Showing posts with label பாடல். Show all posts
Showing posts with label பாடல். Show all posts

Monday, December 4, 2017

சாரட்டு வண்டில சீரட்டொளியில


சாரட்டு வண்டில சீரட்டொளியில
ஓரந்தெரிஞ்சது உம்முகம்.
உள்ளம் கிள்ளும் அந்தக் கள்ளச் சிரிப்புல
மெல்லச் சிவந்தது எம்முகம்.
சாரட்டு வண்டில சீரட்டொளியில
ஓரந்தெரிஞ்சது உம்முகம்.
உள்ளம் கிள்ளும் அந்தக் கள்ளச் சிரிப்புல
மெல்லச் சிவந்தது எம்முகம்.
அடி வெத்தல போட உதட்ட எனக்கு
பத்திரம் பண்ணிக்குடு.
நான் கொடுத்த கடன திருப்பிக் குடுக்க
சத்தியம் பண்ணிக்குடு.
என் ரத்தம் சூடு கொள்ள பத்து நிமிஷம்
தான் ராசாத்தி.
ஆணுக்கோ பத்து நிமிஷம் ஹ...
பொண்ணுக்கோ அஞ்சு நிமிஷம் ஹ...
பொதுவா சண்டித்தனம் பண்ணும் ஆம்பளய பொண்ணு
கிண்டிக் கெழெங்கெடுப்பா.
சேலைக்கு சாயம் போகு மட்டும்
உன்ன நான் வெளுக்க வேணுமடி.
பாடுபட்டு விடியும் பொழுது
வெளியில் சொல்ல பொய்கள் வேணுமடி.
புதுப் பொண்ணே
அதுதாண்டி தமிழ்நாட்டுப் பாணி.
சாரட்டு வண்டில சீரட்டொளியில
ஓரந்தெரிஞ்சது உம்முகம்.
உள்ளம் கிள்ளும் அந்தக் கள்ளச் சிரிப்புல
மெல்லச் சிவந்தது எம்முகம்.
சாரட்டு வண்டில சீரட்டொளியில
ஓரந்தெரிஞ்சது உம்முகம்.
உள்ளம் கிள்ளும் அந்தக் கள்ளச் சிரிப்புல
மெல்லச் சிவந்தது எம்முகம்.

வெக்கத்தயே கொழச்சு கொழச்சு
குங்குமம் பூசிக்கோடி...
ஆசை உள்ள வேர்வைய போல்
வாசம் ஏதடி
ஏ பூங்கொடி... வந்து தேன்குடி
அவன் கைகளில் உடையட்டும்
கன்னி கண்ணாடி

கத்தாழங் காட்டுக்குள் மத்தளம் கேக்குது
சித்தானை ரெண்டுக்கும் கொண்டாட்டம்.
குத்தாலச் சாரலே.. முத்தான பன்னீரே..
வித்தார கள்ளிக்கு துள்ளாட்டம்
அவ மன்மத காட்டுச் சந்தனம் எடுத்து
மார்பில் அப்பிக்கிட்டான்.
இவ குரங்கு கழுத்தில்
குட்டியப் போல தோளில் ஓட்டிக்கிட்டா
இனி புத்தி கலங்கற முத்தம் கொடுத்திரு ராசாவே...

பொண்ணுதான் ரத்தினக் கட்டி... ஹா.. 
மாப்பிள்ள வெத்தலப் பொட்டி
எடுத்து ரத்தினக் கட்டிய வெத்தல பொட்டியில்
மூடச் சொல்லுங்கடி.
மொதலில் மால மாத்துங்கடி
பிறகு பால மாத்துங்கடி.
கட்டில் விட்டு காலையிலே கசங்கி வந்தா
சேலை மாத்துங்கடி..
மகாராணி.. அதுதாண்டி தமிழ்நாட்டுப் பாணி..
கத்தாழங் காட்டுக்குள் மத்தளம் கேக்குது
சித்தானை ரெண்டுக்கும் கொண்டாட்டம்.
குத்தாலச் சாரலே.. முத்தான பன்னீரே..
வித்தார கள்ளிக்கு துள்ளாட்டம்
புதுப் பொண்ணே
அதுதாண்டி தமிழ்நாட்டுப் பாணி.


-- கவிப்பேரரசு வைரமுத்து.

