Sunday, December 19, 2010

என்றென்றும் காதல்

பேருந்துப் பயணங்களில்
இருக்கை கிடைத்து
அருகருகே
அமர்ந்துவிட்டால் போதும்
எப்படி வருமோ தூக்கம்
தோள் சாய்ந்து தூங்குவாய்
இறங்கும்போதுதான்
துயில் எழுவாய்
நின்று பயணிக்கும்போது,
தனித்தனியே அமர்ந்து
பயணிக்கும்போது
வராத தூக்கம்
அருகருகே அமர்ந்தால் மட்டுமென்ன?
எனக்குத் தெரியாதா?
நீ
தூங்குவதற்காக தோள்சாய்வதில்லை
தோளில் சாயத்தான் தூங்குகிறாய்.

-- பொன் சுதா

 

No comments:

Post a Comment

You may also like