Friday, July 8, 2011

இப்படியாய் யாவரும் !


முதல் சந்திப்பில்

வார்த்தையின் ஊடே.

ஊர் வரை நுழைந்து

சாதியின் பெயரை

நாசூக்காக கேட்டறிவதும்.

நடிகையின் புதிய அந்தரங்கத்தை

தேநீர் விலையில் பறிமாறிக் கொள்வதும்

அடங்க மறுத்திடும்

காமக் கடும்பசிக்கு

பார்வையின் ஊடே

கூடு பாய்ந்து பசியாறுவதும்

காதலின் புதிய கணக்கை

கடக்க நேரிடுபவர்களின்

மீது திணிப்பதும்

பொதுவான ஒரு வியாதி

இருக்கத்தான் செய்கிறது

எல்லாரிடத்திலும்.
-- . லட்சுமணன்.


No comments:

Post a Comment

You may also like