Tuesday, December 28, 2010

காதல்னா என்ன?

பேச்சினூடே
சாதாரணமாய் உனைக் கேட்டேன்..
காதல்னா என்ன?
கிண்டலாகச் சிரித்துவிட்டு
உன் தலைஎன்றாய்.
அதில் தான் எவ்வளவு உண்மை?
நான்
சுவாசிப்பது,
சிந்திப்பது,
பார்ப்பது,
கேட்பது,
அழுவது,
சிரிப்பது,
பேசுவது,
உணவருந்துவது என
சகலமும்
என் தலையால்..
அதாவது என் காதலால்..
சரியாகத்தான் சொல்லியிருக்கிறாய்..
உனக்கு கிறுக்கு தான் பிடிச்சிருக்கு
என்றாய் நகைத்து.
ஆம் அதுவம் தலையில் தான்..
அதாவது என் காதலில்..
இதயம் மட்டும் தலையிலன்றி
இடம்பெயரக் காரணம் என்னவோ?
--

No comments:

Post a Comment

You may also like