ஒருவன் பாறைகளிலிருந்து கல்லுடைக்கும் வேலையைச் செய்து வந்தான். கடுமையான வேலை, குறைவான கூலி. அதனால் அவன் வேலையின் மீது அதிருப்தி கொண்டான். அவன் ஒரு நாள் தெய்வமே நான் உன்னை தினமும் வணங்குகிறேன், நீ என்னை பணக்காரனாக்கக் கூடாதா? என்னை பட்டு மெத்தையில் படுக்க வைக்கக் கூடாதா? என்று பிரார்த்தித்தான்.
தெய்வம் அவன் முன் தோன்றி "நீ விரும்பிய வண்ணமே ஆவாய்" என்று வரம் கொடுத்தது. அவன் பணக்காரனாகி விட்டான்.
பட்டு மெத்தையில் படுத்திருந்தான். ஒரு நாள் அந்த நாட்டு அரசன் அவன் மாளிகை வழியாக அழகிய தேரில் முன்னும் பின்னும் குதிரை வீரர்களுடன் சென்றான். அதைப் பார்த்ததும் அவனுக்கு அரசனைப் போல் இருக்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. தெய்வமே என்னை அரசனாக்கக் கூடாதா? என்று வேண்டினான். தெய்வமும் "அப்படியே ஆவாய்" என்றது. அவன் அரசனாகி விட்டான்.
முன்னும் பின்னும் குதிரை வீரர்களுடன் தேரில் ஊர்வலம் போனான். அப்போது கடுமையான வெயிலடித்தது. அவன் வெயிலின் கொடுமையால் வெந்து புழுங்கினான். அவன் "தெய்வமே அரசனை விட சூரியனே அதிக சக்தி படைத்ததாகத் தெரிகிறது. எனவே நீ என்னை சூரியனாக்கி விடு" என்றான். தெய்வமும் "அப்படியே ஆகட்டும்" என்றது. அவன் சூரியனாகி எல்லோரையும் சுட்டான்.
அப்போது ஒரு மேகம் அவனுக்கும் பூமிக்கும் இடையில் வந்தது. அதனால் பூமியில் உள்ளவர்களைச் அவனால் சுட முடியவில்லை. "தெய்வமே மேகம் சூரியனின் கதிர்களையே தடுக்கக் கூடிய சக்தியுடையதாக இருக்கிறது. ஆகையால் என்னை மேகமாக்கி விடு" என்று வேண்டினான். தெய்வமும் "அப்படியே ஆகட்டும்" என்றது. அவன் மேகமாகி சூரியக் கதிர்களைத் தடுத்தான்.
பூமி மீது பெரு மழை பொழிந்தான். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது, வீடுகள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டன, வயல்களெல்லாம் அழிந்து விட்டன. ஆனால் ஒரு பாறை மட்டும் அசையாமல் நின்று கொண்டிருந்தது. அவன் வெள்ளத்தை உண்டாக்கி எவ்வளவோ முயன்று பார்த்தான் அந்தப் பாறையை அசைக்கவே முடியவில்லை. "தெய்வமே மேகத்தை விடப் பாறையே சக்தி வாய்ந்தது எனவே என்னை பாறையாக்கி விடு" என்றான். தெய்வமும் "அப்படியே ஆகட்டும்" என்றது. அவன் பாறையாகி விட்டான்.
கர்வத்தோடு அமர்ந்திருந்தான். அப்போது அங்கே ஒருவன் உளியும் சுத்தியலும் கொண்டு வந்து அந்தப் பாறையை உடைக்க தொடங்கினான். அவன் உளி பாறையைத் தகர்க்கத் தொடங்க்கியது. "தெய்வமே பாறையை விடக் கல்லுடைப்பவன் சக்தி மிகுந்தவன். என்னை கல்லுடைப்பவனாகவே ஆக்கி விடு.” என்றான். தெய்வமும் "அப்படியே ஆகட்டும்" என்றது. அவன் மீண்டும் கல்லுடைப்பவனாக ஆகி விட்டான்.
கல்லுடைப்பவன் கல்லுடைப்பவனாகவே இருக்க வேண்டும். ஆசைப்படக் கூடாது என்பதல்ல இந்தக் கதையின் நீதி. ஆசைக்கு எல்லை இல்லை. ஆசைப்படுபவன் நிம்மதியாக இருக்க முடியாது என்பது தான் இக் கதையின் நீதி.