Monday, February 6, 2017

வான்... வருவான்... காற்று வெளியிடை!


வான்
வருவான்
தொடுவான்

மழைபோல் விழுவான்
மர்மம் அறிவான்
என்னுள் ஒளிவான்

அருகில் நிமிர்வான்
தொலைவில் பணிவான்

கர்வம் கொண்டால்
கல்லாய் உறைவான்
காதல் வந்தால்
கனியாய் நெகிழ்வான்
*
என்னோடி ருந்தால்
எவளோ நினைவான்
அவளோடி ருந்தால்
எனையே நினைவான்

என்னைத் துறவான்
என்பேர் மறவான்
என்னை மறந்தால்
தன்னுயிர் விடுவான்

கண்கள் கவிழ்ந்தால்
வெளிபோல் விரிவான்
கண்கள் திறந்தால்
கணத்தில் கரைவான்.
-- கவிப்பேரரசு வைரமுத்து

Wednesday, May 4, 2016

தள்ளிப் போகாதே...


ஏனோ வானிலை மாறுதே...
மணித்துளி போகுதே...
மார்பின் வேகம் கூடுதே...
மனமோ ஏதோ சொல்ல
வார்த்தை தேடுதே.....

கண்ணெல்லாம் நீயேதான் நிற்கின்றாய்....
விழியின் மேல் நான் கோபம் கொண்டேன்....
இமை மூடிடு என்றேன்....

நகரும் நொடிகள்.....
கசையடி போலே
முதுகின் மேலே
விழுவதினாலே...
வரிவரிக் கவிதை
எழுதும் வலிகள்
எழுதா மொழிகள்....... எனது...!.

கடல் போலப் பெரிதாக நீ நின்றாய்.....
சிறுவன் நான்,
சிறு அலை மட்டும்தான்....
பார்க்கிறேன்...... பார்க்கிறேன்......!

எரியும் தீயில் எண்ணெய் நீ ஊற்று...
நான் வந்து நீராடும் நீரூற்று !.

ஓ ஓ ஓ
ஊரெல்லாம் கண்மூடித் தூங்கும்
ஓசைகள் இல்லாத இரவே.....!
ஓ ஓ ஓ
நான் மட்டும் தூங்காமல் ஏங்கி
உன்போலக் காய்கின்றேன் நிலவே......!

கலாபம் போலாடும் கனவில் வாழ்கின்றேனே....!

கை நீட்டி..... உன்னைத்...
தீண்டவே பார்த்தேன்...
ஏன் அதில் தோற்றேன்...?

ஏன் முதல் முத்தம்
தரத் தாமதம் ஆகுது....?
தாமரை வேகுது....
தாமரை வேகுது....

தள்ளிப் போகாதே....
எனையும் தள்ளிப் போகச்
சொல்லாதே....
இருவர் இதழும்
மலர் எனும் முள்தானே.....!

தள்ளிப் போகாதே....
எனையும் தள்ளிப் போகச்
சொல்லாதே....
இருவர் இதழும்
மலர் எனும் முள்தானே.......!

தேகம் தடையில்லை... என நானும்
ஒரு வார்த்தை சொல்கின்றேன்....
ஆனால் அது பொய்தான்... என நீயும் 
அறிவாய் என்கின்றேன்....
அருகினில் வா.....!

(அடுக்கிசை)
கனவிலே தெரிந்தாய்
விழித்ததும் ஒளிந்தாய்
கனவினில் தினம் தினம் மழைத்துளியாய்ப் பொழிந்தாய்!
கண்களில் ஏக்கம்
காதலின் மயக்கம்
ஆனால் பார்த்த நிமிடம் ஒருவிதமான தயக்கம்
நொடி நொடியாய் நேரம் குறைய
என் காதல் ஆயுள் கரைய
ஏனோ ஏனோ மார்பில் வேகம் கூட
விதியின் சதி விளையாடுதே
எனை விட்டு பிரியாதன்பே.... எனை விட்டு பிரியாதன்பே
ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ

அன்பே..

