Thursday, July 19, 2012

அப்பா :)


4 வயதில்--"எங்கப்பா போல ஒரு ஆளைப் பார்க்கவே முடியாது."

6---"அவருக்கு எல்லா விஷயமும் அத்துபடி"

10---"தங்கமானவர்.ஆனால் பொசுக் பொசுக்கு கோபம் வந்திடும்.
மிட்டாய் தின்னதுக்காக என்னை அடிச்சிட்டாரு."

12---"நான் சின்னப்பிள்ளையா இருந்தபோது,
என்னை நல்லா கவனிச்சிக்கிட்டாரு

14--"அவருக்கு சீக்கிரம் திருப்தியே வராது,நாப்பது மார்க் எடுத்தால் அய்ம்பது
எடுக்கணும்பாரு.99மார்க் எடுத்தாகூட--ஒரு மார்க்கை ஏன் கோட்டை விட்டே'ம்பாரு'

16---என்னைச் சுத்தி என்ன நடக்கிதுங்கிரதை புரிஞ்சிக்கவே மாட்டேன் என்கிறாரு.
பழங்காலத்து மனுஷனாவே இருக்காரு."

18---"எடுத்தேன் கவிழ்த்தேன்னுதான் எல்லா நடவடிக்கையும்."

20---"அப்பப்பா,அந்த மனுஷனை புரிஞ்சுக்கவே முடியல.
அம்மா எப்படிதான் காலம் தள்ளறாங்களோ?"

25---"எது கேட்டாலிம் 'கிடையாது','இல்லை','கூடாது'ங்கிற பேச்சுதான்.
இவரெல்லாம் ஒரு மனுஷனா?"

30--என் பையனை சமாளிக்கிறது கஷ்டமா இருக்கு.
என்னை எங்கப்பா எப்படித்தான் சமாளிச்சாரோ?"

40--"என்னை எங்கப்பா எவ்வளவு ஒழுக்கத்தோட,
கட்டுப்பாட்டோட வளர்த்தார் தெரியுமா? அதனால்தான்,இந்தளவு நல்லா இருக்கேன்."

45--"எங்கப்பாவை நினைக்கும்போது ரெம்ப பெருமையா இருக்கு."

50--"ஒருத்தனை மேய்க்கிறதுக்கு எவ்வளவு சிரமப்படறேன்?நாங்க மூன்று பேரு.
ஒரு அண்ணன் மற்ற தம்பி அத்தனை பேரையும் கட்டுக்கோப்பா வளர்த்தார் எங்கப்பா.
அவர் கிரேட்."
55--"ஒவ்வொரு விஷயத்தையும் திட்டம் போட்டு முடிக்கிறதுல அவரை மிஞ்ச
ஆளே இல்லை."

60---"எங்கப்பா போல ஒரு ஆளை பார்க்கவே முடியாது."

(நான்கு வயதில் நாம் சொன்னது சரிதான் என்பதை உணர்வதற்குள்
56ஆண்டுகள் ஓடி விடுகின்றன).

-- மின்னஞ்சலிருந்து 

No comments:

Post a Comment

You may also like