தனியே காயும்
நேற்று
ஊருக்கு வெளியே நாம்
ஒன்றாய்
அழுக்குச் செய்த உள்ளாடைகள்


- கவிப்பேரரசு வைரமுத்து
 
 

Wednesday, December 8, 2010

கண்ணீர் - ஹைக்கூ

கண்ணீரைப் படைத்தது
கடவுளின் தவறா
ஆனந்தப்பட்டு
அதை வடிக்காமல்
அழுது வடிக்கும்
மனிதனின் தவறா?
-- நீலமணி

Tuesday, December 7, 2010

ஹைக்கூ

சந்தை
இரைச்சலிலும்
தனியாய்க் கேட்கிறது
(அவளது)
வளையோசை.
-- வடுவூர் சிவமுரளி 

கண்ணொடு கண்ணை - ’மன்மதன் அம்பு’ பாடல்

கண்ணொடு கண்ணைக் கலந்தாளென்றால்
களங்கம் உள்ளவள் எச்சரிக்கை
உடனே கையுடன் கைகோர்த்தாளா

ஒழுங்கங் கெட்டவள் எச்சரிக்கை
ஆடை களைகையில் கூடுதல் பேசினால்
அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை
கலவி முடிந்த பின் கிடந்து பேசினால்
காதலாய் மாறலாம் எச்சரிக்கை
....
உன்னுடன் இருப்பது சுகமென்றாளா
உறுதியாய்ச் சிக்கல் எச்சரிக்கை
அறுவடை கொள்முதல் என்றே காமம்
அமைவது பொதுவே நலமாகக் கொள்
கூட்டல் ஒன்றே குறியென்றான பின்
கழிப்பது காமம் மட்டும் எனக்கொள்
உன்னை மங்கையர் என்னெனக் கொள்வர்
யோசிக்காமல் வருவதை எதிர்கொள்
முன்னும் பின்னும் ஆட்டும் சகடை
ஆணும் பெண்ணும் அதுவேயெனக்கொள்
காமமெனப்படும் பண்டைச் செயலில்
காதல் கலவாது காத்துக்கொள்
....

கலவி செய்கையில் காதில் பேசி
கனிவாய் மெலிதாய்க் கழுத்தைக் கவ்வும்
வெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும்
குழந்தை வாயை முகர்ந்தது போலக்
கடும் நாற்றமில்லாத வாயும் வேண்டும்
காமக் கழிவுகள் கழுவும் வேளையும்
கூட நின்றுவன் உதவிட வேண்டும்
....
வங்கியில் இருப்பு வீட்டில் கருப்பென
வழங்கிப் புழங்கிட பணமும் வேண்டும்
....
இப்படிக் கணவன் வரவேண்டும் என
ஒன்பது நாட்கள் நோம்பு இருந்தேன்
வரந்தருவாள் என் வரலட்சுமியென
கடும் நோம்பு முடிந்ததும் தேடிப்போனேன் பீச்சுக்கு
....
தொந்தி கணபதிகள் திரிவது கண்டேன்
முற்றும் துறந்து மங்கையரோடு
அம்மணத் துறவிகள் கூடிடக் கண்டேன்
...
மூத்த அக்காள் கணவனுக்கு
முக்கால் தகுதிகள் இருந்தும் கூட
அக்காளில்லா வேளையில் அவன்
சக்காளத்தி வேண்டும் என்றான்
...
வரம்தரக் கேட்ட வரலட்சுமியுனக்கு
வீட்டுக்காரர் அமைந்தது எப்படி?
நீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது?
உறங்கிக்கொண்டே இருக்கும் உந்தன்
அரங்கநாதன் ஆள் எப்படி?
பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும்
வாஸ்தவமாக நடப்பது உண்டோ?
அதுவும் இதுவும் உதுவும் செய்யும்
இனிய கணவர் யார்க்குமுண்டோ?
உனக்கேனுமது அமையப் பெற்றால்
உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான்
நீ அதுபோல எனக்கும் அமையச் செய்யேன்
ஸ்ரீ வரலட்சுமி நமோஸ்துதே!

-- பத்மஸ்ரீ கமலஹாசன்

Monday, December 6, 2010

Stop Stressing... Start Living...


"Give your Stress wings and let it fly away"
 
stress ('stres)
bodily or mental tension resulting from factors that tend to alter an existent equilibrium
 
"Stress is not what happens to us. It's our response TO what happens. And RESPONSE is something we can choose"
Stress is our natural way of responding to the demands of our ever-changing world. Although we all experience change and demands regularly, the way that we interpret these internal and external changes directly affects the degree to which we feel stress. As a result, not all individuals interpret the same events as stressful; what may seem stressful to you may not be the same for your best friend, and vice versa.
 