-- தாமரை 

Monday, March 30, 2015

கனவே கனவே கலைவதேனோ - David Movie Song





கோரமான மரணம் ஒன்று
உயிரைக் கொண்டுப் போனதே
உயரமான கனவு இன்று
அலையில் வீழ்ந்து போனதே
இசையும் போனது திமிரும் போனது
தனிமை தீயிலே வாடினேன்
நிழலும் போனது நிஜமும் போனது
எனக்குள் எனையே தேடினேன்

கனவே கனவே கலைவதேனோ
கரங்கள் ரணமாய் கரைவதேனோ
நினைவே நினைவே கரைவதேனோ
எனது உலகம் உடைவதேனோ

கண்கள் ரெண்டும் நீரிலே
மீனைப் போல வாழுதே
கடவுளும் பெண் இதயமும்
இருக்குதா அட இல்லையா

ஓ ஹோ நானும் இங்கே வலியிலே
நீயும் அங்கோ சிரிப்பிலே
காற்றில் எங்கும் தேடினேன்
பேசி போன வார்த்தையை
இது நியாயமா மனம் தாங்குமா
என் ஆசைகள் அது பாவமா

கனவே கனவே கரங்கள் ரணமாய்
நினைவே நினைவே கலைவதேனோ
எனது உலகம் உடைவதேனோ
-- மோகன் ராஜ்  (டேவிட்)

Tuesday, November 27, 2012

ரீவைண்ட் ராகம்!


ந்த ஒரு தொழில்நுட்பத்திலும் நன்மையும்  இருக்கிறது, தீமையும் இருக்கிறது. அதை நாம் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் தான் அது நமக்கு சாதகமாகவோ, பாதகமாகவோ அமைகிறது.
மாட்டு வண்டிகள் இருந்த காலத்தில் அதில் பயணித்த அனுபவத்திற்கும், இப்போது பல்சரில் (Pulzar) பறக்கும் அனுபவத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. எனினும் அந்த பழைய மாட்டு வண்டியில் பயணித்த நாட்களை நினைக்கும் போது மனதில் எழும் பசுமையான நினைவுகள் நம்மை சந்தோஷப்படுத்தும். இதனால் பல்சர் பைக்கே தேவையில்லை என்பது இல்லை. பழைய தொழில்நுட்பங்களில் இருக்கும் (இருந்த ?! ) மகிழ்ச்சியை மட்டுமே இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

நமக்கு நினைத்த நேரத்தில் பாடல்கள் கேட்க வேண்டும் எனில் கையில் இருக்கும் செல்போன் மட்டுமே இன்றைய காலத்தில் போதுமானதாக இருக்கிறது. எஃப்.எம்., மெமரி கார்டு மூலம் நினைத்த வேளையில் பாடல்களைக் கேட்கிறோம். இல்லையெனில் இணையத்தின் வாயிலாகவும், யூ-டியூப் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் மூலமும் நமக்கு தேவையான பாடல்களை கேட்கவும், பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடிகிறது. டூவீலர் ஓட்டும் போதும், பேருந்து பயணத்தின் போதும் ஹெட்-போன்களை காதில் சொருகியபடி பாடல்களை கேட்டுக் கொண்டே பயணிக்கிறோம்.

சற்று முன் நோக்கிச் சென்றால் சிடியில் நமக்கு பிடித்த பாடல்களை பதிந்து வீட்டில் அதிகப்படியான சத்தத்தில் வைத்து கேட்போம். அதற்கு முன்பு டேப்-ரெக்கார்டரில் பாடல்களை பதிந்து கேட்டுக் கொண்டிருந்தோம். எனக்கு தெரிந்து சில குடும்பங்களில் எந்தெந்த பாடல்களை கேசட்களில் பதிவு செய்வதற்கு பல சண்டைகள் நடக்கும்.
அண்ணன் ரஜினி ரசிகனாக இருப்பான். தம்பி கமல் ரசிகனாக இருப்பான். அப்பாவோ சிவாஜி காலத்து பாடல்கள் வேண்டும் என அடம்பிடிப்பார். ஒரு கேசட்டில் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களின் ஆசையும் நிறைவேறும். 'எஜமான்' படத்திலிருந்து ஒரு பாடல் பதிவு செய்ய முடிவு செய்தால், அண்ணன் 'ராக்கு முத்து ராக்கு'க்கு டிக் அடிக்க, தம்பி 'எஜமான் காலடி மண்ணெடுக்க' அடம்பிடிப்பான்.