நான் படித்த கவிதைகள் கதைகள் கட்டுரைகள் பிடித்த ஒரு தொகுப்பு..!!
Friday, December 3, 2010
Thursday, December 2, 2010
What is Appraisal?
Appraisal
Wednesday, December 1, 2010
அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை!
அறிஞர் அண்ணா தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் மிகுந்த புலமையுடையவர் என்று வெளிநாட்டுப் பத்திரிக்கைகள் எழுதின.
அமெரிக்காவிலிருந்து வெளியாகும் “தி சாட்டர்டே ஈவினிங் போஸ்ட்” என்ற பத்திரிக்கைக்கான நிருபர் அண்ணாவைப் பற்றி இவ்வாறு கேள்விப்பட்டதும்என்ன தான் ஆங்கிலம் அறிந்திருந்தாலும் மேல்நாட்டினர் அளவுக்குப் பேச முடியாது என்று இறுமாப்புடன் எண்ணிக் கொண்டிருந்தாராம்.
அப்போது அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள் அடங்கிய மத்திய அரசின்கூட்டம் ஒன்று டெல்லியில் நடந்தது.
அப்போது டெல்லி விமான நிலையத்திலேயேஅண்ணாவை மடக்கிப் பேட்டி காண்பது மட்டுமல்லாமல் அவரது ஆங்கிலப்புலமையையும் சோதித்துப் பார்த்து விடலாம் என்று எண்ணியஅந்த நிருபர் அவ்வாறே அண்ணாவைப் பேட்டியும் கண்டாராம்.
அப்போது அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள் அடங்கிய மத்திய அரசின்கூட்டம் ஒன்று டெல்லியில் நடந்தது.
அப்போது டெல்லி விமான நிலையத்திலேயேஅண்ணாவை மடக்கிப் பேட்டி காண்பது மட்டுமல்லாமல் அவரது ஆங்கிலப்புலமையையும் சோதித்துப் பார்த்து விடலாம் என்று எண்ணியஅந்த நிருபர் அவ்வாறே அண்ணாவைப் பேட்டியும் கண்டாராம்.
விமானத்திலிருந்து இறங்கி வெளியே வந்து கொண்டிருந்த அண்ணாவைப் பார்த்துத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாராம்.
சரி. கேள்விகளைக் கேளுங்கள் என்று அண்ணா சொன்னவுடன் அந்த நிருபர்கேட்டாராம். “டூ யு நோ யுனொ ?
சுவற்றில் அடித்த பந்தாகப் பட்டென்று பதில் வந்ததாம்.
ஐ நோ யுனொ.
யு நோ யுனொ.
ஐ நோ யு நோ யுனொ
பட் ஐ நோ யுனொ பெட்டெர் தேன் யு நோ யுனொ!
கேள்வி கேட்ட நிருபருக்கு மயக்கம் வராத குறை தான்.
சரி. கேள்விகளைக் கேளுங்கள் என்று அண்ணா சொன்னவுடன் அந்த நிருபர்கேட்டாராம். “டூ யு நோ யுனொ ?
சுவற்றில் அடித்த பந்தாகப் பட்டென்று பதில் வந்ததாம்.
ஐ நோ யுனொ.
யு நோ யுனொ.
ஐ நோ யு நோ யுனொ
பட் ஐ நோ யுனொ பெட்டெர் தேன் யு நோ யுனொ!
கேள்வி கேட்ட நிருபருக்கு மயக்கம் வராத குறை தான்.
தட்டுத்தடுமாறிக் கேட்டாராம்.எக்ஸ்கியூஸ் மீ. சற்று விளக்கமாகக் கூறுங்கள் என்றாராம்.
அண்ணா என்ன விளக்கம் சொன்னார் தெரியுமா?
I know UNO(United Nations Organisation).
You know UNO..
I know you know UNO.
But I know UNO better than you know UNO.
அறிஞர் அண்ணாவை ஒருதரம் “தமிழில் அடுக்கு மொழியில் விளையாடுகிறீர்களே, ஆங்கிலத்திலும் முடியுமா?” என்று கேட்டார்களாம்.