"Pressure and stress is the common cold of the psyche"
Although some stress is a natural and inevitable part of our lives, feeling burdened or unable to cope can be problematic and can seriously affect your mental and physical well-being. Constantly being exposed to stressful situations can be over-stimulating and if we are constantly feeling stressed, we may begin to feel unable to manage the problems at hand. In order to avoid situations in which we feel “overloaded,” we must first identify what stresses us, what our threshold for stress is, and how we can most effectively manage stressful situations.
 
"Stress is when you wake up screaming and you realize that you haven't fallen asleep yet."
 

Causes
 
" There are thousands of causes of stress and one antidote to stress is self expression."
Many external and internal factors can cause stress.
Environment – We all have highly individual responses to the world around us. One person may feel equally comfortable in a small town and a big city whereas another person may be overwhelmed by a city’s noise, intense pace, and crowded streets.
Events – From taking final exams to introducing your significant other to your family, many situations can lead to stress. Some examples of stressful events include personal or family illness, increased work load, roommate conflicts, and more. Multiple events often combine and can leave you feeling weighed down.
Expectations – Many of us demand a lot from ourselves and from others. Examples of
expectation-related stress include receiving lower grades than expected and not getting certain internships or jobs. Stress has a close link with perfectionism
 

Am I stressed?
 
Stress Symptoms
Before being able to identify stressors (the things that make us stressed in the first place), it is important to identify whether or not stress has become a problem in your life. Take note of any emotional and physical changes that you have recently experienced:
• Are you irritable?
• Are you easily upset over small events?
• Are you feeling isolated or withdrawn from your peers and loved ones?
• Are you unhappy with yourself? (i.e., do you have feelings of worthlessness?)
 
Physically, are you experiencing.
• Sleeplessness?
• Irregular eating?
• Difficulty breathing?
• Low energy?
• Lack of concentration?
• Loss of interest?
• Over-tiredness?
 
 
I'm stressed... what do I do Now?
 
"In times of stress, be bold and valiant."
"Take rest; a field that has rested gives a bountiful crop."
 
1. Create Mind & Body Balance
Practice Deep Breathing
Exercise
Sleep
Eat Well
 
2. Positively Adjust your Attitude
Know and respect your limits
Be an advocate of yourself instead of a critic
Visualize Success
 
3. Reach Out
Shift your focus
Talk to others
Explore your spiritual side
 
"Stress is an ignorant state.
It believes that everything is an emergency."


WAYS TO CUT STRESS
One of a Cardiac Surgeon having this writes-up on his table
Have fun :
Do things for the sheer fun of it.
Each day plan to do something “Just for you”.
Even if you have only 30 minutes of fun time,
don’t let anything stop you from your 30 minutes.
 
Laugh :
Interact with people who make you laugh to reduce tension and boost immune system.
 
Learn to say “NO” :
Too much fun can become boring.
When requests and irritations become a burden instead of being enjoyable learn to say “NO”.
 
Simplify your life :
Move closer to your work, hire a maid or shop by internet.
 
Delegate responsibility :
Sharing duties allows time together and gets the job done faster.
 
Learn to relax :
Periodically visualize calming scenes, stretch and take deep breaths.
 
Don’t be workaholic :
Find a healthy balance between health and play.
 
Break tasks into segments :
Break down tasks into easy to handle segments and problems.
It is easier to eat an elephant one bite at a time.
 
Keep your job skills current :
If you have current job skills, changes and layoffs at work are not so stressful.
You can take the attitude of an acquaintance of mine who takes work with an “Oh! Well, I was looking for a job when I got this one. And I might be looking again”. He knows his job skills are in demand.
 
Take care of your family and friends :
Having Relationships in your life is less stressful.
 
Examine work habits :
If you are constantly stressed at work, examine your work habits.
May be you are wasting time.
 
Drink water :
Consume 8-10 glasses of pure water daily
 
Eat sensibly :
You are what you eat. A diet change would help you, too.
 
Get quality sleep :
Sleep is an essential recovery mechanism.
Sleep on your back or sides, not on your stomach
 
Stop using drugs :
Stop smoking, avoid recreational drugs and alcohols.
Remember that food is a drug also.
 
Schedule time :
Allow enough time to reach the place or goal you wish without rushing.
 
Exercise regularly :
Take a vigorous work, Jog or swim for an average of 20 minutes daily or
45 minutes three times a week.
 
Control your attitude :
About the only part of your life you can control completely is your attitude.
 
Be prepared :
Being prepared stops stress in advance.
 
Think positive :
If something is stressful, make a list of every positive aspect of your situation.
 
Improve yourself :
Broaden your knowledge through reading, seminars and self-improvement courses.
 
Live within your means :
Constantly overspending is definitely stressful.
 
Save money :
Having an emergency “nest egg” makes you less stressed.
 
Consider a career change :
Burnout can be very stressful.
If that has happened to you, consider changing careers.
 
Handle stress now :
Putting off stressful events only makes them more stressful.
Settle matters that are troubling you “as they occur”.
Procrastination usually leads to increased stress, so don’t procrastinate.
... Start Living...
Brought to you by 'SIP Friends Welfare Trust'
www.sipfriends.org

You may also like