ஒவ்வோரு படத்திலும் தங்களுக்கு பிடித்த பாடல்களை தேர்வு செய்து கொடுக்க, அதில் அப்பா கடைசியாக முன் பக்கம் ஆறு பாடல்கள், பின் பக்கம் ஆறு பாடல்கள் என இறுதி செய்து பாடல்களை பதிவு செய்ய கேசட் கடையில் கொண்டு கொடுப்பார்.
கடைக்காரர் வெயிட்டிங்கில் வைத்து, ஒரு வாரம் கழித்து வர சொல்வார். சொன்ன தேதியில் அப்பா சென்று கேசட்டை வாங்கி வந்து வீட்டில் போடும் போது, நமக்கு பிடித்த பாடல் எப்போது வருமென ஆர்வமாக கேட்பதுண்டு. இன்றும் அந்த பாடல்களை எங்காவது கேட்கும் போது கேசட்டில் இருந்தபடி அந்த பாடலுக்கு அடுத்து வரும் பாடலின் தொடக்கம் வாயில் முணுமுணுக்க வைக்கிறது.

இளைஞர்கள் இருக்கும் வீடுகள் என்றால் இன்னும் பல கலாட்டாக்கள் அரங்கேறும். ஸ்பீக்கர்களை வாங்கி அதை மண் பானையில் வைத்தால் சத்தம் அதிகமாக கேட்கும் என்பதால் மண் பானைக்குள் வைத்து பாடல்களை அலறவிடுவார்கள். அந்த பக்கம் "ஏண்டா ஸ்பீக்கரை போட்டு இப்படி காதை காலி பண்றீங்க" என்ற அம்மாவின் ஏச்சுக்களை காதில் போட்டுக் கொள்ளாமல் ' ராசாத்தி உன்னை எண்ணி ராப்பகலா கண் விழிச்சேன்' என்று எதிர்வீட்டுப் பெண்ணுக்கு 'பாடல் விடு தூது' அரங்கேறும் கதைகளும் உண்டு.

எதிர்வீட்டுப் பெண் மறுத்து, காதல் தோல்வியில் முடிந்தால் ''போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே'' என சோக கீதங்கள் வீட்டை ஆட்கொள்ளும்.

அந்த காலங்கள் கடந்து வேலை, பொறுப்பு என வெளி ஊருக்கு சென்ற பின் அதே அம்மா அந்த ஸ்பீக்கரை பார்த்து ஏக்கம் கொள்வதும் பல வீடுகளில் நடந்திருக்கும்.

'முதல்வன்' படத்தில் அர்ஜூன் சொல்வது போல் வாழ்க்கையில் 'ரீவைண்ட்' பட்டன் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.. இல்லையா?

--- பானுமதி அருணாசலம்

Thursday, November 8, 2012

நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன் - வைரமுத்து (படம்: கடல்)



நெஞ்சுக்குள்ள
ஒம்ம முடிஞ்சிருக்கேன்- இங்க
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?

வெள்ளைப் பார்வை வீசிவிட்டீர் முன்னாடி
இதத் தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி
வண்ண மணியாரம் வலதுகைக் கெடியாரம்
ஆனை புலியெல்லாம் அடுக்கும் அதிகாரம்

நீர் போன பின்னும்
நிழல் மட்டும் போகலயே போகலயே
நெஞ்சுக்குள்ள நிழல் வந்து விழுந்துருச்சே
அப்ப நிமிந்தவ தான்
அப்பறமாக் குனியலையே! குனியலையே!
கொடக்கம்பி போல மனம் குத்தி நிக்குதே

நெஞ்சுக்குள்ள
ஒம்ம முடிஞ்சிருக்கேன்-இங்க
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?


பச்சி ஒறங்கிருச்சு
பால்தயிராத் தூங்கிருச்சு
இச்சி மரத்து மேல
எல கூடத் தூங்கிருச்சு

காச நோய்க் காரிகளும்
கண்ணுறங்கும் வேளையில
ஆசநோய் வந்தமக
அரை நிமிசம் தூங்கலையே!

நெஞ்சுக்குள்ள ஒம்ம
முடிஞ்சிருக்கேன்!- இங்க
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ ?


ஒரு வாய் எறங்கலையே
உள்நாக்கு நனையலையே
ஏழெட்டு நாளா
எச்சில் முழுங்கலையே!