கொஞ்சமும் அயராமல் அவர், “ஏன் முடியாது.. எப்படிப்பட்ட வாக்கியம் வேண்டும்?” என்றாராம்.
“Because என்கிற வார்த்தை தொடர்ந்து மூன்று முறை வருமாறு ஒரு வாக்கியம் சொல்ல முடியுமா?”
என்று கேட்டதும் அண்ணா அவர்கள் சுரீரென்று அடித்த பன்ச் :
‘No sentence ends with because, because, because is a conjunction’
Tuesday, November 30, 2010
All Habits Are Impossible To Break If You Do This
“There is nothing wrong with change, if it is in the right direction.” ~ Winston Churchill
When was the last time you changed things in your world?
Taking the time to evaluate where you are in the hustle and bustle of life can help you gain the perspective you need to make the small adjustments that will improve your quality of life and enhance your confidence.
When you make a plan and set a goal for 30 days, you will be manufacturing a means to find a much more capable, confident you by the end of the month.
1. Choose a hobby. There is no shortage of hobbies to choose from. Rock climbing, jogging, pottery, cooking, photography. Any activity that engages your mind and holds your attention is well worth your minutes. Hobbies are an investment of time and usually require a certain skill. Take an inventory of your interests, then research your choice and socialize with people that have the same interests. With passion and a desire to enjoy something new, you’ll be well on your way to a happy mind.
2. Learn a new language. Learning to speak, read and write in a new language is a humbling, empowering experience. All you need is a willingness to work hard and practice your skills individually and with others. Choosing a country where your new language is represented is a great incentive to consider so that you can immerse yourself into the language, culture and people.
3. Read every day. Make a pact with yourself to read something that isn’t work related each day or night for 30 days straight. Language is powerful, and books deliver many messages and scenarios that help you travel in your mind. The sky is the limit with a book in your lap.
4. Eat well. Choosing a healthy diet doesn’t mean you need to be unrealistically thin or depriving yourself. It is about simplifying, having more energy and feeling great. The way you choose your food says a lot about who you are and how you feel. Adopting the habits of a healthy eater will improve your health, sharpen your memory, stabilize your mood, and boost your energy levels. Make a monthly meal calendar with healthy choices and stick with it for 30 days. See how great you will feel at the end of the month!
5. Finding an exercise regime that works. Being active and staying in shape boosts your mood, sex drive, and makes your body happy. Exercise helps you maintain a strong body, mind and spirit. Find a form of exercise you can maintain for the rest of your life and make your move today.
6. Avoid negative people. This is not always easy in the work place, but as a general rule choose friends or people you socialize with carefully. If you find yourself trapped by people with negative energy, remove yourself from the situation and lose the guilt. Shift your mindset by surrounding yourself with positive minded people.
7. Meditate for 10 minutes every day. Research shows meditation sharpens mental focus, empowers you over emotions, and enhances your life with a positive sense of well being. Meditation is a means to rid the negative forces in your mind and give you clarity. Light a candle and carve out 10 minutes a day for this simple practice. It will change your state of mind for a lifetime.
8. Early to bed. Getting a good night’s sleep is the only way your body and brain can recharge their batteries. Denying yourself the 8-10 hours an adult needs, affects your ability to learn and remember, not to mention it dims the longevity of your life.
9. Early to rise. Your productivity will be higher and you will have a greater sense of well being when you wake up early. Sure, it may be hard for the first 10 minutes, but there is a direct correlation between successful people and rising early in the morning.
10. Create an inspirational space. The way your room looks will dictate how you will feel about yourself and life. Take pride in your space by creating a room that is inviting and reflective of who you are. Taking charge of your personal space and surrounding your soul with positive colors will ground your thoughts and keep your energy flowing in a positive direction.
There is always room for self-improvement. Finding the courage to create a difference in your life will give you self-confidence and help you shift your mental makeup for a much more vibrant you!
- Written by Cindy Platt
இனிமேல் எனக்குப் பரிசு தராதே!
