Thursday, April 14, 2011

தபு ஷங்கர் கவிதைகள்

அழகான பொருட்களெல்லாம்
உன்னை நினைவு படுத்துகின்றன.
உன்னை நினைவுபடுத்துகிறவை எல்லாமே
அழகாகத்தான் இருக்கின்றன.

"நான் எது கேட்டாலும் வெட்கத்தையே
தருகிறாயே...வெட்கத்தைக் கேட்டால்
என்ன தருவாய்?."

---
என்னை
உடைப்பதற்காகவே
என் எதிரில்
சோம்பல் முறிப்பவள் நீ
---

'ஒரு நிமிடத்தில்
உன்னைக் கடந்துபோகிற பெண்ணைப் பார்க்க
தினமும் ஒரு மணி நேரம் காத்திருக்கிறாயே' என்று
கேட்ட என் நண்பனிடம் சொன்னேன்...

'நீ கூடத்தான்
ஒரே ஒரு நாள் சம்பளம் வாங்குவதற்காக
ஒரு மாதம் முழுவதும் வேலை செய்கிறாய்!'
 ---
 
 

No comments:

Post a Comment

You may also like