Tuesday, July 12, 2011

இறைவன்!


குரங்குக்கும்
கோவில் கண்டோம் - தேங்காய்
குடிமிக்கும் தெய்வம் கண்டோம் - சொறி
சிறங்கு பயலையும் சாமி என்றால்
சீவதம் உய்வதெந்நாள்?

மொட்டையே அடித்தடித்து மண்டையில் மயிரு போச்சு
மொட்டையில் வெயிலடித்து மூளையும் கருகி போச்சு
பட்டியில் ஆடு போச்சு
பணங்காசு தானும் போச்சு
வட்டிக்கு பணங் கொடுத்தோன்
வாசலில் நின்ற போது
கட்டிய தாலியிலே
கயிறு தான் மிச்சமாச்சு.

கெட்டு நாம் போன பின்னும்
கீழென ஆன பின்னும்
இட்டிடும் கல்லை தொட்டு
இன்னுமா வணங்க வேணும்?
- துளசிதாசன்.

1 comment:

  1. A god opposite poem from a person who have the divine orineted name. very funny mr.thulasidasan.

    ReplyDelete

You may also like