ஏழை இளஞ்சிறுக்கி
ஏதும் சொல்ல முடியலையே
ரப்பர் வளவிக்கெல்லாம்
சத்தமிட வாயில்லையே!

நெஞ்சுக்குள்ள ஒம்ம
முடிஞ்சிருக்கேன்!- இங்க
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ ?

-- கவிப்பேரரசு வைரமுத்து (படம்: கடல்)   

Wednesday, September 12, 2012

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி - கவியரசு கண்ணதாசன்



எங்கே நிம்மதி.... எங்கே நிம்மதி.....
எங்கே நிம்மதி.... எங்கே நிம்மதி.....
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எங்கே நிம்மதி.... எங்கே நிம்மதி.....
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்


எங்கே மனிதர் யாரும் இல்லையோ
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

எங்கே நிம்மதி.... எங்கே நிம்மதி.....
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது
எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது

என்ன நினைத்து என்னைப் படைத்தான் இறைவன் என்பவனே
கண்ணைப் படைத்து பெண்ணை படைத்த இறைவன் கொடியவனே
ஓ...... இறைவன் கொடியவனே

எங்கே நிம்மதி.... எங்கே நிம்மதி.....
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்


பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே
புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே
பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே
புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே

என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே
இன்று மட்டும் அமைதி தந்தால் உறங்குவேன் தாயே
ஓ... உறங்குவேன் தாயே...

எங்கே நிம்மதி.... எங்கே நிம்மதி.....
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

-- கவியரசு கண்ணதாசன்

Sunday, January 15, 2012

அஸ்க் லஸ்கா - நண்பன்



ஏதோ தன்னாலே உன் மேலே ….காதல் கொண்டேனே
ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே ….

அஸ்கா அஸ்கா அஸ்கா அஸ்கா
அஸ்கா அஸ்கா அஸ்கா அஸ்கா

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ – ஐ
அஸ்த் அஸ்த் லைபே
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே – லவ்
இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே

ஹுச்க் ஹுச்க் ….அஸ்கா அஸ்கா

அத்தனை மொழியிலும் வார்த்தை ஒவ்வொன்று கொய்தேன் ..
மொத்தமாய் கோர்த்து தான் காதல் செண்டு ஒன்று செய்தேன்…

உன்னிடம் நீட்டினேன் காதலை காட்டினேன் ….

ஏதோ தன்னாலே உன் மேலே ….காதல் கொண்டேனே
ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே ….

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ – ஐ
அஸ்த் அஸ்த் லைபே
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே – லவ்
இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே

ப்ளுட்டோவில் உனை நான் கூடேற்றுவேன்
விண்மீன்கள் பொறுக்கி சூடேற்றுவேன்
முக்கோணங்கள் படித்தேன்
உன் மூக்கின் மேலே
விட்டம் மட்டம் படித்தேன்
உன் நெஞ்சின் மேலே
மெல்லிடையோடு வளைகோடு நான் ஆய்கிறேன் ஒ.. ஓ…

ப்ளாட்டோவின் மகனாய் உன் வேடமா
ஆராய்ச்சி நடத்த நான் கூடமா
காதல் நோயில் விழுந்தாய்
உன் கண்ணில் கண்டேன்
நாளும் உண்ணும் மருந்தாய்
என் முத்தம் தந்தேன்
உன் நெஞ்சில் நாடிமானி வைக்க
காதல் காதல் என்றே கேட்க

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ – ஐ
அஸ்த் அஸ்த் லைபே
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே

லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே

தே ஜா வூ கனவில் தீ மூட்டினாய்
ராஜா என் மனதை ஏன் வாட்டினாய்
கப்பம் கேட்டு மிரட்டி நீ வெப்பம் கொண்டாய்
ரத்தம் மொத்தம் கொதிக்க என் பக்கம் வந்தாய்
வெண்ணிலவாக இதமாக குளிரூட்டவா

கண்ணாடி நிலவாய் கண் கூசினாய்
வெண் வண்ண நிழலை மண் வீசினாய்
புல்லில் பூத்த பனி நீ ஒரு கள்ளம் இல்லை
வைரஸ் இல்லா கணிணி உன் உள்ளம் வெள்ளை
நீ கொல்லை மல்லி முல்லை போலே
பிள்ளை மெல்லும் சொல்லைப் போலே

