Showing posts with label ஹைக்கூ. Show all posts
Showing posts with label ஹைக்கூ. Show all posts

Thursday, April 14, 2011

தபு ஷங்கர் கவிதைகள்

அழகான பொருட்களெல்லாம்
உன்னை நினைவு படுத்துகின்றன.
உன்னை நினைவுபடுத்துகிறவை எல்லாமே
அழகாகத்தான் இருக்கின்றன.

"நான் எது கேட்டாலும் வெட்கத்தையே
தருகிறாயே...வெட்கத்தைக் கேட்டால்
என்ன தருவாய்?."

---
என்னை
உடைப்பதற்காகவே
என் எதிரில்
சோம்பல் முறிப்பவள் நீ
---

'ஒரு நிமிடத்தில்
உன்னைக் கடந்துபோகிற பெண்ணைப் பார்க்க
தினமும் ஒரு மணி நேரம் காத்திருக்கிறாயே' என்று
கேட்ட என் நண்பனிடம் சொன்னேன்...

'நீ கூடத்தான்
ஒரே ஒரு நாள் சம்பளம் வாங்குவதற்காக
ஒரு மாதம் முழுவதும் வேலை செய்கிறாய்!'
 ---
 
 

Thursday, January 20, 2011

ஞாபகம்

விட்டு விட நினைத்தாலும்
விரல் பிடித்து கூட வருகின்றது
உன் ஞாபகம்!

--எங்கேயோ படித்தது :)

Wednesday, December 8, 2010

கண்ணீர் - ஹைக்கூ

கண்ணீரைப் படைத்தது
கடவுளின் தவறா
ஆனந்தப்பட்டு
அதை வடிக்காமல்
அழுது வடிக்கும்
மனிதனின் தவறா?
-- நீலமணி

Tuesday, December 7, 2010

ஹைக்கூ

சந்தை
இரைச்சலிலும்
தனியாய்க் கேட்கிறது
(அவளது)
வளையோசை.
-- வடுவூர் சிவமுரளி 

You may also like