'உனக்கென்று தனியாக தலையணை வைத்துக் கொள். என் தலையணையை எடுக்காதே!" என்று நான் சொன்னதுதான் தாமதம்... உன் கண்ணில் நீர் முட்டிக் கொண்டுவிட்டது. 'ஏன் இப்படிப் பிரித்துப் பேசுகிறீர்கள்?' என்றாய். 'பிரித்தெல்லாம் பேசவில்லை. உனக்கென்று நீ தனியாகத் தலையணை வைத்துக் கொண்டால், நீ ஊருக்குப் போயிருக்கும் நாட்களில், உன் தலையணையை நீ என்று நினைத்துக் கட்டிக்கொண்டு தூங்கலாம். அதற்குதான்!' என்றேன். நீ தாவி வந்து என்னைக் கட்டிக்கொண்டு, 'ஒரு நிமிஷம்... நான் துடிதுடித்துப் போயிட்டேன், தெரியுமா!' என்றாய்.
காதல் அப்படிதான்... துடித்துக் கொண்டிருக்கிற இதையத்தைத் துடித்துக்க வைத்துவிடும்!
'நமக்கு கல்யாணம் நடக்கிற நாளில், அம்மி மிதித்து அருந்ததி பார்க்கச் செல்லும்போது, நான் உன்னைத்தான் பார்ப்பேன்' என்றேன். 'ஏன்.. என் முகத்திலா அருந்ததி இருக்கிறது?' என்றாய். 'இல்லை... அருந்ததியே உன் முகமாக இருக்கிறது!" என்றேன். நீ சிரித்துவிட்டு, 'அப்ப நான் மட்டும் வானத்தைப் பார்க்கணுமா?" என்றாய்.
'வேண்டாம்... வேண்டாம்... சீர் வரிசையில் கண்ணாடி இருக்கும் இல்லையா, அதை எடுத்துக் காட்டுகிறேன். அதில் உன் முகத்தையே நீயும் பார்த்துக்கொள்' என்றேன்.
'ம்ம்ம்... கூடியிருப்பவர்கள் சிரிக்க மாட்டார்களா?' என்றாய். 'சிரிக்கட்டுமே... அதைவிடச் சிறந்த வாழ்த்தொலி எது!' என்றேன். 'சடங்கில் இப்படியெல்லமா விளையாடுவது?' என்றாய்.
'சடங்கே ஒரு விளையாட்டுத்தானே!" என்றேன்.
'என் பிறந்த நாளுக்காக நீ வாங்கித் தந்த பரிசுப் பொருளைப் பிரித்துப் பார்க்கக்கூட விருப்பமில்லை எனக்கு. அதை நீயே திரும்ப எடுத்துக்கொண்டு போய்விடு. இனிமேல் எப்போதும் எனக்கெந்த பரிசும் நீ தராதே!' என்றேன்.
கலங்கிப் போனாய். 'எவ்ளோ ஆசையா வாங்கிட்டு வந்தேன் தெரியுமா? இதைப் போய் வேணாங்கறீங்களே... ஏன், என்னைப் பிடிக்கலியா?' என்றாய் உடைந்த குரலில்.
'உன்னைப் பிடித்திருப்பதுதான் பிரச்சனையே! என் எல்லாப் பிரியத்தையும் நான் உன் மீதே வைத்திருப்பதால், நீ பரிசளித்தது என்பதற்காக எந்தப் பொருளின் மீதும் என்னால் பிரியம் வைக்க முடியாது.
உண்மையில், உன் மீது நான் வைத்திருக்கும் பிரியமே போதுமானதாக இல்லை எனக்கு. உன் மீது வைக்க இன்னும் கொஞ்சம் பிரியம் கிடைகதா என்று நான் ஏங்கிக்கொண்டிருக்கையில், நீ ஒரு பொருளை எனக்குப் பரிசளித்தால் அதை எப்படி வாங்கிக் கொள்ள முடியும், சொல்.
எனக்கு எதாவது பரிசு தந்தே ஆகவேண்டும் என்று உனக்குத் தோன்றினால், ஒரு முத்தம் கொடு!' என்றேன்.
'அது மட்டும் என்ன அப்படி உசத்தி?' என்றாய்.
'ஆமாம். உசத்தித்தான்! முத்தத்தைவிட சிறந்த பரிசை காதல் இன்னும் கண்டுப்பிடிக்கவில்லை!'.
- தபு ஷங்கர்
காதல் அப்படிதான்... துடித்துக் கொண்டிருக்கிற இதையத்தைத் துடித்துக்க வைத்துவிடும்!