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ – ஐ
அஸ்த் அஸ்த் லைபே

அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே

லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே

ஓ…அத்தனை மொழியிலும் வார்த்தை ஒவ்வொன்று கொய்தேன்

மொத்தமாய் கோர்த்துதான் காதல் செண்டொன்று செய்தேன்
உன்னிடம் நீட்டினேன் காதலை காட்டினேன்

ஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே
ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே

-- கார்க்கி

Wednesday, December 28, 2011

போ நீ போ - தனுஷ்


போ நீ போ
போ நீ போ
தனியாக  தவிக்கின்றேன்
துணை வேண்டாம்  அன்பே  போ
பிணமாக  நடக்கின்றேன்
உயிர்  வேண்டாம்  தூரம்  போ
நீ  தொட்ட  இடமெல்லாம் எரிகிறது அன்பே போ
நான் போகும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ

இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் பெண்ணே போ
உயிரோடு  விளையாட  விதி  செய்தாய் அன்பே போ

உன்னாலே  உயிர் வாழ்கிறேன்
உனக்காக  பெண்ணே
உயிர் காதல் நீ காட்டினால்
வாழ்வேனே  பெண்ணே
இதுவரை  உன்னுடன்  வாழ்ந்த  என்  நாட்கள்
மறுமுறை  வாழ்ந்திட  வழி  இல்லையா
இருள்  உள்ளே  தேடிய  தேடல்கள்  எல்லாம்
விடியலை  காணவும்  விதி இல்லையா

போ நீ போ
போ நீ போ

என் காதல் புரியலையா
உன்  இஷ்டம்  அன்பே போ
என் கனவு  கலைந்தாலும்
நீ இருந்தாய்  அன்பே போ
நீ  தொட்ட  இடமெல்லாம்  எரிகிறது  அன்பே போ
நான்  போகும்  நிமிடங்கள்  உனக்காகும்  அன்பே போ

இது  வேண்டாம் அன்பே போ
நிஜம்  தேடும்  அன்பே போ
உயிரோடு  விளையாட  விதி  செய்தாய் அன்பே போ

தனியாக  தவிக்கின்றேன்
துணை வேண்டாம்  அன்பே  போ
பிணமாக  நடக்கின்றேன்
உயிர்  வேண்டாம்  தூரம்  போ

-- தனுஷ்

Friday, November 18, 2011

Why this கொலைவெறி டி ? - தனுஷ்


Yo boys i am singing song
soup song
flop song
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
rhythm correct
why this kolaveri kolaveri kolaveri di
maintain this
why this kolaveri........... aaa di

distance la moon-u moon-u
moon-u  color-u  white-u
white background night-u night-u
night-u color-u black-u

why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di

white skin-u girl-u girl-u
girl-u heart-u black-u
eyes-u eyes-u meet-u meet-u
my future dark

why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di

maama notes eduthuko
apdiye kaila snacks eduthuko
pa pa paan pa pa paan pa pa paa pa pa paan
sariya vaasi
super maama ready
ready 1 2 3 4

whaa wat a change over maama
ok maama now tune change-u

kaila glass only english..
hand la glass glass la scotch
eyes-u full-aa tear-u
empty life-u girl-u come-u
life reverse gear-u
lovvu lovvu  oh my lovvu
you showed me bow-u
cow-u cow-u holi cow-u
i want u hear now-u
god i m dying now-u
she is happy how-u

this song for soup boys-u
we dont have choice-u

why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di

-- Dhanush

Wednesday, November 9, 2011

காதல் என் காதல் அது கண்ணீருல - மயக்கம் என்ன



காதல் என் காதல் அது கண்ணீருல..
போச்சு அது போச்சு அட தண்ணீருல..

ஏ மச்சி.. உட்ரா…
ஏய்.. என்ன பாட உடுடா..
நா பாடியே தீருவேன்..
சரி பாடி தொல..

காதல் என் காதல் அது கண்ணீருல..
போச்சு அது போச்சு அட தண்ணீருல..
காயம் புது காயம் என் உள்ளுக்குள்ள
பாலான நெஞ்சு இப்ப வெந்நீருல..

அடிடா அவள.. ஒதடா அவள..
விட்ரா அவள.. தேவையே இல்ல….
எதுவும் புரில.. உலகம் தெரில..
சரியா வரல.. ஒன்னுமே இல்ல..

