Thursday, October 20, 2011

தபு ஷங்கர் கவிதைகள்



*****

நீ
சாய்வதற்கென்றே
வைத்திருக்கும்
என் தோள்களில்
யார் யாரோ
தூங்கிச் சாய்கிறார்கள்
பயணத்தில்!

*****

உன் தைல விரல்களுக்கு
ஏங்குகின்ற
என் தலைவலிகள்

******

நீ எந்த உடையிலும்
கவிதையாகத்தான்
இருக்கிறாய்
சேலை கட்டியிருக்கும் போது தான்
தலைப்புடன் கூடிய
கவிதையாகிறாய்..

*******

உன் கையசைவிற்க்காகவே
எத்தனைமுறை
வேண்டுமானாலும்
உன்னிடம் இருந்து விடை பெறலாம்...

*******

-- தபு ஷங்கர்

 




No comments:

Post a Comment

You may also like