'நமக்கு கல்யாணம் நடக்கிற நாளில், அம்மி மிதித்து அருந்ததி பார்க்கச் செல்லும்போது, நான் உன்னைத்தான் பார்ப்பேன்' என்றேன். 'ஏன்.. என் முகத்திலா அருந்ததி இருக்கிறது?' என்றாய். 'இல்லை... அருந்ததியே உன் முகமாக இருக்கிறது!" என்றேன். நீ சிரித்துவிட்டு, 'அப்ப நான் மட்டும் வானத்தைப் பார்க்கணுமா?" என்றாய்.
'வேண்டாம்... வேண்டாம்... சீர் வரிசையில் கண்ணாடி இருக்கும் இல்லையா, அதை எடுத்துக் காட்டுகிறேன். அதில் உன் முகத்தையே நீயும் பார்த்துக்கொள்' என்றேன்.
'ம்ம்ம்... கூடியிருப்பவர்கள் சிரிக்க மாட்டார்களா?' என்றாய். 'சிரிக்கட்டுமே... அதைவிடச் சிறந்த வாழ்த்தொலி எது!' என்றேன். 'சடங்கில் இப்படியெல்லமா விளையாடுவது?' என்றாய்.
'சடங்கே ஒரு விளையாட்டுத்தானே!" என்றேன்.
உன் பிறந்த நாளையும்
பிறந்த நேரத்தையும்
காட்டுகிற ஒரு கடிகாரம்
என் அறையிலிருக்கிறது.
'கடிகாரம் ஓடலியா' - என
யாராவது கேட்டால்
சிரிப்புத்தான் வரும்
அது காலக் கடிகாரம் அல்ல
என் காதல் கடிகாரம்!
'என் பிறந்த நாளுக்காக நீ வாங்கித் தந்த பரிசுப் பொருளைப் பிரித்துப் பார்க்கக்கூட விருப்பமில்லை எனக்கு. அதை நீயே திரும்ப எடுத்துக்கொண்டு போய்விடு. இனிமேல் எப்போதும் எனக்கெந்த பரிசும் நீ தராதே!' என்றேன்.
கலங்கிப் போனாய். 'எவ்ளோ ஆசையா வாங்கிட்டு வந்தேன் தெரியுமா? இதைப் போய் வேணாங்கறீங்களே... ஏன், என்னைப் பிடிக்கலியா?' என்றாய் உடைந்த குரலில்.
'உன்னைப் பிடித்திருப்பதுதான் பிரச்சனையே! என் எல்லாப் பிரியத்தையும் நான் உன் மீதே வைத்திருப்பதால், நீ பரிசளித்தது என்பதற்காக எந்தப் பொருளின் மீதும் என்னால் பிரியம் வைக்க முடியாது.
உண்மையில், உன் மீது நான் வைத்திருக்கும் பிரியமே போதுமானதாக இல்லை எனக்கு. உன் மீது வைக்க இன்னும் கொஞ்சம் பிரியம் கிடைகதா என்று நான் ஏங்கிக்கொண்டிருக்கையில், நீ ஒரு பொருளை எனக்குப் பரிசளித்தால் அதை எப்படி வாங்கிக் கொள்ள முடியும், சொல்.
எனக்கு எதாவது பரிசு தந்தே ஆகவேண்டும் என்று உனக்குத் தோன்றினால், ஒரு முத்தம் கொடு!' என்றேன்.
'அது மட்டும் என்ன அப்படி உசத்தி?' என்றாய்.
'ஆமாம். உசத்தித்தான்! முத்தத்தைவிட சிறந்த பரிசை காதல் இன்னும் கண்டுப்பிடிக்கவில்லை!'.
- தபு ஷங்கர்
Monday, November 29, 2010
ஆசையா... மோகமா.. அதையும் தாண்டி காதலடி!
துயில் கலைந்து எழுந்து குளிக்கக் கிளம்பும் உன்னைத் தடுப்பதே, ஒவ்வொரு காலையும் அழகான போராட்டமாகிப் போகிறது எனக்கு.
'குளித்து சுத்தமாகதான் அடுப்பைப் பற்றவைக்க வேண்டும்' என்று உன் அம்மா சொல்லி அனுப்பியதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு... எழுந்தவுடன் குளித்தே ஆகவேண்டும் என்று ஏன் அடம்பிடிக்கிறாய் நீ.