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல..

ஆயிரம் சொன்னியே காதுல வாங்கல..
சூப்புல தேங்குறேன் நெஞ்சுதான் தாங்கல
சின்ன சின்னதா டிரீம் எல்லாம் கண்டேன்..
ஆசிட் ஊத்திட்டா கண்ணுக்குள்ள..

நண்பன் அழுவுற கஷ்டமா இருக்கு
கொஞ்சம் கூட அவ ஒர்த்தே இல்ல..

தேன் ஊருன நெஞ்சுக்குள்ள கள் ஊறுதே என்ன சொல்ல
ஒ படகிருக்கு வலையிருக்கு கடலுக்குள்ள மீனா இல்ல

வேணாம் டா வேணாம் இந்த காதல் மோகம்
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்..
பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்..
பட்டாச்சு சாமி எனக்கிதுவே போதும்..

மான் விழி தேன் மொழி, என் கிளி நான் பலி
காதலி காதலி என் ஃபிகர் கண்ணகி..

ஃப்ரெண்ட்ஸு கூடத்தான் இருக்கனும் மாமா..
பிகரு வந்துடா ரொம்ப தொல்ல..
உன்ன சுட்டவ உருப்பட மாட்ட..
உன்ன தவிர என்னகொன்னும் இல்ல..

ஒ.. கனவிருக்கு… கலரே இல்ல,…
படம் பாக்கறேன்.. கதையே இல்ல….
உடம்பிருக்கு உயிரே இல்ல..
உறவிருக்கு, பெயரே இல்ல..

வேணாம் டா வேணாம் இந்த காதல் மோகம்
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்..
பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்..
பட்டாச்சு சாமி போதும் மச்சான்..

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல..
குட் நைட்.. குட் நைட்.. அஹ.. ஓகே..
குட் நைட்.. தங்க யு சோ மச் மச்சி..


-- தனுஷ்

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை - வாரணம் ஆயிரம்



நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் காலலை
பொன்வண்ணம் சூடிடும் காரிகை
பெண்ணே உன் காஞ்சலை

ஓம் ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி

ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தன்ம் ஏதும் இல்லா
புன்னகையோ போகும்மில்லா

நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ
நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ
என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்

இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
போகாதே..

தூக்கங்களை தூக்கிச் சென்றாள்
தூக்கி சென்றாள்..
ஏக்கங்களை தூவிச் சென்றாள்
உன்னை தாண்டி போகும் போது
போகும் போது..
வீசும் காற்றின் வீச்சிலே
நில்லென்று நீ சொன்னால் என் காதல் நகராதே
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே
காதல் எனை கேட்கவில்லை
கேட்காதது காதில் இல்லா

என் ஜீவன் ஜீவன் நீதானே
என தோன்றும் நேரம் இதுதானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே

-- தாமரை

மன்னிப்பாயா!.. மன்னிப்பாயா!....

கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் கடலிடமே

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா

கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஓஹோ உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்

ஓடும் நீரில் ஓர் அலைதான் நான்
உள்ளே உள்ள ஈரம் நீதான்
வரம் கிடைத்தும் தவர விட்டேன்
மன்னிப்பாயா அன்பே

காற்றிலே ஆடும் காகிதம் நான்
நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்
என் கலங்கரை விளக்கமே

அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்
அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்
ஆர்வளர்க்கும் கண்ணீர் பூசல்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் எல்லாம் உரியர் பிறர்க்கு
புலம்பல் என சென்றேன்
புலினேன் நெஞ்சம் கலத்தல் உருவது கண்டேன்

ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ
பூவாயா காணல் நீர் போலே தோன்றி
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்


-- தாமரை

Thursday, June 16, 2011

அழுக்கு பெண்ணை வர்ணிக்கும் வைரமுத்து!


