Wednesday, June 8, 2011

வெட்கத்தை அடை காப்பவள் - காதலி அப்டேட்ஸ்

உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்று கேட்டால் எனக்கு சாக்லேட் பிடிக்கும், தனிமை பிடிக்கும், மழை பிடிக்கும் , என் குடும்பம் பிடிக்கும் , சாய்பாபா பிடிக்கும், இயற்கையை ரசிக்க பிடிக்கும் , எங்க வீட்டு மொட்ட மாடி பிடிக்கும், பக்கத்து வீட்ல இருக்கும் குட்டி குட்டி பசங்க பிடிக்கும்ன்னு நிறைய பிடிக்கும் சொன்னாயே தினமும் உனக்கு ஐஸ்கிரீம் சாக்லேட் வாங்கித்தர்றேனே என்னைப்பிடிக்காதா என்று கேட்டால் ''நீ தான் என்னைபிடிச்சிருக்கியேன்னு'' ஹி ஹின்னு நக்கலா சொல்றாப்பா...!!!

அன்னிக்கு ஒரு நாள் உன்னுடைய மீசை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்னாயே எங்கே மீசையைப்பற்றி ஒரு கவிதை சொல்லு பார்ப்போம்ன்னா, ''என் முகத்தாளில் அன்போவியம் வரையும் தூரிகைன்னு'' சொல்லிட்டா, நான் கேட்டேன் அய்யய்யோ அப்போ கருப்பா இருக்குற என் மீசையை கலராக்கிடுவியான்னு, அட லூசே இதெல்லாம் ஒரு மீசைன்னு சொல்லி கவிதை சொன்னா கிண்டல் பண்றியான்னு சொல்லி மீசைய பிடிச்சு இழுத்திட்டா, படு பாவி வலிக்குதுடி இதுக்கெல்லாம் வட்டியும் முதலுமா மீசைய வச்சே உனக்கு ஊசி போடறேன் இருன்னா வவ்வவ்வேன்னு வக்கனை காட்டறாங்க...!

வெட்கப்பட்டிருக்கியான்னு ஒரு நாள் கேட்டேங்க அவகிட்ட , வெட்கப்பட்டிருக்கேன் ஆனா ஆம்பிளைப்பசங்கள பார்த்து வெட்கப்பட்டதே இல்லைன்னா ஏன்னு கேட்டா இது வரைக்கும் அவ மனசுக்கு பிடிச்ச யாரையுமே பார்க்கலைன்னா, ''ஏன் வெட்கத்தையெல்லாம் அடை காத்து வெட்ககுஞ்சு பொறிக்கப்போறியா'' ன்னு கேட்டதும் ஆமான்னு சொல்லிட்டு விழுந்து விழுந்து சிரிக்கிறா அப்போதாங்க கவனிச்சேன் எப்போவும் வெளீர்ன்னு இருக்கிற அவ முகம் அன்னிக்கு சிகப்பாகிருந்திச்சு...! ஹைய்யா முதல் வெட்ககுஞ்சு பொறிச்சிடுச்சேன்னு மனசுக்குள்ளே சொல்லிக்கிட்டேனுங்க...!!!

ஒரு நாள் என் ரூமுக்கு என்னைப்பார்க்க வந்தவளை கொஞ்சம் இங்கேயே உட்கார்ந்திருன்னு நான் குளிச்சிட்டு வந்திடறேன்னு அவளை ஹால்ல விட்டுட்டு நான் பாத்ரூம் போயிட்டேனுங்க உள்ள போனதுக்கப்பறம் வெளில இருந்து அவ யார் கூடவோ பேசிட்டு இருந்தது கேட்டுச்சு என்ன பேசுறான்னு ஒட்டுக்கேட்டா ''என்ன திமிர் இருந்தா எனக்கு முன்னாடியே அவனுக்கு நீ கிஸ் குடுப்ப இந்தப்பக்கம் உன்னை இனி பார்த்தேன் பிஞ்சிம்ன்னு'' சொன்னது தெளிவா கேட்டுச்சு , ஹைய்யய்யோ நான் யாரையும் தொட்டு கூட பார்த்ததில்லையே இவ என்னடான்னா கிஸ்ஸடிச்சேன்னு சொல்றாளேன்னு பதறிப்போய் வெளில வந்து பார்த்தா வில்ஸ் பாக்கெட்டை எடுத்து அதுல இருக்குற சிகரெட்டெல்லாம் நச்சு நச்சுன்னு பிச்சு போட்ருக்கா...!!!

''அப்பாகிட்ட சம்மதம் வாங்கிட்டியா''ன்னு மெதுவாத்தாங்க கேட்டேன் ஹேய் லூசே அதுக்குள்ள என்ன நம்ம கல்யாணத்துக்கு அவசரம் இப்போன்னு கேட்டாள், அட லூசே நேத்து உனக்கு நல்ல கம்பெனியில வேலை கிடைச்சிருக்குன்னும் உன்னோட அப்பா அந்த வேலைக்கு போக விடமாட்டேங்கிறார் அப்படின்னு சொன்னியே ஞாபகம் இருக்கா? அந்த வேலைக்கு போகத்தான் அப்பாகிட்ட சம்மதம் வாங்கிட்டியான்னு கேட்டேன்.பின்ன உன்னையெல்லாம் எவன் கட்டிக்குவான் எனக்கு ராத்திரி கனவுல ஒருத்தி வருவான்னு சொல்லியிருக்கேனே அவளையே கட்டிக்குவேன்னதும், மகனே உனக்கு நிஜத்துல மட்டுமில்ல கனவுலயும் நான் மட்டும்தான் மனைவியா இருக்கணும்ன்னு மீறி யாராவது வந்த மாதிரி தெரிஞ்சதுன்னு சொல்லி ஓங்கி வயித்துல ஒரு குத்து விட்டுட்டாங்க ... !!  அய்யோ அம்மா கொலை பண்றா!!!

என்னடி இன்னிக்கு ரொம்ப லேட்டுன்னு கேட்டா வீட்ல நிறைய வேலை இன்னிக்கு துணி துவைச்சு அதை காயப்போட்டு மடிச்சு வச்சி, வீடு கிளீன் பண்ணி,குளிச்சிட்டு, சாமி கும்பிட்டு விளக்கேத்தி வச்சிட்டு வந்தேன் அதான் லேட்டாகிடுச்சுன்னு சொன்னா நான் சொன்னேன் உனக்குத்தான் வீட்டு வேலையெல்லாம் தெரியுதே யாரையாவது இளிச்ச வாயன சீக்கிரம் மேரேஜ் பண்ணிக்கலாம்லன்னு , அவ சொல்றா எனக்கு இனிமேல் உன்னை மாதிரி ஒரு நல்ல இளிச்சவாயன் கிடைக்கமாட்டான்னு ... !!!

ஒகே ஜூட்ட் ...

-- ப்ரியமுடன் வசந்த்

1 comment:

  1. Azhagu vasanth. A short but very nice read. Thanks for sharing.

    ReplyDelete

You may also like