ஒவ்வொரு நாளும் நீ தூங்கி எழும்போதெல்லாம்... நீ தூக்கக் கலக்கத்திலிருந்து மீண்டு வருகிற அந்த அழகான தருணங்கள்... பிறந்த குழந்தை தவழ்ந்து, எழுந்து, நடக்கின்ற பருவங்களாய் இருக்கிறதடி எனக்கு. நீ உடனே குளிக்கப் போய்விட்டால்... அந்த அழகு எல்லாம் தண்ணீரில் கரைந்து போய் விடாதா?
தூங்கி எழுந்த உன் முகத்தைச் சுற்றி 'இது புதிய முகமோ?' என்கிற ஆச்சர்யத்தோடு பறக்கும் உன் முடிகளின் அழகைப் பாரேன்... நீ குளித்து விட்டால் அந்த முடிகளின் சிறகுகள் எல்லாம் ஈரமாகி, பறக்க முடியாமல் தவிக்காதா?
குளித்து முடித்து ஈரம் அப்பிய உடையுடன் நீ இந்த வீட்டில் வளைய வருவது கொள்ளை அழகுதான் என்றாலும் அது வேறு அழகடி. அதற்க்காக இந்த இரவு அலங்கரித்து அனுப்பிய உன் அழகை ஒரு அரை மணி நேரமாவது நான் ரசிக்கவில்லை என்றால்... சொர்க்கத்தில் இருக்கும் லைலாக்களும் மஜ்னுக்களும், அனார்க்கலிகளும் சலீம்களும் என்னைத் திட்டுவார்களடி! 'அய்யோ... இவனுக்குக் காதலிக்கத் தெரியவில்லையே!' என்று தங்கள் தலைகளில் அடித்துக்கொண்டு கூடி வருந்துவார்களடி!
"போதும்... போதும். கசங்கிய இந்தச் சேலையை மாற்றிக்கொள்ளவாவது விடுங்களேன்" என்று திருவாய் மலர்ந்தாய்.
"அய்யோ... இது கசங்கலா? உன் சேலைக்கு இரவு போட்டு விட்ட இஸ்த்ரியடி!" என்றேன்.
"ஆ... எனக்கு மயக்கம் வருது' என்று சிணுங்கினாய்.
உன்னை மயக்க தினமும் இப்படி அரை மணி நேரம் போராட வேண்டி இருக்கிறது எனக்கு. ஆனால் நீயோ தூங்கி எழுந்து முறிக்கும் ஒரு அழகுச் சோம்பலில் என்னை மயக்கி விடுகிறாயே வெறும் அரை நொடியில்.
"இந்த மயக்கம் எல்லாம் எத்தனை நாளைக்கு. ஆசை அறுபது நாள். மோகம் முப்பது நாள்தானே!" என்றாய்.
அடிப்பாவி.. இது ஆசையா.. மோகமா.. அதையும் தாண்டி காதலடி! அய்யோ லைலாக்களே... கொஞ்சம் இறங்கி வந்து, 'காதல் என்பது காலத்தை வென்றது' என்பதை இவளுக்குச் சொல்லுங்களேன்.
உன் பிறந்த நாளைப் பார்த்து
மற்ற நாட்கள்
புலம்பிக் கொண்டிருக்கின்றன...
பிறந்திருந்தால்
உன் பிறந்த நாளாய்ப்
பிறந்திருக்க வேண்டும் என்று.
ஊரிலே
நான்தான் நன்றாக
பம்பரம் விடுபவன்
ஆனால் நீயோ
என்னையே பம்பரமாக்கிவிடுகிறாய்.
நீ இல்லாத நேரத்திலும்
உன் இருக்கையில் அமர்ந்திருக்கிறது
உன் அழகு.
கோடை விடுமுறை வந்தால்
குளிர்ப் பிரதேசம் தேடி
ஓடுவதில்லை நான்.
ஆனால்
ஒவ்வொரு கோடை
விடுமுறையிலும்
என்னையே தேடி ஓடிவருகிறது
ஒரு குளிர் பிரதேசம்.
அதற்குப் பெயர்
அத்தை மகள்.
- தபு ஷங்கர்
'குளித்து சுத்தமாகதான் அடுப்பைப் பற்றவைக்க வேண்டும்' என்று உன் அம்மா சொல்லி அனுப்பியதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு... எழுந்தவுடன் குளித்தே ஆகவேண்டும் என்று ஏன் அடம்பிடிக்கிறாய் நீ.