கம்பி மாத்தாப்பு கண்ணு கண்ணு
வண்ண மாத்தாப்பு பொண்ணு பொண்ணு
தூரத்தில் பார்த்தா காதல் வராது
பக்கத்துலே பார்த்தா காமம் வராது
மானும் இல்ல மயிலும் இல்ல தூணும் இல்ல குயிலும் இல்ல
இருந்தும் மனசு விழுந்து போச்சுதோ

அவ மூக்கு மேலே வியர்வை ஆகணும்
இல்ல நாக்கு மேலே வார்த்தை ஆகணும்
அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும்
இல்ல போத்தி படுக்கும் போர்வை ஆகணும்

அழுக்கு துணியை உடுத்தி அவ தடுக்கி நடக்கும் போதும்
சுளுக்கு பிடிச்ச மனது அட சொக்குது சொக்குதுடா
சுத்தமான தெருவில் அவ துப்பி செல்லும் போதும்
எச்சில் விழுந்த இடத்தில் மனது நிக்குது நிக்குதுடா

அவ தூங்கி எழுந்தா பிள்ளை அழகு
அவ சோம்பல் முறிச்சா கொள்ளை அழகு
அவ சொல்லுக்கு அடங்கா முடியும்
சூடிக்க சங்கிய மலரும்
என்னை இழுக்கும் கண்ணை மயக்கும்
தெத்துப்பல்லு கண்டு பித்து பிடிக்கும்

விளக்குமாறு பிடிச்சு அவ வீதி பெருக்கும் போது
வளவு நெளிவு பாத்து மனம் வழுக்க பாக்குதுடா
குளிச்சு முடிச்சு வெளியில் அவ கூந்தல் துவட்டும் போது
தெளிச்சு விழுந்த துளியில் மனம் தெறிச்சு போகுதுடா

அவ வளவி ஒலிக்கும் வாசல் அழகு
அவ கொலுசு ஒலிக்கும் வீதி அழகு
ஒரு விக்கல் எடுக்குற போதும் தும்மி முடிக்குற போதும்
அவஸ்தையிலும் அவள் அழகு
குற்றம் குறையிலும் மத்த அழகு

                                                       - கவிப்பேரரசு வைரமுத்து, விகடனிலிருந்து!!

Friday, April 15, 2011

பாடல் : குவியமில்லா ஒரு காட்சிப் பேழை (கோ)

படம் : கோ
பாடல் : குவியமில்லா ஒரு காட்சிப் பேழை
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்கம் : கே வி ஆனந்த்
______________________________
என்னமோ ஏதோ
எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிறழுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்
என்னமோ ஏதோ
முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில்
மொட்டு அவிழுது கொடியில்
ஏனோ
குவியமில்லா...
குவியமில்லா ஒரு காட்சிப் பேழை!
ஏனோ
உருவமில்லா...
உருவமில்லா நாளை!
ஏனோ
குவியமில்லா...
குவியமில்லா ஒரு காட்சிப் பேழை!
ஏனோ அரைமனதாய்
விடியுது என் காலை!
என்னமோ ஏதோ
மின்னிமறையுது விழியில்
அண்டிஅகலுது வழியில்
சிந்திச் சிதறுது வெளியில்
என்னமோ ஏதோ...
சிக்கித் தவிக்குது மனதில்
ரெக்கை விரிக்குது கனவில்
விட்டுப் பறக்குது தொலைவில்
ஏனோ குவியமில்லா
குவியமில்லா - ஒரு காட்சிப் பேழை!
ஏனோ உருவமில்லா
உருவமில்லா நாளை!
நீயும் நானும் எந்திரமா?
யாரோ செய்யும் மந்திரமா?
பூவே!
______________________
முத்தமிட்ட மூச்சுக் காற்று
பட்டுப் பட்டுக் கெட்டுப்போனேன்
பக்கம் வந்து நிற்கும் போது
திட்டமிட்டு எட்டிப் போனேன்
நெருங்காதே பெண்ணே எந்தன்
நெஞ்செல்லாம் நஞ்சாகும்
அழைக்காதே பெண்ணே எந்தன்
அச்சங்கள் அச்சாகும்
சிரிப்பால் எனை நீ
சிதைத்தாய் போதும்
______________
சுத்திச் சுத்தி உன்னைத் தேடி
விழிகள் அலையும் அவசரம் ஏனோ?
சத்த சத்த நெரிசலில் உன் சொல்
செவிகள் அறியும் அதிசயம் ஏனோ?
கனாக்காணத் தானே பெண்ணே
கண்கொண்டு வந்தேனோ?
வினாக்கான விடையும் காணக்
கண்ணீரும் கொண்டேனோ?
நிழலை திருடும்
மழலை நானோ?

-- மதன் கார்க்கி  


You may also like