ஒவ்வொரு நாளும் நீ தூங்கி எழும்போதெல்லாம்... நீ தூக்கக் கலக்கத்திலிருந்து மீண்டு வருகிற அந்த அழகான தருணங்கள்... பிறந்த குழந்தை தவழ்ந்து, எழுந்து, நடக்கின்ற பருவங்களாய் இருக்கிறதடி எனக்கு. நீ உடனே குளிக்கப் போய்விட்டால்... அந்த அழகு எல்லாம் தண்ணீரில் கரைந்து போய் விடாதா?
தூங்கி எழுந்த உன் முகத்தைச் சுற்றி 'இது புதிய முகமோ?' என்கிற ஆச்சர்யத்தோடு பறக்கும் உன் முடிகளின் அழகைப் பாரேன்... நீ குளித்து விட்டால் அந்த முடிகளின் சிறகுகள் எல்லாம் ஈரமாகி, பறக்க முடியாமல் தவிக்காதா?
குளித்து முடித்து ஈரம் அப்பிய உடையுடன் நீ இந்த வீட்டில் வளைய வருவது கொள்ளை அழகுதான் என்றாலும் அது வேறு அழகடி. அதற்க்காக இந்த இரவு அலங்கரித்து அனுப்பிய உன் அழகை ஒரு அரை மணி நேரமாவது நான் ரசிக்கவில்லை என்றால்... சொர்க்கத்தில் இருக்கும் லைலாக்களும் மஜ்னுக்களும், அனார்க்கலிகளும் சலீம்களும் என்னைத் திட்டுவார்களடி! 'அய்யோ... இவனுக்குக் காதலிக்கத் தெரியவில்லையே!' என்று தங்கள் தலைகளில் அடித்துக்கொண்டு கூடி வருந்துவார்களடி!
"போதும்... போதும். கசங்கிய இந்தச் சேலையை மாற்றிக்கொள்ளவாவது விடுங்களேன்" என்று திருவாய் மலர்ந்தாய்.
"அய்யோ... இது கசங்கலா? உன் சேலைக்கு இரவு போட்டு விட்ட இஸ்த்ரியடி!" என்றேன்.
"ஆ... எனக்கு மயக்கம் வருது' என்று சிணுங்கினாய்.
உன்னை மயக்க தினமும் இப்படி அரை மணி நேரம் போராட வேண்டி இருக்கிறது எனக்கு. ஆனால் நீயோ தூங்கி எழுந்து முறிக்கும் ஒரு அழகுச் சோம்பலில் என்னை மயக்கி விடுகிறாயே வெறும் அரை நொடியில்.
"இந்த மயக்கம் எல்லாம் எத்தனை நாளைக்கு. ஆசை அறுபது நாள். மோகம் முப்பது நாள்தானே!" என்றாய்.
அடிப்பாவி.. இது ஆசையா.. மோகமா.. அதையும் தாண்டி காதலடி! அய்யோ லைலாக்களே... கொஞ்சம் இறங்கி வந்து, 'காதல் என்பது காலத்தை வென்றது' என்பதை இவளுக்குச் சொல்லுங்களேன்.
உன் பிறந்த நாளைப் பார்த்து
மற்ற நாட்கள்
புலம்பிக் கொண்டிருக்கின்றன...
பிறந்திருந்தால்
உன் பிறந்த நாளாய்ப்
பிறந்திருக்க வேண்டும் என்று.
ஊரிலே
நான்தான் நன்றாக
பம்பரம் விடுபவன்
ஆனால் நீயோ
என்னையே பம்பரமாக்கிவிடுகிறாய்.
நீ இல்லாத நேரத்திலும்
உன் இருக்கையில் அமர்ந்திருக்கிறது
உன் அழகு.
கோடை விடுமுறை வந்தால்
குளிர்ப் பிரதேசம் தேடி
ஓடுவதில்லை நான்.
ஆனால்
ஒவ்வொரு கோடை
விடுமுறையிலும்
என்னையே தேடி ஓடிவருகிறது
ஒரு குளிர் பிரதேசம்.
அதற்குப் பெயர்
அத்தை மகள்.
- தபு ஷங்கர்
Subscribe to:
Posts (Atom)

